ஞாயிறு, டிசம்பர் 29, 2013

உண்மையைத் தெளிவுபடுத்த யாருமே இல்லையா?


மனித வாழ்வில்  நீரும், நெருப்பும் இன்றியமையாதவை. இவை நல்ல பல காரி யங்களுக்குப் பயன்படும் அதே தரு ணத்தில் அந்த மனித குலத்துக்கே பேராபத்துக்களையும் விளைவித்து விடுகின்றன. இந்த ஆபத்துக்களை நாம் தேடிச் செல்கிறோமா அவை நம் மைத் தேடி வருகின்றனவோ இரண் டுக்குமே பொறுப்பாளி மனிதனே. தண்ணீராலும் நெருப்பாலும் ஆகிப் போனவற்றைவிட அழிந்துபோனவையே அதிகம். இந்தப் பட்டறிதலைப் புரிந்து கொள்ளாது நாம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

வாழ்வைக்குடிக்கும் மது



நாகரீகப் பழக்கங்களில் ஒன்றாக இன்று மதுப்பாவனை முன்னிலை பெறுகிறது. நுகர் இன்பங்களுக்காக ஆரம்பிக்கும் இந்த குடித்தல் ஒரு வீட்டு முற்றத்தில் இருந்து சமுதாயம்வரை சீர்கெட்டுச் செல்லும் அளவுக்கு மாறியிருக்கிறது. இளவயதினர் நாகரீக மோகத்தின் உந்துதல் காரணமாக தீய பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். அதற்கு அவர்க ளால் இயன்றளவு சமூக அந்தஸ்து வழங்கி மற்றவர்கள் இடத்தில் இருந்து தம்மை நாகரீகப்படுத்திக் கொள்கின்றனர். 

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

அடித்து அணைத்தல்


இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியாக இருக்கிறது. போருக்குப் பின்னரான ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் இலங்கைக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கின்றது. மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், கெடுபிடிகள், இனப்படுகொலைகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட போர் முறைகள் குறித்து இந்த அழுத்தங்கள் எழுகின்றன.

புதன், டிசம்பர் 04, 2013

கண்துடைக்கும் இந்தியா


ஈழத்தமிழர்விடயத்தில் அயல்நாடு என்ற வகையில் இந்தியா காலத்துக்குக்காலம் தவறையே செய்துவந்திருக்கிறது. அதுமட்டு மல்லாமல் தவறுக்கான காரணங்களையும் கூறி ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதிலும் குறியாகவே இருந்துவருகிறது.
இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் இனி எந்த நற்காரியங்களும் இடம் பெறப்போவதில்லை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுதான்.

காற்றோடு பறந்த கதைகள்


இந்த வருடத்தின் கார்த்திகை இறுதிநாள்கள் சற்று அமைதியாகவும் அற்புத மாகவும் கடந்திருக்கின்றன.வடபகுதியில் ஏதோ செய்யப்போகிறார்கள் அடக்கி ஒடுக்கவேண்டும் என்று  விசேடமாகப் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளும் வீணாகிப்போயுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு சம்பவங்களைத்தவிர மேலதிக பிரச்சினைகள் எவையும் உற்பத்தியாகவில்லை. ஆனால் உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் நினைவேந் தல்கள் நடந்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது. கடந்த வருடத்திலும் பார்க்க இம் முறை மிகவும் உணர்வுபூர்வமாகவே மக்கள் தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

வியாழன், நவம்பர் 28, 2013

கனவு மெய்ப்பட

விழிநீர் சொரிந்து
வளி(ழி) நெடுக்கும்
விளக்கேற்றினோம்

சப்பாத்துகால்களால்
ஏறிமிதித்தனர்
கடந்துபோனவருடத்தில்

திங்கள், நவம்பர் 25, 2013

சுடர் ஒளிரும்


பச்சை மிருகங்களின்
ஆக்கிரமிப்புக்கள் வீதிகளில்
பயந்து முன்னேறுகின்றன
சனங்களின் வாகனங்கள்

சொச்ச இடமெலாம்
மிச்சம் இன்றி தேடும் பகை
கொச்சைப்படுத்தவென்று
கச்சை கட்டிநிற்கிறது

செவ்வாய், நவம்பர் 19, 2013

படுவீர் துயரம்


நாங்கள் வளர்த்த கிளிப்பிள்ளை -அவள்
பெண்புலிப் பிள்ளைதான்
சுடு கலன் ஏந்தா  போராளி!

பேனா முனை எடுத்து -அவள்
ஆனான பிரச்சினைகள்
அத்தனையும் பேசியவள்

காந்தள் பூ



கார்திகை உருண்டு மறைகையில்
எங்சியிருக்கும் இறுதி நாட்கள்
எங்கள் மறவர்களுக்கானவை!

இடித்தழிக்கப்பட்ட கல்லறை -
பயிர்கள் மெல்ல முளையூன்றி
சிவப்பு மஞ்சளாய் ஒளிர்விடும்!

ஞாயிறு, நவம்பர் 17, 2013

உள்ளே போர் வெளியே படம்


வட மாகாண சபை  மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது.  தவறுகள், தடு மாற்றங்கள், பயம், வெட்கம்,  என்று ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுப் போல இந்த ஆரம்பம் தெரிகிறது. 
மேடைகளில் ஆவேசப் பேச்சுக்களும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்ச்சிக் கருத்துக்களும் கொட்டி முழங்க செப்ரெம்பர் மாதமே வடக்கில்  தமிழ் அரசு முழு அதிகாரங் களுடன்  கொடி கட்டிப்பறக்க போவதாய்தென்பட்டது.

ஆனாலும்  தமிழ் மக்கள் இவற்றுக்காக வாக்களிக்கவில்லை. ஏனென்றால் காலம் காலமாக  கண்டுவந்த அரசியலே இன்றும் நிகழ்கிறது என்று மக்களுக்கு நன்கு தெரியும். ஆகையால்  அவர்கள்  உணர்ச்சி அரசியலுக்கு அப் பால்  தமது   நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே முன்வந்தனர். 

தடுப்பு மிருகங்கள்



அவன் அழுகிறான்
எங்கள் கால்கள் நனைந்தன
அயலில் சிரித்துக்கொண்டு - சிலர்
அழுதனர் தமது அநியாயத்தை எண்ணி

புதன், நவம்பர் 13, 2013

விடுதலைக்காக துயிலுரிக்கப்பட்ட இசைப்பிரியா

சுடர்ஒளி வார சஞ்சிகையில் சின்னவன் எழுதிய பதிவை அவரது அனுமதியுடன் இங்கே இடுகை செய்துள்ளேன்.

கணீர் என்ற குரல்.இப்போதும் காது களைத் துளையிட்டுச் செல்கிறது.அவளது அழகுத் தோற்றமும்,மெல்லிய உடலும், அஞ்சாத பார்வையும்,ஆளுமையும் ஈழத்துப் புதுமைப்பெண்ணாய் அவளை தோற்று வித்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் பரிணமிப்புகள் குறித்து இப்போது விரும்பத்தகாத பரப்புரைகளே மேலோங்கி யிருக்கின்றன. விடுதைலைப் போராட்டத்துடன் ஒன்றித்து இருந்தவர்களில் பலர் இன்று அரசுப்பக்கம் தாவி தங்கள் பிழைப் புக்காக வரலாற்றைப் புரட்ட முற்படுகின்றனர். இப்படியாகத் தமிழினத்துக்கு வந்த சாபக் கேடு, இனத்தின் இருப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கும் நேரத்தில் புதிய அதிர்ச்சி இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதே.

கழிப்பறையைக் கழுவும் கைகள்

இந்த பதிவு யாரையும் தனிப்பட்டவகையில் புண்படுத்துவதற்கானதல்ல.நிலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில்(அச்சுறுத்தல்,நெருக்கடி காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும்) புலத்தில் தொழில்தேடி இன்னல்படும் எம்மவர்பற்றிய சிறு பதிவே.
மூன்றாம் உலகநாடுகள் என்று இன்று எந்த நாடுகளும் இல்லை.அனைத்துமே ஏதோ ஒருவகையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே அவற்றை மூன்றாம் உலக நாடுகள் என்று குறிப்பிட முடியாது என்று அபிவிருத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாவனையிலும் இன்று மூன்றாம் உலகநாடுகள் என்று பாவிக்கப்படுவதும் இல்லை என்று சொல்லலாம்.

செவ்வாய், நவம்பர் 12, 2013

வடக்கு பயிரில் களை களைதல்

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு அப்பால் வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு ஆரம்பித்து தமிழர் வாழ்வுக்கான தோற்றுவாயை உருவாக்கியிருக்கிறது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி கூட்டமைப்பு இந்த சாதனை யைப்படைத்திருக்கிறது. மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.
இதுவரை காலமும் பொம்மையாக இருந்த வடக்கு மாகாண நிர்வாகம் புதிய உத்வேகம் எடுத்து பயிர்போல் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தானாகவும்,தட்டுத் தடுமாறியும் முளைத்துக்கொண்ட களைகள் களையப்பட்டு பயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும்.

ஞாயிறு, நவம்பர் 10, 2013

மர்மங்கள் சூழ்ந்த விடுமுறை

வரலாறு தன்கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் காலத் துக்காலம் மாற்றங்களும் எதிர்விளைவுகளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. தமிழினத்துக்கு இந்த வரலாற்று மாற்றம் எதிர்விளைவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
நினைப்பது ஏதோ நடப்பது ஏதோ என்பது போல சில ஊடறுப்புகள், திட்டமிட்ட செயற்பாடுகள் தமிழினத்தின் வாழ்வியலையும் இருப்பையும் கேள்விக் குறியின் பக்கம் இழுத்துச்செல்கின்றன.

ஞாயிறு, நவம்பர் 03, 2013

சிங்களத்தில் பேசுங்கோ..


போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவ ரைக்கும் பயங்கரவாதம், பிரிவினை என்று பேசப்பட்ட விடயங் கள் இல்லையயன்றும் புதிதாக ஜன நாயக நாடொன்று பரிணமித்து இருப் பதாகவும் இலங்கை அரசு சொல் கிறது. ஜனநாயக நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகள், அடிப்படைத் தகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை இந்த தராசில் எந்தப் பக்கத்தில் வைப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு  மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.

செவ்வாய், அக்டோபர் 29, 2013

உயிர் பறிப்புக்கு யார் காரணம்?

சதீஸ்குமாரின் எதிர்கால கனவு தட்டா தெருச்சந்தியில் கலைந்துபோயிருக்கிறது. அந்த நிமிடம் வரை எத்தனையோ ஆசைகளைக் கொண்டிருந்த அவனது பயணத்தில் இணை பிரிந்து போயிருக்கிறது. திருமணம் முடித்து ஏழு மாதங்களேயான சதீஸ்குமார் கீர்த்தனா மீது வைத்திருந்த பாசம் தட்டாதெருவில் அவள் குற்று யிராய் கிடக்கையில் கொட்டித் தீர்த்தது. பார்ப்பவர்கள் மனதை பிசைந்த அந்தக் கொடூர விபத்துக்கு யார் காரணம்? யார் காரணமாக இருந்தால் என்ன போன உயிர் திரும்பிவந்து விடுமா?
ஆசிரியரான சதீஸ்குமாரும் மனைவியும்

திங்கள், அக்டோபர் 28, 2013

தந்தி அறுந்த வீணை


நடைபெற்றுமுடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பல மறந்துபோன கதைகளைப் புதிப்பித்திருக்கின்றன. தாம் எங்கு இருக் கிறோம். எதைச் செய்கிறோம் என்ற சிந்திப் பையும் தூண்டியிருக்கின்றது.
கண்கெட்ட பின் சிலர் சூரிய நமஸ்காரத் துக்குத் தயாராகியுள்ளனர்.
அஸ்த்தமனத்தின்போது விடியலுக்காகவும் விடியலின்போது அஸ்த்தமனத்துக்காகவும் அழுத சிலரது புருவங்கள் மக்களால் திறக்கப் பட்டுள்ளன.

நிறுத்து: உயிராபத்து!


அபிவிருத்தி பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் கிளிநொச்சிக்கு ரயில் வந்திருக்கிறது. இது பொதுப்போக்குவரத்தின் திருப்புமுனைதான். அவசரக்காரர்களின் தேவைகருதி அரைகுறை பணிகளுடன் வரவழைக்கப்பட்டிருக்கும் ரயில் சேவை மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
சில இடங்களில் சமிஞ்ஞைகள் இருந்தாலும் பலஇடங்களில் அவை அமைக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து தவிர்க்கமுடியாததாகியுள்ளது.

கணக்குக்காட்டல்


அபிவிருத்திப் புள்ளிவிவரங்களுடன் வந்த அரச அதிபர்கள்

"நான் வந்திருப்பதன்நோக்கம் ஐ.நாவின் கொள்கைகள் எல்லா மட்டங்களிலும்  நடை முறையில் உள்ளதா என்பது குறித்து ஆராய் வதற்கு, இலங்கையின் வடக்கு கிழக்கில்  வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கும் மனித உரிமைகள் குறித்து  தரவு சேகரிப்பதற்கு' பொது நூலகத்தில் நடை பெற்ற நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய  நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.அவர் இப்படி ஒரு கருத்தை கூறுவதற்கு காரணம் எங்கள் அதிகாரிகள் தான்.

சாப்பிட்டுப் போங்கோ.....!


"நாளைக்கு மீற்றிங்' என்ற தகவலோடு இன்று தான் பல அலுவலகங்களுக்கு கடிதம் வந்து சேர்ந்தது. முக்கிய கலந்துரையாடல் இருப்பதால் சம் பந்தப்பட்ட அனைவரையும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் அன்று அந்தக் கடிதத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது.

குருக்கள் செய்தால்....



""ஆலயம் தொழுவது சாலமும் நன்று... ஆனால் நல்லூரானை அரசியல் வாதிகள் தொழுவது நன்றல்ல.''
பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கருத் தில் உடன்பாடு இருக்காது. ஆனால் சில வேளை களில் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்.
எங்கள் நாட்டு அரசியல் திட்டங்களும் அர சியல் விண்ணர்களும் இனிவரும் நாட்களில் இதை வலியுறுத்தும்போது நாம் அதை எற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.

வருகிறாள் தேர்தல் தேவி


--
யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ் மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு d ஓர்
உறவுப் பாலம் நீ d சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்.....

--

சில்லறைச் சண்டை


அவரது முகத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது.வாய் திறந்து கேட்பதற்கு வெட்கம்.போய்ச் சேரும்வரை மனசுக்குள் சில்லறைச்சண்டை. கடைசிவரை பிரச்சினை தீரவில்லை. யாழ்ப்பாணம் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்ட பஸ்.கிளி நொச்சிக்கு செல்கிறது. நானும் கிளிநொச்சி செல்லவேண்டும். 93 ரூபா ரிக்கற். நூறு ரூபா கொடுத்தேன். எனக்கு அருகில் இருந்தவரும் அப்படித்தான். ஆனால் அவருக்கு பத்து ரூபா திருப்பிக் கொடுக்கப்பட்டது.

தமிழருக்கு இலுப்பம்பூ சர்க்கரையா?



தமிழ் போசும் மக்கள் செறிந்துவாழும் வடக்கில் முதல் முறையாக மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இது உலகறிந்த உண்மை. ஆனால் தாம் வழங்கிய ஆணையை கூட்டமைப்பு சரியாகப் பயன் படுத்துகிறதா என்பதில் வாக்களித்த மக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.இதற்கு முழுமுதற் காரணமும் கூட்டமைப்பு கட்சிகளே.

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

இன அழிப்பா?கட்டாய கருகலைப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் கரையோரக் கிராமங்கள் அவை. கிளிநொச்சிக்கு மேற் காக அந்த மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்றன. பெரும் பாலும் கடற்றொழிலை பிரதான மாகக் கொண்டு, மற்றைய தொழில் களையும் செய்யக் கூடிய குடும்பங் கள் இங்கு வசிக்கின்றன. 
கூடுதலாக இந்தக் கிராமங்களி லுள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவையாக அடை யாளம் காணப்பட்டுள்ளன.

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

வேண்டாம் இருதலைக் கொள்ளிகள்



தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்த முடிவுகளை ஒன்றிணைந்து எடுத்திருக்கின் றனர் என்பது வரலாற்று மாற்றம். சமூகத்தில் நடி பங்கேற்றிருக்கும் மாய மனிதர்களிடையே தமக் கான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரி யான பாதையை மக்கள் தெரிவுசெய்வதென்பது மிகக் கடினமானது. இந்தக் கடினமான பாதையில் நடிகர் களது பாத்திரங்களை எளிதில் விளங்கிக் கொள் வது அசாதாரணம்தான்.இப்படியான சிந்தனையை மழுங்கடிக்கும் காலத்துக்குள் ளேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

திங்கள், அக்டோபர் 14, 2013

இன்னும் ஏன் வஞ்சிக்கிறாய் கடல் தாயே!


நள்ளிரவு 12 மணி இருள் சூழ்ந்திருந்த கடற்கரை பேர் இரைச்சலோடு பொங்கி எழுந்தது. கடற்கரை கிரா மங்கள் அந்த நடு நசியில் உறங்கியிருந்ததால் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தரு ணம் பார்த்து கடல் சீற்றம் கொண்டு களவாடிச் சென் றிருக்கிறது. பல மீனவக் குடும்பங்களின் சொத்துக் கள் நாசம் செய்யப்பட்டுள்ளன இந்த வஞ்சிப்பில்.

வியாழன், பிப்ரவரி 21, 2013

உண்மையின் மரணம்



எல்லாம் முடிந்துவிட்டபின்
நாங்கள் அழுகின்றோம்
யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை

ஒட்டுமொத்தமாய்
இழந்துவிட்ட உணர்வுகள்
மனங்களில் இருள் மண்டிகிடக்கையில்
ஆர்பரிப்பது நாங்களே

புதன், பிப்ரவரி 13, 2013

புலிகளின் மீள் எழுச்சி எந்த நாட்டில்? ஐயுறும் அமெரிக்கா

""விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் இலங்கையில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. இலங்கையில் இப்போதைக்கு புலிகள் மீண்டெழுவதற்கு வாய்ப்பில்லை எனினும் அவர்களது சர்வதேச நடவடிக்கைகள் இன்னமும் வளர்ச்சி கண்டுள்ளது''.

நெல்லியடியில் புலிக்கொடி


 புலனாய்வாளரின் செயலால்
உள்ளூர மகிழ்ந்தனர் மக்கள்

விடுதலைப்புலிகள் கடந்த 2009 மே மாதம் 19 இல் தோற் கடிக்கப்பட்டுவிட்டனர். இனி விடுதலைப்புலிகளால் நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக் கள் அமைதியாகவும், நிம்மதியா கவும் வாழமுடியும்'' என்று அறி வித்தது இலங்கை அரசு.

தொலைந்துபோனோர் பற்றி கவலையுறும் ஐ.சி.ஆர்.சி.

வடக்குகிழக்கில் 1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் 15,780 பேர் காணா மல் போயுள்ளனர். இவர்களில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள்.




மனிதாபிமான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்குப் புறக்கணிக் கப்பட்டிருந்தது அல்லது வரையறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதுடன் தீராத பிரச்சினையாக இன்றுவரை அவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வலி தெரியா முட்கள்...


தொலைபேசிகள் அடிக்கடி பேசிக்கொண்டன "உனக்கு எங்கே வந்திருக்கு' இதுதான் அந்த உரையாடலின் முதலாவது கேள்வி. இப்படியான அழைப் புக்கள் பல எனக்கும் வந்தன. கேள்வி "உனக்கு எங்கே வந்திருக்கிறது' எனது பதில் "எனக்கு எங்கேயும் வரவில்லை'..... கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டேசென்றன. பலருடன் உரையாடல் அலுத்தே போய் விட்டது. பேஸ்புக்கிலும் ஒன் லைனில் இருப்பவர்களும் இதே கேள்வியைத்தான் பகிர முனைந்தார்கள் இதனால் பல தடவைகள் ஓப்லைனிலேயே இருந்து விட்டேன்.

பட்டங்கள் பலவிதம் நாமும் ஒருவிதம்


கைக்கெட்டியது  வாய்க்கு எட்ட வில்லை என்ற நிலையோடு பல ஏமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேசெல்கின்றன. ஆழம் தெரியாமல் காலை விட்டதைப் போல அரசும் எல்லா நிர்வாகச் செயற்பாடுகளிலும் "கும்பல் லில் கோவிந்தா' என்ற கணக் காக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.