திங்கள், அக்டோபர் 28, 2013

தமிழருக்கு இலுப்பம்பூ சர்க்கரையா?



தமிழ் போசும் மக்கள் செறிந்துவாழும் வடக்கில் முதல் முறையாக மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இது உலகறிந்த உண்மை. ஆனால் தாம் வழங்கிய ஆணையை கூட்டமைப்பு சரியாகப் பயன் படுத்துகிறதா என்பதில் வாக்களித்த மக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.இதற்கு முழுமுதற் காரணமும் கூட்டமைப்பு கட்சிகளே.

விடுதலைப்புலிகள் தமிழ்த்தேசியத்தை கட்டி யயழுப்பும் நோக்குடன் கூட்டமைப்பை உருவாக்கினர். அது தமிழ்மக்களது எதிர்கால அரசியலை கட்டியயழுப்பும் ஒரு முயற்சியாக அமைந்தது. கூட்டமைக்கப்பட்ட கட்சிகளை கண்காணித்து நெறிப்படுத்தும் நடவடிக்கை களை விடுதலைப்புலிகள் செய்ததால் முரண்பாடு கள் தவிர்க்கப்பட்டன. முரண்படுபவர்கள் எச் சரிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட அது பழக்கப் படாத குதிரைக்கான ஒரு கடிவாளமே. அப் போதும் வற்புறுத்தப்பட்ட ஒற்றுமைத் தன் மையே இவர்களுக்குள் இருந்திருக்கவேண்டும். அதாவது கடிவாள அசைவுகளுக்கு ஏற்ப இயங்குதல்.
2009 போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் கடிவாளம் அறுக்கப்பட்டுவிட்டது கூட்டுகுதிரைகளுக்கு. அன்றில் இருந்து இன்று வரை இவர்களுக்குள் போட்டியும் அதிகார வேற்றுமையும் படிப்படியாக உருவெடுக்கத் தொடங்கிவிட்டன. ஐந்து கட்சிக்கூட்டமைப்பு நான்காக மாறி மாகாண சபை நிர்வாகத்தோடு இல்லாமலே போய்விடுமோ என்ற சந்தேகம் மக்கள்மத்தியில் தோன்றியுள்ளது.

மக்களின் வாக்களிப்பு

வடமாகாண சபைத் தேர்தலில் பெரும் பாண்மைத்  தமிழ் மக்கள் வாக்களித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே. காரணம் ஒன்றல்ல.
சர்வதேசத்தின் பார்வையைத் தம்பக்கம் இழுக்கவும்,தமிழ் மக்களுக்கு இலங்கையில் நெருக்கடி இருக்கிறது. அதை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற எண்ணப்பாட்டுடனும், வீடுதலைப் போராட் டத்தின் மெளனிப்பு dஅந்த உணர்வின் வழியாக ஒரு சுதந்திர உரிமையை பெறும் நீண்டநாள் அபிலாசை, அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களுக்கான எதிர்கால அரசியல் புலம்,தமிழ் தேசியக்கூட்டமைப்பே தமிழ்மக்களைப் பிரதி பலிக்கும் ஒரே ஒரு தமிழ் கட்சி. இவ்வாறான காரணங்களே தமிழ்மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதற்கான காரணங்களாக அமைந் தன. அதாவது மஹிந்த அரசின் மீதான ஒட்டு மொத்த எதிர்ப்பை மக்கள் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவதற்காகக் களதாரிகளாகவே கூட்டமைப்பை மக்கள் பயன்படுத்துவதற்கு காரணமாகியது.
இப்போதுள்ள நிலைமைகளின்படி ஆலை இல்லாக்காட்டுக்கு இலுப்பம் பூ சக்கரை என் பது போலவே கூட்டமைப்பு காரரது நட வடிக்கைகள் இருப்பதாக வாக்களித்த மக்கள் பேசிக்கொள்கின்றனர்.
அதாவது மக்கள் வழங்கிய ஆணையை, விலை பேசவும், தமக்குள் பதவிகளுக்காக அடிபடவும் கூட்டுக்குள் பிழவை ஏற்படுத்தவும் பயன்படுத்துவதாகவே அதனைக் கருத வேண் டும்.

நவிப்பிள்ளை வருகை

வடக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்திருந்தார். அவர் போருக்குப்பின்னரான இலங்கையின் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தனது கள அவதானிப்புக்களைச் செய் யும் பொருட்டு இறுதிப்போர் இடம்பெற்ற இடங்களையும் பார்வையிட்டிருந்தார்.
இலங்கையில் தங்கியிருந்த வேளை நவிப் பிள்ளை, தமிழ்மக்களை சந்தித்து கலந்துரை யாடினார். அவரது கலந்துரையாடல், அல்லல் பட்ட தமது நீண்டபெரும் மனச் சுமையை கீழே இறக்கிவைத்த சுகத்தை அந்த மக்களுக்கு வழங் கியிருந்தது. அவர் மக்களுக்கு சில வாக்குறு திகளை வழங்கியிருந்தார். அதுமட்டுமல்லாது இலங்கை அரசின் நடவடிக்கைகள் குறித்தும் தனது அதிருப்பியை இலங்கையில் வைத்தே தெரிவித்தார். இதுவும் மக்களை ஒரு படி சிந்திப்புக்குத் தூண்டியது.
நவிப்பிள்ளை போன கையோடு வடக்கு தேர் தலுக்கான பரப்புரைப் பணிகளை போட்டி யிடும் கட்சிகள் ஆரம்பித்தன. இதில் அபி விருத்திdசலுகை, உரிமை என்பன  பேசுபொருள் களாகின.
இதன்போது உரிமை அரசியல் மக்கள் மத்தி யில் செல்லாக்கு செலுத்தியது. இதற்கான காரணத்தில் ஒன்று நவிப்பிள்ளையின் வருகை என்பது மறுக்கமுடியாதது.

மக்களுக்கு அழுத்தம்

தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு வாக்களித் தமை, ஆதரவாகச் செயற்பட்டமை போன்ற காரணங்களுக்காகத் தமிழ்மக்களைச் சிலர் இன்றும் தண்டிக்கின்றனர். தொழில் இடங் களில் பாரபாட்சம், தனிமையில் அச்சுறுத்தல், உதவிகளை இல்லாமற்செய்தல், பழிவாங்கல் என்று இந்த நிலைமை தொடர்ந்த வண்ணமே உள்ளது. இதை கூட்டமைப்பினர் கருத்தில் கொள்ளவில்லை என்றே கருதவேண்டும். காரணம் மக்கள் தமது உயிரை துச்சமாக வைத்தே வடக்கு தேர்தலில் வாக்களித்தனர். இதை வாக் களிப்பு வீதத்தில் வைத்து உணரலாம்.
வாக்களித்த, ஆதரவளித்த மக்கள் பலர் தாக்கப்பட்டுள்ளனர். 3க்கும் மேற்பட்ட வீடு கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.இன்றும் புல னாய்வாளர்களால் பலர் அச்சுறுத்தலுக்கு ஆளா கின்றனர். இது ஒரு இனத்தின் உரிமையை அடக்கும் செயல். இலங்கையில் ஜனநாயகப் பண்புகள் இந்தளவுக்கு இருக்கையில்தான் மக் களின் எழுச்சியும் பேராதரவும் கூட்டமைப் புக்கு கிடைத்தது என்பதை அவர்கள் மறந்து விடக்கூடாது,

வெற்றி பெற்றவர்கள்  பதவியேற்கவில்லை

வடமாகாண சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து உறுப்பினர்கள் சிலர் வடமாகாண அமைச்சு பதவியேற்பில் கலந்து கொள்ளவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து சர்வேஸ்வரன், சிவாஜிலிங்கம், மன்னாரில் இருந்து குணசீலன், முல்லைத்தீவிலிருந்து சிவ மோகன், வவுனியாவில் இருந்து மூவர் வைப வத்துக்கு வரவில்லை. கிட்டத்தட்ட பத்து உறுப்பினர்கள் நிகழ்வுக்கு வரவில்லை என்றால்????  இந்தப் புறக்கணிப்புக்கு கட்சிகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளே காரணம் என்று கூறப்பட்டது.
ஆரம்ப நிகழ்வொன்றிலேயே உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமை கவலைக்குரியது. இவர் களது கோரிக்கை, நிலைப்பாட்டுக்கு அப்பால் மக்களின் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் மதிப்பளிக்கச் சிலர் தவறியுள்ளனர் என்றே கருதவேண்டும்.

மாற்று கட்சிகள் அறிவுரை

பெரும்பான்மை ஆதரவை வழங்கி வடக்கை ஆட்சி செய்து அபிவிருத்தி செய்யுங்கள் என்று மக்கள் வழங்கிய ஆதரவை கட்சி பேதங்களால் கூட்டமைப்பு மறந்துவிட்டது. தமக்குள் சண்டை யிட்டு பதவிகள் இழுபறியில் இருற்தபோது மக் களால் ஒதுக்கப்பட்ட கட்சிகள் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்று அறிவுரை கூறின. இதை தமக்குள் அடிபடுபவர் கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அல்லது வெட்கப்படவேண்டும்.
ஒரு கூட்டு குழு ஒருவரது தலைமையின் கீழ் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். அதை விடுத்து மாற்றுத் தெரிவு இல்லை என்பதற்காக மக்களை ஏமாற்றும் அளவுக்கு மாறிவிடக் கூடாது. தமிழ்தேசியக்கூட்டமைப்பு இதை உணரவேண்டும்.
தமிழ் மக்களது உரிமையைக் கொண்டு கட்சி வினைகளை ஆற் றாது மக்கள் வினை போக்க முன்வர வேண்டும். இதுவே  எதிர்கால அரசி யலுக்கு சாணக்கியமானது.

நன்றி சுடர்ஒளி 16-22.10.2013

Post Comment

கருத்துகள் இல்லை: