செவ்வாய், மே 12, 2009

உயிருள்ள பிணங்கள்




நான் கண்ட கனவு முடிந்துவிட்டது
நேற்றோடு-இன்று வெறுமையால்
புலம்பித்திரிகின்றேன்.தினமும்
கூடவே இறந்துகிடக்கும் தென்னை
மரமும் இடையில் நசிந்த
உடல்களும் சாலையில்
தேங்கிக்கிடக்கின்றன்.

சமயல் பாத்திரத்துக்குள் வீசப்பட்ட தலைகள்.



நிலவிரிப்பின் கீழ் நின்மதிப் பெருமூச்சு
செலவில்லாது போக்கு வரத்துச்செய்ய
சிறு தூரமாகிவிட்டது எம் நிலம்-நேற்று நாம்
இருந்தஇடத்தில் வெடிகணைச்செலுத்திகள்
வந்து குடியேறி எமது இருப்பிடத்தை
பார்த்து விச எச்சியை துப்புகின்றன.
பீரங்கிகள். சன்னங்கள் தமிழ் உடல்களை
கிழித்துக்கொண்டு வேறு உடலடகளை தேடுகின்றன

வியாழன், மே 07, 2009

சொல்லும் வார்த்தை



மாரிக்காலமழை சொன்னது
சுட்டு பொசுங்கும் தேசத்தை
மீளவும் உயிர் கொடுக்க
முடியவில்லை என்று

நான்புகமுன்பே அங்கு
ஒளிகள் பிறந்துவிட்டன
கூரைகளில் காலை
கதிரவன் சொன்னது