திங்கள், அக்டோபர் 28, 2013

கணக்குக்காட்டல்


அபிவிருத்திப் புள்ளிவிவரங்களுடன் வந்த அரச அதிபர்கள்

"நான் வந்திருப்பதன்நோக்கம் ஐ.நாவின் கொள்கைகள் எல்லா மட்டங்களிலும்  நடை முறையில் உள்ளதா என்பது குறித்து ஆராய் வதற்கு, இலங்கையின் வடக்கு கிழக்கில்  வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கும் மனித உரிமைகள் குறித்து  தரவு சேகரிப்பதற்கு' பொது நூலகத்தில் நடை பெற்ற நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய  நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.அவர் இப்படி ஒரு கருத்தை கூறுவதற்கு காரணம் எங்கள் அதிகாரிகள் தான்.

பொருளாதார முன்னேற்ற அறிக்கை

நவநீதம்பிள்ளையை உலக பொருளாதார, அபிவிருத்தி ஆய்வாளராக நினைத்து ஏகப் பட்ட  பைல்களுடன் வந்திறங்கிய வடமா காண அரச அதிகாரிகள்,போருக்குப்பின்னர் கண்டுள்ள  அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து மல்ரி மீடியா புரஜெக்ரர் மூலம் "பிரசன்ரேசன்'  நடத்தினர். எல்லாவற்றையும் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தார் நவி.
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய தீர்மானத்தின் பிரகாரம்  இலங்கையில் மனிதஉரிமைகள் விட யத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து  ஆராயும் பொருட்டு ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவர் தனது நேரடி அவதானிப் புக்காக வடபகுதியை தேர்ந்தெடுத்தார்.  குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பகுதியை அவதானிப்பது அவரது நோக்கமாக இருந்தது.
கிட்டத்தட்ட போர் இடம்பெற்ற இடத்தை நவிப்பிள்ளை பார்வையிட்டாரா என்பது  சந்தேகமே. ஏனென்றால் உண்மையில் போர் நடைபெற்ற இடங்கள் விசேடமாக  உருமறைப் புச்செய்யப்பட்டுவிட்டன நவி வருகைக்கு முன் னரே. அதனால் அவரை  ஆச்சரியப்படுத்து மளவுக்கு ஒன்றும் இருக்கவில்லை. பதிலாக அரச அதிகாரிகள்  நடந்துகொண்ட விதமே அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
வடக்கு ஆளுநர்,செயலர் உட்பட ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த அரச அதிபர்களும்  வடக்கில் நடைபெற்ற, நடைபெறும் அபி விருத்தி வேலைகளை விளக்கினர்.
வடக்கின் வசந்தம், மஹிந்தோதைய அபி விருத்திகள் குறித்து ஜனாதிபதி, அமைச்சர் களது  வர்ணப்படங்களை பின்னணியாகக் கொண்ட "சிலைற்றுகள்' விரிந்து கொண்டி ருந்தன.
"ஓ! அப்படியா?' என்று பார்த்துக்கொண் டிருந்தார் நவி.
ஆர்வத்தின் மிகுதி ஒவ்வொரு அரச அதிகாரிகளது முகத்திலும் தெரிந்தது. அவர் கள் பார்வையில் நவிப்பிள்ளை ஒரு பொரு ளாதார முன்னனேற்ற ஆய்வாளராக இருந் திருந்தால் எவ்வளவு பயனுள்ளதாக இருந் திருக்கும்? எதுவோ எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் இதுதான்.விட்டுவிடாமல் விளாசுவோம் என்று எல்லா அபிவிருத்தி வேலைகளையும் பட்டியலிட்டனர் அவர்கள்.
ஒரு அதிகாரிகூட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து வாய் திறக்கவில்லை.

