சனி, அக்டோபர் 18, 2014

முன்னாள் போராளிகளின் திடீர் சந்திப்பு!

காலம்: 18.10.2014
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்

யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.

பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.