கிளிநொச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிளிநொச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 05, 2014

நீரோடும் வாய்க்கால் வழிபோகும் வாதம்


அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் இனந்தெரியாத முரண்பாடு ஒன்றில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது.  இரண்டு மாவட்டங்களுக்கிடையில் அதனைப் பகிர்வதில்  அந்த முரண்பாடு தோன்றியிருக்கிறது.

வடக்கு,  கிழக்கில் போருக்குப் பின்னரான நிலைமை, அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான தன்மை  போன்ற காரணிகள் தமிழ் மக்களி டையே  முரண்பாடுகளைத் தோற்று விக்கும் மாயையை ஏற்படுத்தியிருக்கி றது.

திங்கள், ஜனவரி 13, 2014

அப்பாவை விடுவியுங்கோவன்?

அண்ணனை இழந்த தங்கைகளின் கதறல்

நிதர்சனின் அம்மா சிவஜினி,கடைசிதங்கை கதுர்சிகா
வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம்தானே இருந்தது. அப்ப எல்லாரும் அவைக்குக் கீழதானே வேலை செய்தவை? என்ர மனுசனும் அப்பிடித்தான் வேலை செய்தவர். அவருக்குத் தச்சு வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்திலதான் அவர் 1999ஆம் ஆண்டில இருந்து இறுதி போர் நடக்கும் வரைக்கும் வேலை செய்தவர். அதுதான் அவர் செய்த பிழையா இருக்கவேணும். 

ஞாயிறு, டிசம்பர் 29, 2013

உண்மையைத் தெளிவுபடுத்த யாருமே இல்லையா?


மனித வாழ்வில்  நீரும், நெருப்பும் இன்றியமையாதவை. இவை நல்ல பல காரி யங்களுக்குப் பயன்படும் அதே தரு ணத்தில் அந்த மனித குலத்துக்கே பேராபத்துக்களையும் விளைவித்து விடுகின்றன. இந்த ஆபத்துக்களை நாம் தேடிச் செல்கிறோமா அவை நம் மைத் தேடி வருகின்றனவோ இரண் டுக்குமே பொறுப்பாளி மனிதனே. தண்ணீராலும் நெருப்பாலும் ஆகிப் போனவற்றைவிட அழிந்துபோனவையே அதிகம். இந்தப் பட்டறிதலைப் புரிந்து கொள்ளாது நாம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

இன அழிப்பா?கட்டாய கருகலைப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் கரையோரக் கிராமங்கள் அவை. கிளிநொச்சிக்கு மேற் காக அந்த மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்றன. பெரும் பாலும் கடற்றொழிலை பிரதான மாகக் கொண்டு, மற்றைய தொழில் களையும் செய்யக் கூடிய குடும்பங் கள் இங்கு வசிக்கின்றன. 
கூடுதலாக இந்தக் கிராமங்களி லுள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவையாக அடை யாளம் காணப்பட்டுள்ளன.

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

கிளிநொச்சி ""கொலை வெறி''


Why this kolaveri di பாடல் வெளியாகி அது பலரின் மத்தியில் பிரபலமாகிவிட்டது. பட்டி தொட்டி யெல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடல் தமிழையும் ஆங்கிலத்தையும் கொலை செய்துள் ளதாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் இன்று கூடுதலான மக்கள் தாம் தமிழ் பேசுவதாக, ஆங்கிலத்தைக் கலந்து புது மொழி பேசுகின்றனர். அதுபோல ஆங்கில மொழிக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் கொலைவெறிப் பாடலை ஒப்பிட்டால் அது ஒன்றும் புதிதல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.