ஞாயிறு, அக்டோபர் 20, 2013

வேண்டாம் இருதலைக் கொள்ளிகள்



தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்த முடிவுகளை ஒன்றிணைந்து எடுத்திருக்கின் றனர் என்பது வரலாற்று மாற்றம். சமூகத்தில் நடி பங்கேற்றிருக்கும் மாய மனிதர்களிடையே தமக் கான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரி யான பாதையை மக்கள் தெரிவுசெய்வதென்பது மிகக் கடினமானது. இந்தக் கடினமான பாதையில் நடிகர் களது பாத்திரங்களை எளிதில் விளங்கிக் கொள் வது அசாதாரணம்தான்.இப்படியான சிந்தனையை மழுங்கடிக்கும் காலத்துக்குள் ளேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது நடிகர்கள் பலரது முகங்கள் தமிழ்மக்களால் கிழித்தெறியப்பட்டன.இது தமிழ் மக்களது அரசியல் மூப்பை எடுத்துக் காட்டியுள்ளது.

இழுபறி முடிவுக்கு வந்தது

செப்ரெம்பர் 21 தேர்தல் முடிவடைந்து மறுநாள் முடிவுகள் வெளியானது முதலே கூட்டமைப் புக்குள்  பிரச்சினைகள் ஆரம்பித்துவிட்டன. பதவி நிலையிலும் அதிகார நிலையிலும் கட்சி நிலையிலும் இந்தக் கருத்து மோதல்கள் வெடித் தன.
நாள்கணக்காக பேச்சுக்கள்,இழுபறிகள் தொடர்ந் தன.பதவியேற்பது யார் முன்னிலையில் என்ற சர்ச்சை கட்சிகளிடையே முரண்பாட்டை வர வழைத்தன.ஒருவாறாக முதலமைச்சர் ஜனாதி பதி முன்னிலையில் பதவியேற்க அதற்கும் எதிர்ப்புக்கள் கிளம்பின.
ஒவ்வொருவரது வேறுபட்ட விளக்கங்களுடன் அந்தப் பிரச்சினை சற்று மறக்கப்பட, அமைச்சுக் கள், உறுப்பினர்கள் பதவியேற்பதில் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்தன.
இதில்தான் கட்சிகள் அணி அணியாகப் பிரிந்து கூட்டமைப்பு என்ற சொல்லை விட்டு கட்சிகள் பதவியேற்பு நடத்தப்பட்டது.
கருத்துமுரண் காரணமாகப் பிரிந்தவர்கள் தத்தமது விருப்பப்படி பதவியேற்றனர். முள்ளி வாய்க்காலில் ஒருவரும் இன்னும் பல இடங்க ளிலும் பதவியேற்பு இடம்பெற்று இப்போது அந்த பிரச்சிçயும் முடிவுக்கு வந்துள்ளது.

பிரச்சினை முடிந்துவிட்டதா?

ஒருவாறாக தெரிவு செய்யப்பட்ட அனைவரும் தமது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ள னர். ஆனாலும் இவர்கள் அனைவரும் ஒற்று மையோடு செயற்படுவார்களா என்ற சந்தேகம் இன்னமும் மக்கள் மனங்களில் இருந்து அகல வில்லை. இதற்குக் காரணம் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்களே. ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் மக்களுக்கு சந்தேகம் வரும்படியாக நடந்து கொண்டமையே இவர்கள் மீதான நம்பிக்கையீனத்தை தோற்றுவித்துள்ளது.
மாகாண கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட்ட நிலையில் அதன் கன்னி அமர்வு எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. இந்த முதலாவது அமர்வில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்களா அல்லது அதன்போதும் ஏதாவது நிபந்தனைகள் உறுப்பினர்களால் விதிக்கப் படுமா என்ற கேள்விகளையும் மக்கள் எழுப்பத் தவறவில்லை.
எது எப்படியோ மக்கள் இவர்களை  நம்பி வாக்க ளித்தார்கள் . மக்களது சந்தேகத்துக்கும் கேள் விகளுக்கும் பதில் கூறவேண்டியது உறுப்பி னர்கள் அனைவ ரதும் கடமையாகும். எனவே இனியாவது குழப்பமற்ற விதத்தில் கூட்ட மைப்பை கூட்டு அமைப்பாக இயங்க வைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே மக்களது விருப்பம்; எதிர்பார்ப்பு.

அத்தனை பேரும் உத்தமர்தானா?