உரிமை வேறு அபிவிருத்தி வேறு

பொதுவான உலக நடைமுறைகளின் கீழ் ஒருநாட்டில் வாழும் மக்கள் சட்டரீதியாக வும் பண்பாட்டு, கலாசார ரீதியாகவும் பெற்றுக்கொள்ளும் அம்சங்களை உரிமை களாக வகைப்படுத்தலாம். இவை உலக வரன்முறைக்கமைய மக்களுக்கு வழங்கப்பட வேண்டியவை.
உரிமைகள் குறித்த மிகப் பிந்திய கருத் துருக்கள்  சமத்துவ நோக்கம் கொண்டவை. அதாவது, எல்லோருக்கும் சம உரிமை என் பதாகும். உரிமைகள் தொடர்பாக தற்காலத் தில் இரண்டு முக்கியமான கருத்துக்கள் நிலவுகின்றன. ஒன்று, இயல்புரிமை.இது, ஒரு நாடு,ஒரு இனம்,ஒரு குழுவுக்கு இயற்கையாக அமைந்த உரிமையைக் குறிக்கிறது.இதில் எந்த மனித சக்தியும், முறையாக மாற்றம் செய்ய முடியாது. இரண்டாவது, சட்ட உரிமை.
இது, உரிமை என்பது சமுதாயத்தால் ஆக் கப்படுவதும், அரசால் நடை முறைப்படுத்தப் படுவதும், மாற்றங்களுக்கு உட்படக்கூடியது மான மனித உருவாக்கம்.
அபிவிருத்தி என்பது இதிலிருந்து மாறுபடு கிறது. அதாவது ஒருநாட்டின் சமூக,பொருளாதார நிலைகளில் படிப்படியாக ஏற்படுத் தப்படும் வளம்மிக்க மாற்றமே அபிவிருத்தி எனப்படுகிறது.
மனித உரிமைகள் அபிவிருத்திக்குள் உள்ள டக்கப்படகூடியவை என்ற அடிப்படை நிலவி வந்தாலும் எல்லா மட்டங்களிலும் இவை பின்பற்றப்படாமையே முரண்பாட்டுக்கு கார ணமாகிறது.
இலங்கையில் தற்போது பெரும்பாலான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முரண்பாட்டு டன் கடியவையாகக் காணப்படுவதே பிரச் சினையாகும். தேசிய கொள்கைகளுக்கு உட் பட்ட அபிவிருத்தி திட்டங்களால் இனம் சார்ந்த, சமூகம்சார்ந்த உரிமைகள் மதிக்கப் படாத நிலை தோற்றுவிக்கப்படுகிறது.
இதுவே ஆரம்பம் தொட்டு இன்றுவரையான முரண்பாட்டு தோற்றுவாய்களாகக்காணப் படுகின்றன.
இந்த அடிப்படையில் நவிப்பிள்ளையிடமும் எமது அதிகாரிகள் முரண்பாட்டு தோற்று வாய்களைக் காண்பித்து, இங்கு மக்களுக்கு பிரச்சினை கிடையாது என்று விளம்பியுள்ளனர்.
நவிப்பிள்ளையின் பயணத்தின் நோக்கம் அது அல்ல என்று அரச அதிகாரிகளுக்கு நன்கு தெரி யும். ஆனால் விரும்பியோ விரும்பாமலோ தத் தமது நியாயப்பாடுகளை தெளிவுபடுத்த வேண் டியது அதிகாரிகளது கடமையாக்கப்பட்டி ருந்தது. அபிவிருத்தி குறித்த முன்னேற்ற அறிக்கை மூலமாவது சில சம்பவங்களை மூடி மறைக்கவோ அல்லது திசை திருப்பி விடவோ முடியும் என்பதே அரசின் நோக்கம். இதற் காகவே அரச அதிபர்கள் அபிவிருத்தியைப்பட் டியலிட பணிக்கப்பட்டனர்.
எது எப்படியோ நவிப்பிள்ளை உண்மை நிலையை தெளிவாக அவதானிப்பது போலவே அவரது அனைத்து செயற்பாடுகளும் இருந்தது என்பதை அவதானிக்கமுடிந்தது. அவரது அவதா னிப்புக்களும் நடவடிக்கைகளும் அடுத்த ஐ.நா. மனிதஉரிமைகள் கூட்டத்தில் தெரியவரும்.

நன்றி சுடர்ஒளி 04-10.09.2013

Post Comment

கருத்துகள் இல்லை: