திங்கள், அக்டோபர் 28, 2013

தந்தி அறுந்த வீணை


நடைபெற்றுமுடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பல மறந்துபோன கதைகளைப் புதிப்பித்திருக்கின்றன. தாம் எங்கு இருக் கிறோம். எதைச் செய்கிறோம் என்ற சிந்திப் பையும் தூண்டியிருக்கின்றது.
கண்கெட்ட பின் சிலர் சூரிய நமஸ்காரத் துக்குத் தயாராகியுள்ளனர்.
அஸ்த்தமனத்தின்போது விடியலுக்காகவும் விடியலின்போது அஸ்த்தமனத்துக்காகவும் அழுத சிலரது புருவங்கள் மக்களால் திறக்கப் பட்டுள்ளன.

தொழில் நுட்பத்தின் பாதிப்பு வடக்கு மக் களை கண்திறக்கவைத்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். புத்திசாதுரியமான சிந்தனை களை மக்கள் கொண்டுள்ளனர். சொல்லப் போனால் பத்துவருடங்களுக்கு முன் இருந்த வடபகுதி மக் களுக்கும் இப்போதுள்ள மக்களுக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகிறது.
அறிவியல் வளர்ச்சிக்கு இவர்கள் இடமளித் திருக்கிறார்கள். குறிப்பாக அரசியல் சாக்கடை களுக்குள் இருந்து மீள்வதற்கான இவர்களது துணிச்சலும் சிந்தனையும் இதைப் பறைசாற்று கின்றன.

தவறான கணிப்பு
நீண்டகாலப்போர் மக்களை நிலைகுலையச் செய்ய அதை சாதகமாகக் கொண்டு சிலர் அரசி யல் நகர்வை மாற்றியிருந்தனர். இதுவரை அடி நாதமாக இருந்த கொள்கைகளும் கோட்பாடு களும் கைவிடப்பட்டு மக்களை சலுகை சார்ந்த மனவிருப்புமாற்றத்துக்கு கொண்டு செல்ல இவர்கள் முயற்சித்திருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இவர்களது சூழ்ச்சி நகரல்லாத கிராமமட்டத்தில் சாத்தியமானதை இவர்கள் உணர்திருந்தனர். குறிப்பாக கரையோரப் பகுதி கள், வளர்ச்சி குன்றிய கிராமங்கள் இவர் களது மாற்று அரசியலுக்கு வலுச்சேர்த்தன.
சிறு வெற்றிகளை கொண்டு ஏமாற்றுவாதிகள் பொது முடிவுக்குவந்தனர். அதுதான் சலுகை அரசியல்.

சமூகமயமாக்கம்
கடந்த ஓர் இரண்டு சதாப்தம்வரை பண் டிகைகள், கோயில் திருவிழாக்கள், கொண் டாட்டங்கள் வாயிலாக சமூகமயப்பட்டுக் கொண்ட மக்கள் இன்று அதிலிருந்து மாற்றம் பெற்று சமூக வலைத் தளங்கள் ஊடாக சமூ கத்தைப் புரிந்துகொள்ளும் நிலை ஏற்பட்டி ருக்கிறது.( நன்மை,தீமைக்கு அப்பால்) அரசியல் பெரு எழுச்சி கண்டுள்ளது.
தவறான தகவல்களுடன் சலுகை, ஆசை வார்த்தை என்று மக்களை நம்பவைத்து அவர் களை தமது ஆதரவாளர்களாகக் காட்டி, தமது பலத்தை வெளிக்கொணர்ந்த சில அரசியல் வாதிகள், பதவிகளைப் பெற்றதும் தாம் முன்னர் செய்த அரசியலை மறந்து, அல்லது  நியாயப் படுத்திக்கொண்டு அடுத்த சந்ததியிடமும் அதை விற்பனைக்காக அறிமுகப்படுத்த முயற்சித் துள்ளனர். இது முற்றிலும் தவறானது.
காரணம் இவர்கள் நம்பிய மக்கள் இன்று உலகத்து மூலைமுடுக்கெல்லாம் சென்று வரு கின்றனர் என்பது புரியாமையே.
நடந்துமுடிந்த தேர்தலில் இரு ஆசனங் களைக் கைப்பற்ற பெரும்பாடுபட்ட கட்சிக்கு இன்று ஞானம் பிறந்திருக்கிறதாம்.

மறக்கப்பட்ட சின்னம்
கடந்தவாரம் அவசர கூட்டம் நடத்திய அமைச்சர் ""இனி நாங்கள் அதில கேட்பம்'' என்று தீர்மானிச்சவையாம். ஈழமக்களுக்கான ஜனநாயகப்போராட்டம்  மீள ஆரம்பிக்கப் படுகிறது.
சலுகைக்கும் உரிமைக்கும் இடையிலான கயிறிழுப்பு முடிவடைந்ததும் இந்த முடிவு மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை உண்டுபண் ணியுள்ளது. இவர்களது வேடம் இன்னும் நிறம் மாறவுள்ளது. இன்னும் பயங்கரங்களைத் தரப் போகிறது என்றதே மக்கள் பயம்.
கடந்த தேர்தலில் ஜனநாயக விரோத நட வடிக்கைகள் பல அரங்கேற்றப்பட்டன.இவை இயலாமையின் வெளிப்பாடுகள். தாம் வெல்ல வேண்டும் என்பதற்காக எதையும் செய்யும் ஆற்றல் படைத்தவர்கள் இப்போது தமது பாதை பிழைத்திருப்பதை உணர்ந்திருக்கின்ற னர்.
பாதையைப் புனரமைக்க எத்தணை காலம் எடுக்குமோ.....லயம், நாதம் பிழைத்திருக் கிறது...... சூரியன் இருக்கும் திசை தெளி வில்லை. உத்தேசப்படி நமஸ்காரம்! நமஸ் காரம்!! நமஸ்காரம்!!!.()

Post Comment

கருத்துகள் இல்லை: