திங்கள், அக்டோபர் 28, 2013

வருகிறாள் தேர்தல் தேவி


--
யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ் மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு d ஓர்
உறவுப் பாலம் நீ d சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்.....

--


சந்தேக வருகை

    வடக்கு மக்களின் வாழ்வியலோடு ஒரு காலத்தில் ஒன்றிப் போயி ருந்தவள் யாழ்தேவி. கொழும்பில் பணிபுரிந்த யாழ்ப்பாணத்தவர் களுக்கான புஷ்பகவிமானம் யாழ்தேவிதான். வெள்ளிக்கிழமைகளில் பணிமுடிந்த கையோடு யாழ்தேவியில் ஏறினால் அடுத்தநாள் விடிகாலையில் வீட்டில் நிற்கலாம். ஆனால் இடைப்பட்ட போர்க்காலத்தில் அவள் எங்களிடமிருந்து தூரப்போயிருந்தாள். வவுனியாவோடு அவளின் வருகை மட்டுப்படுத் தப்பட்டிருந்தது. இப்போது கிளிநொச்சி வரை யாழ்தேவி அவசர வெள் ளோட்டமாக வந்து போயி ருக்கிறாள். சாதாரண நாள் களில் இந்த  பரீட்சார்த்த வருகை நிகழ்ந் திருந்தால் அது கொண்டாட் டத்துக் குரியதாக இருந்தி ருக்கும். ஆனால் தேர்தல் காலத்தில் நிகழ்ந்த இந்தத் தற்காலிக வருகை ஒரு சந் தேகத்தையே எல்லோருக் கும் ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையிலேயே தொடர்ச்சி யான போக்குவரத்துக்காகத் தான் அவளின் இந்த வருகை நிகழ்ந்ததா? அல்லது வடக் கில் இயல்பு வாழ்வு திரும்பி விட்டது என்று நம்பவைத்து வாக்குகளை கவரத் தான் இந்த வருகையா? என்ற கேள்விகளுக்கு இனி விடி யப் போகும் பொழுதுகளே பதில் சொல்லவேண்டும்.
------
இயற்கை உணர்வுடன் கூடிய இந்தப் பாடல் எல்லோரையும் கவர்ந்தது. பாடல் கவர்ந்த அளவுக்கு யாழ்தேவி யாரையும் கவரவில்லை என்பதுதான் வரலாறு.
வடக்கு மாகாணத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டு,அந்த நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமளியோடு அடுத்த மாதம் யாழ்தேவி ரயில் கிளிநொச்சிவரை தனது சேவையை விஸ்தரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
அபிவிருத்தியின் பிரதான ஊடகமாக இருப்பது வீதி வலையமைப்பே. இதனூடான போக்குவரத்து சேவைகள் அபிவிருத்திக்கான ஏதுக்களை ஊக்குவிக்கின்றன. ஆனால், வடக்கின் விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பை போக்குவரத்துக் காரணிகள் தடைசெய்ய,வடமாகாணத்தின் உற்பத்தித் திறன் மங்கிப்போனது.
வடபகுதிக்கான ரயில் சேவை முதன்முதலில் 1902 இல் ஆரம்பிக்கப்பட்டது. இது பயணிகள் சேவை அல்ல.இதனூடாகத் தபால் பொதிகளும் வர்த்தகப் பொருட்களுமே பரிமாறப்பட்டன. மிகவும் மந்தமான வேகம் கொண்டதாக இந்த ரயில்சேவை இருந்தது.
இந்த நிலையில் 1956 ஆம் ஆண்டு யாழ்தேவி ஆரம்பிக்கப்பட்டது. வடக்குக்கும் தெற்குக்குமான உறவுப்பாலமாக இந்தச் சேவை அமைந்தது. 411கீ.மீ. தூரம்கொண்ட கொழும்பு கோட்டைக்கும் dகாங்கேசன்துறைக்குமான யாழ்தேவி ரயில் பயணத்தின் அனுபவங்களை இப்போதிருக்கும் இளம் தலைமுறை அனுபவிக்கவில்லை.
வயதானவர்கள் மட்டுமே அந்தச் சுவார்சியமான கதைகளைச் சொல்வர்.
மூன்றுபத்தாண்டுகளாக இந்தத் தொடர்பு பேணப்பட, 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி யாழ்தேவி  முறிகண்டியில் வைத்து தாக்கப்பட்டது. உயிர் இழப்புடன் கூடிய இந்தத் தாக்குதல் காரணமாகத் தெற்கிற்கான ரயில் தொடர்பும் அறுந்து போனது. இந்தத் தொடர்பின் அறுப்பு ஒரு பிரயாணத்தின் துண்டிப்பு மட்டுமல்லாது,இரண்டு சமூகத்தினருக்குமிடையிலாக அறுப்பானது எனலாம்.
இன்று ""தேவி திரும்பி வருகிறாள்'' என்ற செய்தியை ஊடகங்களில் வெளிப்படுத்தும்போது, உணர்வார்ந்த பேச்சுக்களும், கதைகளும் இப்போதுள்ள, அந்தக் காலத்து  தேவியை அனுபவித்தவர்களிடம் மிளிர்வதைக் காணமுடிகிறது.
கலகலப்பு, ஆரவாரம், புதிய இடத்தைப் பார்க்கும் துடிப்பு, நட்புக்களின் சந்திப்பு என்று இந்தப் புதினங்கள் சொல்லி முற்றுறாதவை.
இன்று வடக்கில் தேர்தல் ஆரவாரத்தோடுதான் தேவி வரும் அறிவிப்பும் வெளிவந்திருக்கிறது. அதுமட்டுமல்ல கிளிநொச்சிவரை பரீட்சார்த்தப் பயணத்தை யும் தேவி மேற்கொண்டு வெற்றிபெற்றுள்ளாள்.
90ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதவாச்சிவரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த தேவியின் பயணம் போருக்குப் பின்னர் வவுனியா, ஓமந்தை என விரிவாக் கப்பட்டு அடுத்தமாதம் கிளிநொச்சி வரைக்கும் தொடரவுள்ளது.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவையை காங்கேசன் துறைவரை நடத்துவதற்கு, புனர்நிர்மாணப் பணிகள் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம்ஆரம்பிக்கப்பட்டது.
பழைமைகளை வெளிக்கொண்டுவர இருக்கும் தேவியின் பயணம் தேர்தல் அறிவிப்பாக இருக்கக்கூடாது. அபிவிருத்தியின் வெளிக்கூறுகள் மட்டும் மக்களின் இயல்புவாழ்வுக்கு உதவிடப்போவதில்லை.பதிலாக உட்கூறுகளில் நிறைவு காணப்படவேண்டும். இன்றும் அடிப்படைவசதிகள் இன்றி வடக்குமக்கள் பெரும்பாலானவர்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு தேவிவருவது தேவை யற்றவிடயம்.
அடிக்கட்டுமக்களின் தேவைகளும் அபிவிருத்தி உள்ளடக்கமாக மாறவேண்டும். வடக்கு தெற்கை வேகமாக இணைக்க அதிவேக சாலையும் தயார். ஆனால்....அகதிகள் குடிசைகள் வரப்போகும் மழையில் அடித்துச் செல்லாதிருக்கவும் ஒரு ஆயத்தம் தேவை என்பதை அபிவிருத்தியாளர்கள் கவனிக்கவேண்டும்.

நன்றி சுடர்ஒளி (14-20.08.2013)

Post Comment

கருத்துகள் இல்லை: