இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

அடித்து அணைத்தல்


இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியாக இருக்கிறது. போருக்குப் பின்னரான ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் இலங்கைக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கின்றது. மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், கெடுபிடிகள், இனப்படுகொலைகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட போர் முறைகள் குறித்து இந்த அழுத்தங்கள் எழுகின்றன.

புதன், நவம்பர் 13, 2013

கழிப்பறையைக் கழுவும் கைகள்

இந்த பதிவு யாரையும் தனிப்பட்டவகையில் புண்படுத்துவதற்கானதல்ல.நிலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில்(அச்சுறுத்தல்,நெருக்கடி காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும்) புலத்தில் தொழில்தேடி இன்னல்படும் எம்மவர்பற்றிய சிறு பதிவே.
மூன்றாம் உலகநாடுகள் என்று இன்று எந்த நாடுகளும் இல்லை.அனைத்துமே ஏதோ ஒருவகையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே அவற்றை மூன்றாம் உலக நாடுகள் என்று குறிப்பிட முடியாது என்று அபிவிருத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாவனையிலும் இன்று மூன்றாம் உலகநாடுகள் என்று பாவிக்கப்படுவதும் இல்லை என்று சொல்லலாம்.