எல்லாம் முடிந்துவிட்டபின்
நாங்கள் அழுகின்றோம்
யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை
ஒட்டுமொத்தமாய்
இழந்துவிட்ட உணர்வுகள்
மனங்களில் இருள் மண்டிகிடக்கையில்
ஆர்பரிப்பது நாங்களே
எல்லோரும் பேசும்
பொருள்களாய்
எம் விடுதலை
இறுதியில் அறிக்கை
பொய்யான வதந்திகளாய்
பொறுப்பு கூறுதல்பற்றி
யார் கூறுவார் பெறுப்பு?
ஏதும் செய்யாத அரசா?
ஏதும் தெரியாத படைகளா?
போலிகள்!
எல்லாமே போலிகள்!
நாங்கள் அழுகிறோம்
உண்மையின் மரணத்தை எண்ணி...
பூமுகன்
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக