ஞாயிறு, ஜனவரி 26, 2014

மக்களின் கண்ணீரால் மன்னரைத் திருப்தியாக்கல்


வரலாற்றுக் காலங்களில் மன்னர்களின் விருப்பு வெறுப்புக்களே ஆதிக்கம்செலுத்தின. மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்கான அமைச் சரவை, தொண்டர்படை என்று எல்லாக் கட்டமைப்புக்களும் இயங்கின. கவிபாடும் புலவனா கினும், கட்டுச் சொல்லும் குறிகாரனாகிலும் மன்ன னின் மறுபக்கம்பற்றிப் பேசிவிடக்கூடாது. அப்படி நடந்துவிட்டால் அவர்கள் பாடு சாவுதான்.

வரலாற்றுக் கதைகளை நினைவுபடுத்துவதால் எமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஜனநாயகவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் அரசுகள் சில இன்னமும் கொடுங்கோல் மன்னர்கள் போல ஆட்சி செய்துவருகின்றன என்பதை மறுக்க முடியாதல்லவா?

ஞாயிறு, ஜனவரி 19, 2014

மார்ச் மாதத்தின் மறைவு

essayநேற்று வரை ஒளிர்ந்து கொண்டிருந்த மின் குமிழ் இன்று இருளை விழுங்கி மெளனமாக காத்திருக்கின்றது. வெளிச்சத்தின் நடுவே தெரியும் துப்பாக்கி உருவமும் கண்களில் படவில்லை. நாய்களின் குரைப்பொலி ஆங்காங்கே கேட்டுக் கொண்டே இருந்தாலும் இரவு
அமைதியைக் குலைக்கும் இந்தக் குரைப்பொலிகள் புதிய செய்திகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அவை தான் இலங்கையில் அமைதியும் சமாதானமும்.

திங்கள், ஜனவரி 13, 2014

அப்பாவை விடுவியுங்கோவன்?

அண்ணனை இழந்த தங்கைகளின் கதறல்

நிதர்சனின் அம்மா சிவஜினி,கடைசிதங்கை கதுர்சிகா
வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம்தானே இருந்தது. அப்ப எல்லாரும் அவைக்குக் கீழதானே வேலை செய்தவை? என்ர மனுசனும் அப்பிடித்தான் வேலை செய்தவர். அவருக்குத் தச்சு வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்திலதான் அவர் 1999ஆம் ஆண்டில இருந்து இறுதி போர் நடக்கும் வரைக்கும் வேலை செய்தவர். அதுதான் அவர் செய்த பிழையா இருக்கவேணும். 

செவ்வாய், ஜனவரி 07, 2014

பதவி பங்கீட்டில் ஆபத்து தவிர்

மஹிந்த அரசின் கீழ், நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றி நடைபோடு வதாக அரச நிர்வாக மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையே அரசு சார்பு அரசியல்வாதிகளும் செப்புகின்றனர். குறிப்பாக கைத்தொழில் நடவடிக்கைகள் வேலைவாய்ப்பு, கிராமிய, நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி உட்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவ தாகவும், இவற்றின் மூலம் மக்கள் பயனடைந்து வருவதாகவும் தக வல்கள்  வெளிக் கிளம்புகின்றன.