இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியாக இருக்கிறது. போருக்குப் பின்னரான ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் இலங்கைக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கின்றது. மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், கெடுபிடிகள், இனப்படுகொலைகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட போர் முறைகள் குறித்து இந்த அழுத்தங்கள் எழுகின்றன.
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, டிசம்பர் 15, 2013
ஞாயிறு, நவம்பர் 17, 2013
உள்ளே போர் வெளியே படம்
வட மாகாண சபை மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. தவறுகள், தடு மாற்றங்கள், பயம், வெட்கம், என்று ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுப் போல இந்த ஆரம்பம் தெரிகிறது.
மேடைகளில் ஆவேசப் பேச்சுக்களும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்ச்சிக் கருத்துக்களும் கொட்டி முழங்க செப்ரெம்பர் மாதமே வடக்கில் தமிழ் அரசு முழு அதிகாரங் களுடன் கொடி கட்டிப்பறக்க போவதாய்தென்பட்டது.
ஆனாலும் தமிழ் மக்கள் இவற்றுக்காக வாக்களிக்கவில்லை. ஏனென்றால் காலம் காலமாக கண்டுவந்த அரசியலே இன்றும் நிகழ்கிறது என்று மக்களுக்கு நன்கு தெரியும். ஆகையால் அவர்கள் உணர்ச்சி அரசியலுக்கு அப் பால் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே முன்வந்தனர்.
புதன், நவம்பர் 13, 2013
விடுதலைக்காக துயிலுரிக்கப்பட்ட இசைப்பிரியா
சுடர்ஒளி வார சஞ்சிகையில் சின்னவன் எழுதிய பதிவை அவரது அனுமதியுடன் இங்கே இடுகை செய்துள்ளேன்.
கணீர் என்ற குரல்.இப்போதும் காது களைத் துளையிட்டுச் செல்கிறது.அவளது அழகுத் தோற்றமும்,மெல்லிய உடலும், அஞ்சாத பார்வையும்,ஆளுமையும் ஈழத்துப் புதுமைப்பெண்ணாய் அவளை தோற்று வித்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் பரிணமிப்புகள் குறித்து இப்போது விரும்பத்தகாத பரப்புரைகளே மேலோங்கி யிருக்கின்றன. விடுதைலைப் போராட்டத்துடன் ஒன்றித்து இருந்தவர்களில் பலர் இன்று அரசுப்பக்கம் தாவி தங்கள் பிழைப் புக்காக வரலாற்றைப் புரட்ட முற்படுகின்றனர். இப்படியாகத் தமிழினத்துக்கு வந்த சாபக் கேடு, இனத்தின் இருப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கும் நேரத்தில் புதிய அதிர்ச்சி இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதே.
செவ்வாய், நவம்பர் 12, 2013
வடக்கு பயிரில் களை களைதல்
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு அப்பால் வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு ஆரம்பித்து தமிழர் வாழ்வுக்கான தோற்றுவாயை உருவாக்கியிருக்கிறது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி கூட்டமைப்பு இந்த சாதனை யைப்படைத்திருக்கிறது. மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.
இதுவரை காலமும் பொம்மையாக இருந்த வடக்கு மாகாண நிர்வாகம் புதிய உத்வேகம் எடுத்து பயிர்போல் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தானாகவும்,தட்டுத் தடுமாறியும் முளைத்துக்கொண்ட களைகள் களையப்பட்டு பயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும்.
ஞாயிறு, நவம்பர் 03, 2013
சிங்களத்தில் பேசுங்கோ..
போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவ ரைக்கும் பயங்கரவாதம், பிரிவினை என்று பேசப்பட்ட விடயங் கள் இல்லையயன்றும் புதிதாக ஜன நாயக நாடொன்று பரிணமித்து இருப் பதாகவும் இலங்கை அரசு சொல் கிறது. ஜனநாயக நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகள், அடிப்படைத் தகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை இந்த தராசில் எந்தப் பக்கத்தில் வைப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.
திங்கள், அக்டோபர் 28, 2013
தந்தி அறுந்த வீணை
நடைபெற்றுமுடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பல மறந்துபோன கதைகளைப் புதிப்பித்திருக்கின்றன. தாம் எங்கு இருக் கிறோம். எதைச் செய்கிறோம் என்ற சிந்திப் பையும் தூண்டியிருக்கின்றது.
கண்கெட்ட பின் சிலர் சூரிய நமஸ்காரத் துக்குத் தயாராகியுள்ளனர்.
அஸ்த்தமனத்தின்போது விடியலுக்காகவும் விடியலின்போது அஸ்த்தமனத்துக்காகவும் அழுத சிலரது புருவங்கள் மக்களால் திறக்கப் பட்டுள்ளன.
கண்கெட்ட பின் சிலர் சூரிய நமஸ்காரத் துக்குத் தயாராகியுள்ளனர்.
அஸ்த்தமனத்தின்போது விடியலுக்காகவும் விடியலின்போது அஸ்த்தமனத்துக்காகவும் அழுத சிலரது புருவங்கள் மக்களால் திறக்கப் பட்டுள்ளன.
கணக்குக்காட்டல்
அபிவிருத்திப் புள்ளிவிவரங்களுடன் வந்த அரச அதிபர்கள்
"நான் வந்திருப்பதன்நோக்கம் ஐ.நாவின் கொள்கைகள் எல்லா மட்டங்களிலும் நடை முறையில் உள்ளதா என்பது குறித்து ஆராய் வதற்கு, இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கும் மனித உரிமைகள் குறித்து தரவு சேகரிப்பதற்கு' பொது நூலகத்தில் நடை பெற்ற நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.அவர் இப்படி ஒரு கருத்தை கூறுவதற்கு காரணம் எங்கள் அதிகாரிகள் தான்.
சுட்டிகள்:
அபிவிருத்தி,
அரசியல்,
அறிக்கை,
ஐ.நா.,
கணக்கு,
நவி. ஆளுநர்,
பூமுகன்,
வீகேஎம்
தமிழருக்கு இலுப்பம்பூ சர்க்கரையா?
தமிழ் போசும் மக்கள் செறிந்துவாழும் வடக்கில் முதல் முறையாக மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இது உலகறிந்த உண்மை. ஆனால் தாம் வழங்கிய ஆணையை கூட்டமைப்பு சரியாகப் பயன் படுத்துகிறதா என்பதில் வாக்களித்த மக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.இதற்கு முழுமுதற் காரணமும் கூட்டமைப்பு கட்சிகளே.
ஞாயிறு, அக்டோபர் 20, 2013
வேண்டாம் இருதலைக் கொள்ளிகள்
தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்த முடிவுகளை ஒன்றிணைந்து எடுத்திருக்கின் றனர் என்பது வரலாற்று மாற்றம். சமூகத்தில் நடி பங்கேற்றிருக்கும் மாய மனிதர்களிடையே தமக் கான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரி யான பாதையை மக்கள் தெரிவுசெய்வதென்பது மிகக் கடினமானது. இந்தக் கடினமான பாதையில் நடிகர் களது பாத்திரங்களை எளிதில் விளங்கிக் கொள் வது அசாதாரணம்தான்.இப்படியான சிந்தனையை மழுங்கடிக்கும் காலத்துக்குள் ளேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
புதன், பிப்ரவரி 13, 2013
ஞாயிறு, ஜூன் 17, 2012
திங்கள், ஜூன் 04, 2012
வடக்கு, கிழக்கு படைகளின் பூமியாம்
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் ஓரிடத்தில் வடக்குக, கிழக்கில் இராணுவப் பிரசன்னத்தை குறைத்தல் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக
நாட்டில் நிலவிய போர் பொது மக்களுக்கு தடைகளை ஏற்படுத்தி இருந்தது. இது இப்போது
இல்லாதொழிக்கப்பட்ட நிலையில் முழுமையான சுதந்திரம் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிலர்
பயங்கரவாதத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றனர். இவர்களின் கனவை நனவாக்க
ஒரு போதும்
இடமளிக்க மாட்டேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை வடக்குக் கிழக்கில் இராணுவ முகாம்கள்
அகற்றப்படமாட்டா.
திங்கள், ஜனவரி 23, 2012
இதுவும் அபிவிருத்திதான்
தென் இலங்கையில் அபிவிருத்திப் பணிகள் இப்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு அரசி யல்வாதிகள் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றனர்.
இந்த அபிவிருத்தி ஆர்வம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போரின் பின்னரான மீள்கட்டுமான முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இந்த இரண்டு மாகாணங்களும் போரினால் மிகவும் @மாச மாகப் பாதிக்கப்பட்டவை. பெரும்பாலான பகுதிகள் அன்றும் சரி இன்றும் சரி மிகவும் வறிய பிரதேசங்களாகவே, அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதிகளாகவே காணப்படுகின்றன.
ஞாயிறு, ஜனவரி 15, 2012
வியாழன், டிசம்பர் 08, 2011
முடிந்தால் ஐ.நாவில் மனசாட்சியை மட்டும் பேசுங்கள் அம்மணி
அன்புடன் அம்மையாருக்கு!
தமிழ்மகன் எழுதும் மடல் இது.
எதிர்வரும் 12ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உண்மைகளை மறைக்கும் இலங்கை அரசின் குழுவில் தாங்களும் வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எச்.எம்.சார்ஸ்சும் அங்கம் வகிக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)