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு மக்கள் ஆணை பெற்றவர்களில் சிலர் மக்களது மனங் களை வெல்ல ஆரம்பத்திலே தவறிவிட்டனர். தாம் வெல்வதற்காக மட்டும் ஒரு வீட்டுக்காரர் களாக இயங்கியவர்கள் "சீற்' கிடைத்ததும் தமது உண்மை முகத்தை காட்டி விட்டனர்.
இவர்களது குழப்பத்துக்கு சுய காரணங்கள் என்னவாக இருந்தாலும் அதை மக்கள் ஏற்றுக் கொள்ளத்தயாராகவில்லை. காரணம் ஒற்றுமை யாக இருந்து தமிழ்மக்களது வாழ்வுரிமைக்காக வும்,விடிவுக்காகவும் பணியாற்றுவோம் என் பதே இவர்களது ஆரம்ப அறிவிப்பு.
உணர்ச்சி வசனங்களைப் பேசி மக்களிடம் வாக்குக் கேட்டுவிட்டு இப்போது பதவிகளுக்காக ஒற்றுமையைக் குலைத்து வேறுவேறு திசை களைப் பார்ப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கொள்ளத்தக்கது.
 கூட்டமைப்பு போட்டியிட்டதா? அல்லது நான்கு கட்சிகள் போட்டியிட்டு ஆங்காங்கே வாக்குக ளைப் பெற்று பின்னர் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தனவா என்ற கேள்வியை இவர்களது செயற்பாடுகள் எழுப்புகின்றன.
உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்கு கட்சிகளைக் கொண்டு இப்போது இயங் கும் நிலையில் அவை இனி தனித்தனியே இயங்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் இவர்களது இருப்பிடம் கேள்விக்குறியாகிவிடும். கடந்த காலத்தைப் போன்று அல்லாது தீர்க்கதரிசன மாக சிந்தித்து தமது தலைவர்களை தெரிவுசெய் யும் ஆற்றல் தற்போது தமிழ்மக்களுக்கு இருக் கிறது என்பதை இவர்கள் மறந்துவிடக்கூடாது.

 தமிழரசுக் கட்சி சிந்திக்கவேண்டும்

 தமிழ் அரசுக்கட்சியைச் சார்ந்தவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்படுவ தையோ அது தொடர்ச்சியாக இயங்குவதையோ விரும்பவில்லை. இதன் கார ணமாக அதில் உள்ளடக்கப்படும் கட்சிகளுடன் அடிக்கடி முரண்பட்டுக் கொள்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இந்த குற்றச்சாட்டு இல்லாமற் செய்யப்பட வேண்டும். கூட்டமைப்பை பதிவுசெய்வதில் சட்டச்சிக்கல் இருந்தாலும் பதிவு செய்யமுடியாது என்று கூறமுடியாது. சட்டச் சிக்கல்களை எப்படி மாற்றியமைக்கமுடியும்?என்பதை ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கப்படவேண்டும்.காலத்தைக் கடத்துவது தமிழரசுக்கட்சிக்கு கூட்டமைப்பை பதிவுசெய்ய விருப்பம் இல்லை என்ற கருத்தை வலுப்பெறச்செய்யும்.
ஆயுதம் ஏந்தியவர்களைக் கட்சிக்குள் உள்ள டக்கினால் பதிவுசெய்யும் போது பிரச்சினை ஏற் படும் என்பதைக் காரணம் காட்டி இந்த பொறுப் பிலிருந்து சிலர் விடுபட நினைப்பதும் தவ றானது.

எதிர்காலத்தின் தெரிவு

தமிழ்மக்களது அரசியல் மூப்பு பாராட்டப்பட்டா லும் இன்னும் கூர்மையாக்கப்படவேண்டும் என்பதும் கட்டாயமானது.அதாவது வடக்குத் தேர் தலில் தெரிவுசெய்யப்பட்டவர்களது சில நடத் தைகளே இதற்கான அடித்தளத்தை இட்டிருக் கிறது.
குறிப்பாக ஒற்றுமையைக் குலைக்ககூடிய, உள் ளிருந்தே நுள்ளிவிடக்கூடிய பண்புடையவர் களைத் தவிர்த்து மக்களுக்காக எந்த வேளை யிலும் குரல் தரக்கூடியவர்களை இனங்கண்டு வாக்களிக்கத் தலைப்படவேண்டும். தெரிவு செய்து விட்டு திட்டித்தீர்ப்பதைவிட இது ஆரோக்கி யமானது.

 கட்சிப் பெயர்களை நீக்குக

கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டால் கட்சிகளது தனிப்பட்ட பெயர்கள் நீக்கப்படும். இதன்மூலம் பதவி சண்டைகளைத் தவிர்க்கலாம்.அந்தக் கட்சி இந்தக் கட்சி என்று பேசிக்கொள்வதால் பாகுபாடும் விரோதமுமே அதிகரிக்கும்.
யாரை நீக்கவேண்டும் யாரை உள்வாங்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பர். அதற்காக கட்சிக்காரர்கள் சண்டையிட்டுக் கொள்வது அநாகரிகமானது.குறைபாடுகள், முரண்பாடுகள் வருவது தவிர்க்கமுடியாதது என்பதைக் கருத்தில் கொண்டு கட்சிகளின் பெயர்களை முன்னிலைப் படுத்துவதை தவிர்ப் பது  எதிர்காலத்துக்கு பொருத்தமானதாகும் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
மக்கள் தமது முடிவை மீள்பரிசீலனை செய் வதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகள் தமது எதிர் கால நடவடிக்கைகள் மற்றும் ஒற்றுமை உணர்வு என்பவற்றை மீள் பரிசீலிக்க வேண்டும். இல்லையயனில் மக்களது தீர்ப்பு மாற்றப்படும். காலம் அப்படி நகர்கிறது என்பதை அரசியல் வாதிகள் சிந்தித்து செயற்படுவது, தமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பதுடன் அவர்களது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தும்.
நன்றி சூரியகாந்தி 20.10.2013

Post Comment

கருத்துகள் இல்லை: