வியாழன், நவம்பர் 28, 2013
திங்கள், நவம்பர் 25, 2013
செவ்வாய், நவம்பர் 19, 2013
ஞாயிறு, நவம்பர் 17, 2013
உள்ளே போர் வெளியே படம்
வட மாகாண சபை மெல்ல எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது. தவறுகள், தடு மாற்றங்கள், பயம், வெட்கம், என்று ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டுப் போல இந்த ஆரம்பம் தெரிகிறது.
மேடைகளில் ஆவேசப் பேச்சுக்களும் மெய்சிலிர்க்க வைக்கும் உணர்ச்சிக் கருத்துக்களும் கொட்டி முழங்க செப்ரெம்பர் மாதமே வடக்கில் தமிழ் அரசு முழு அதிகாரங் களுடன் கொடி கட்டிப்பறக்க போவதாய்தென்பட்டது.
ஆனாலும் தமிழ் மக்கள் இவற்றுக்காக வாக்களிக்கவில்லை. ஏனென்றால் காலம் காலமாக கண்டுவந்த அரசியலே இன்றும் நிகழ்கிறது என்று மக்களுக்கு நன்கு தெரியும். ஆகையால் அவர்கள் உணர்ச்சி அரசியலுக்கு அப் பால் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே முன்வந்தனர்.
புதன், நவம்பர் 13, 2013
விடுதலைக்காக துயிலுரிக்கப்பட்ட இசைப்பிரியா
சுடர்ஒளி வார சஞ்சிகையில் சின்னவன் எழுதிய பதிவை அவரது அனுமதியுடன் இங்கே இடுகை செய்துள்ளேன்.
கணீர் என்ற குரல்.இப்போதும் காது களைத் துளையிட்டுச் செல்கிறது.அவளது அழகுத் தோற்றமும்,மெல்லிய உடலும், அஞ்சாத பார்வையும்,ஆளுமையும் ஈழத்துப் புதுமைப்பெண்ணாய் அவளை தோற்று வித்தது. ஈழவிடுதலைப் போராட்டத்தின் பரிணமிப்புகள் குறித்து இப்போது விரும்பத்தகாத பரப்புரைகளே மேலோங்கி யிருக்கின்றன. விடுதைலைப் போராட்டத்துடன் ஒன்றித்து இருந்தவர்களில் பலர் இன்று அரசுப்பக்கம் தாவி தங்கள் பிழைப் புக்காக வரலாற்றைப் புரட்ட முற்படுகின்றனர். இப்படியாகத் தமிழினத்துக்கு வந்த சாபக் கேடு, இனத்தின் இருப்பைக் கேள்விக் குறியாக்கியிருக்கும் நேரத்தில் புதிய அதிர்ச்சி இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதே.
கழிப்பறையைக் கழுவும் கைகள்
இந்த பதிவு யாரையும் தனிப்பட்டவகையில் புண்படுத்துவதற்கானதல்ல.நிலத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியாத நிலையில்(அச்சுறுத்தல்,நெருக்கடி காரணமாகவும் குடும்ப சூழல் காரணமாகவும்) புலத்தில் தொழில்தேடி இன்னல்படும் எம்மவர்பற்றிய சிறு பதிவே.
மூன்றாம் உலகநாடுகள் என்று இன்று எந்த நாடுகளும் இல்லை.அனைத்துமே ஏதோ ஒருவகையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கின்றன.எனவே அவற்றை மூன்றாம் உலக நாடுகள் என்று குறிப்பிட முடியாது என்று அபிவிருத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர். பாவனையிலும் இன்று மூன்றாம் உலகநாடுகள் என்று பாவிக்கப்படுவதும் இல்லை என்று சொல்லலாம்.
செவ்வாய், நவம்பர் 12, 2013
வடக்கு பயிரில் களை களைதல்
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு அப்பால் வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு ஆரம்பித்து தமிழர் வாழ்வுக்கான தோற்றுவாயை உருவாக்கியிருக்கிறது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி கூட்டமைப்பு இந்த சாதனை யைப்படைத்திருக்கிறது. மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.
இதுவரை காலமும் பொம்மையாக இருந்த வடக்கு மாகாண நிர்வாகம் புதிய உத்வேகம் எடுத்து பயிர்போல் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தானாகவும்,தட்டுத் தடுமாறியும் முளைத்துக்கொண்ட களைகள் களையப்பட்டு பயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும்.
ஞாயிறு, நவம்பர் 10, 2013
மர்மங்கள் சூழ்ந்த விடுமுறை
வரலாறு தன்கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் காலத் துக்காலம் மாற்றங்களும் எதிர்விளைவுகளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. தமிழினத்துக்கு இந்த வரலாற்று மாற்றம் எதிர்விளைவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
நினைப்பது ஏதோ நடப்பது ஏதோ என்பது போல சில ஊடறுப்புகள், திட்டமிட்ட செயற்பாடுகள் தமிழினத்தின் வாழ்வியலையும் இருப்பையும் கேள்விக் குறியின் பக்கம் இழுத்துச்செல்கின்றன.
சுட்டிகள்:
கட்டுரை,
பதிவு,
பூமுகன்,
மாவீரர்,
யாழ்.பல்கலை,
யாழ்ப்பாணம்,
வணக்கம்,
வீகேஎம்
ஞாயிறு, நவம்பர் 03, 2013
சிங்களத்தில் பேசுங்கோ..
போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவ ரைக்கும் பயங்கரவாதம், பிரிவினை என்று பேசப்பட்ட விடயங் கள் இல்லையயன்றும் புதிதாக ஜன நாயக நாடொன்று பரிணமித்து இருப் பதாகவும் இலங்கை அரசு சொல் கிறது. ஜனநாயக நாட்டுக்கு இருக்க வேண்டிய பண்புகள், அடிப்படைத் தகுதிகள் என்ற நிலைப்பாட்டில் இலங்கையை இந்த தராசில் எந்தப் பக்கத்தில் வைப்பது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.
போருக்குப் பின்னர் வடக்கு, கிழக் கில் அமைதி நிலை ஏற்படுத்தப்பட் டதாக அறிவிக்கப்பட்ட சூழலில் இரண்டு மாகாணங்களுக்குமே தேர்தல் நடைபெற்றது. கிழக்கு அரசின் வசமாக வடக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வசமாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)