பிரிக்கப்பட்ட உறவுகள்
பற்றி எண்ணியபடி
பொழுதுகள் கழிக்கப்பட்டன
உறவுகள் பலவாறு!
தாயென்றும் தந்தையென்றும்
அண்ணனென்றும் தம்பியென்றும்
அக்கா தங்கை அயலவர் நண்பர்
பிரிவுகள் நிரந்தரமாயும் வந்துவிட்டன.
மன்னாரின் விளை நிலங்களிலிருந்து
மூட்டைகளை கட்டிய சனங்கள்
கால்மடித்து இன்னும் இருக்கவில்லை
மர நிழல்களில் தஞ்சம் புகும்போதெல்லாம்
மடிகளில் வந்து விழும் குண்டுகளால்
சிதைந்த உடல்களை கொண்டு
மாட்டு வண்டில்கள் புறப்பட்டன