ஞாயிறு, அக்டோபர் 27, 2013

இன அழிப்பா?கட்டாய கருகலைப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் கரையோரக் கிராமங்கள் அவை. கிளிநொச்சிக்கு மேற் காக அந்த மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்றன. பெரும் பாலும் கடற்றொழிலை பிரதான மாகக் கொண்டு, மற்றைய தொழில் களையும் செய்யக் கூடிய குடும்பங் கள் இங்கு வசிக்கின்றன. 
கூடுதலாக இந்தக் கிராமங்களி லுள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவையாக அடை யாளம் காணப்பட்டுள்ளன.
கடல் ரீதியாக இவர்களுக்கு இருக் கும் தொழில் நெருக்கடியும், பிரதான நகரங்களுடனான தொடர்பின்மை யும் இந்தக் கிராமங்களை தனிமைப் படுத்தி தொழில் ரீதியாக பின்னிலைப் படுத்தி வைத்திருக்கின்றன. ஆங் காங்கே விவசாயம் மற்றும் வீட்டுத் தோட்டம் என்பனவற்றையும் இந்தக் கிராமத்தின் மக்கள் செய்துவருகின் றனர்.
இவ்வாறான ஒரு மக்கள் சமூகத் தைக் கொண்ட வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி ஆகிய கிராமங்களே இவை.  
அண்மையில் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் பெரும் பாலும் பேசப்பட்ட ஒரு விடயம் இந் தக் கிராமங்களிலே நடத்தப்பட்டது. 
வடக்கு‡ கிழக்குத் தமிழ் மக்கள் அஹிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் தமக்கான உரிமை களை பெற்றுக் கொள்ள முயற்சித்து தசாப்தங்கள் வீணாகிப் போக, சிங் களப் பெரும்பான்மைத் தேசிய வாதி கள் காலத்துக்குக் காலம் தமிழ் மக் கள் மீதான இனஅழிப்பு உத்திகளை கையாண்டமை வரலாறாக நிகழ் காலத்திலும் தொடர்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. 

வரலாற்று அழிப்புகள்
குறிப்பாக தமிழ் மக்களது முக்கிய மான பொருளாதாரக் கட்டமைப்புக் கள் கல்வி, கலாசார பண்பாட்டு கட்ட மைப்புக்களில் திருட்டுத்தனமாக புகுந்து அவற்றை இல்லாது அழிக்கும் முயற்சிகள் இவையயனக் குறிப்பிட லாம். 
நீண்ட காலப் போராட் டம் முள்ளிவாய்க்காலோடு முடிவுக்குக் கொண்டுவரப் பட்டு அதன் பின்னர் வடக்கு ‡  கிழக்கில் தமிழ் மக்களுக்கு எந்த வகை யான நெருக்கடிகளோ குறைபாடுகளோ இல்லை யயன வெளி உலகுக்கு அரசு வலுக்கட்டாயமாக பரப்புரை செய்து வரு கிறது. 

அத்தியாவசிய நெருக்கடி
ஆனால் அந்தப் பகுதி களில் இன்றளவும் தமிழ் மக்கள் வாழ்வாதாரக் கட்டமைப்புக்களால் சீர் குலைக்கப்பட்டே இருக் கிறார்கள். இல்லிட வசதி யில்லை. சுகாதார மருத்துவ வசதிகள் இல்லை. சுத்தமான குடிநீர் இல்லை. பாதுகாப்பு இல்லை. கருத்து மற்றும் நடமாடுவதற்கான சுதந் திரம் மறுக்கப்படுகிறது. 
இவ்வாறு பரவலாக இங்குள்ள தமிழ் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக் கியே வருகின்றனர். 

சீருடையிலிருந்து
சிவிலுக்கு
எல்லாவகையிலும் வடக்கு ‡ கிழக் குப் பகுதியிலிருந்து இராணுவ பிர சன்னம் குறைக்கப்பட வேண்டும் என பேசப்பட்டாலும் அது சாத்திய மாகப் போவதில்லை. பதிலாக இராணு வத்தினர் சீருடையிலிருந்து சிவில் உடைக்கு மாற்றப்படும் அபாயத் துக்குள்ளேயே வடக்கு ‡ கிழக்கு மாற்றப்படுகிறது. 
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு சீருடை யிலிருந்து சிவிலுக்கு மாறிய சில ரால் இன்றளவும் அச்சுறுத்தல் இருந்தே வருகிறது. 
இவ்வாறாக மக்களை நெருக்கடிக் குள்ளும் பயப்பீதியுடனும் வழி நடத் துவதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ் மக்கள் துணிந்து அரசுக்கு எதிராக இன்னுமொரு புரட்சியை ஏற்படுத்த மாட்டார்கள் என்ற நிலையை ஏற் படுத்த முடியும். இதனையே அரசு சூழ்ச்சிகரமாகச் செய்து வருகிறது. 
கண்ணுக்குத் தெரியாத சில இன அழிப்பு நடவடிக்கைகள் இப்போது வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பரவ விடப்பட்டுள்ளன. 

பொறுப்பற்ற அதிகாரிகள்
இதற்கு அரச அதிகாரிகளும் பொது நல உத்தியோகத்தர்களும் அவர் களுக்குத் தெரியாமலேயே பயன் படுத்தப்படுகின்றனர்.
கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு ஆகிய மூன்று கிராமங்களில் வசிக்கும் பெண்கள் மீது இப்படியயாரு சூழ்ச்சி கரமான தமிழர்களது எண்ணிக் கையைக் குறைக்கும் செயற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிய வருகிறது. 
மருத்துவ வசதிகள் அற்ற அந்தக் கிராமங்களில் வேரவில் மாவட்ட மருத்துவமனை நெருக்கடிகளுடன் இயங்கிவருகிறது. மேலதிக சிகிச்சை களுக்காக முழங்காவில் மருத்து வமனையையோ அல்லது நீண்ட தூரத்துக்கு அப்பாலுள்ள கிளிநொச்சி பொதுமருத்துவ மனையோ தான் இந்த மக்கள் நாடவேண்டியிருக்கிறது. 
நடமாடும் சேவையயான்றின் மூலம் இந்தக் கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்கு முழங்கா வில் மருத்துவமனை கிளிநொச்சி பொதுமருத்துவமனையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டது. 
அது ""ஐந்து வயதுக்குக் குறைந்த குழந்தைகளது போஷாக்கை அள விடுதல், தாய்மார்களுக்கான போஷாக்கை அளவிடுதல்'' என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டது. 
இதற்கென விசேடமாக அமைக்கப் பட்ட குழு குறித்த கிராமங்களுக்குச் சென்று அங்கு வீடு வீடாகச் சென்று குறித்த தகவலைப் பரப்பி அவர் களை மருத்துவமனைக்கு அழைத் துச் சென்றுள்ளது. 
ஆனால் அறிவிக்கப்பட்டபடி சிகிச்சை வழங்கப்படவில்லை. அங்கு வந்த வர்கள் மத்தியில் தாதியர்களும் மருத்துவரும் இணைந்து கட்டாய கருத்தடை சிகிச்சையயான்றை நீங் கள் மேற்கொள்ள வேண்டும் என பணித்து அவர்களை மிரட்டி அந்த சிகிச்சையை வழங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. 
""இது தற்காலிக சிகிச்சைக்கான ஏற் பாடு என்றும் நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளாவிடில் உங்கள் கணவன் மாரை அழைத்து இத்த கையதொரு சிகிச்சையை வழங்க வேண்டி வரும்'' எனவும் அவர்கள் அந்தப் பெண் களை எச்சரித்திருந்தனர். 
இதனால் அந்த இடத்தில் எதையும் செய்ய முடியாத தாய்மார்கள் அந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொண்டிருக் கின்றனர். இது தொடர்பில் அவர்க ளுக்கு போதிய விளக்கமும் இருக்க வில்லை. 

சமூகநல நோக்காம்
இந்த செயற்பாட்டுக்கு இன்னுமொரு கதை கூறப்படுகிறது. அதில் எத்தகைய உண்மை இருக்கும் என்பதற்கு அப் பால் சட்டத்தின் அடிப்படையில் இவ் வாறானதொரு சிகிச்சை முறையை ஒரு தொகுதி மக்களுக்கு  அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். 
குறித்த கிராமங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்களே வசிக் கின்றனர். இவர்களுக்கு பெரும் பாலும் 5 வயதுக்குட்பட்ட 3 அல்லது 4 குழந் தைகள் இருக்கின்றனர். இதனால் இவர்கள் அந்தக் குழந்தைகளைச் சரிவரப் பராமரித்துக்கொள்ள இய லாதது மட்டுமன்றி தமது குடும்பத் தையும் கொண்டு நடத்த முடியாது நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற னர். எனவே சரியான கால இடை வெளி ஒன்றைப் பேணுவதற்காகவே இந்தச் சிகிச்சை வழங்கப்பட்டது.  இது நிரந்தரமானதல்ல. தற்காலிக மானதே என்றும் சமூக நலனோக்கு அடிப்படையில் இந்தச் சிகிச்சை வழங் கப்பட்டது என்றும் மருத்துவத்துறை யைச் சார்ந்த இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய சிலர் தெரிவிக்கின்றனர். 

சட்ட நடவடிக்கை
வடமாகாண சுகாதார அமைச்சின் செயலரின் கருத்துப்படி ""கட்டாய கருக்கலைப்பு நடைமுறையயான்று இங்கு இல்லை. கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு போன்ற கிராமங்களில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை யின் பின்னரே என்ன நடந்தது எனத் தெரியவரும்'' என்று விளக்க மளிக் கப்படுகிறது. 
கிராமத்து மக்களை அழைத்து இவ் வாறான சட்டவிரோத நடவடிக்கையை மேற்கொண்டமை தொடர்பில் யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த நீதிக்கும் சமா தானத்துக்குமான ஆணைக்குழு வத்திக்கானுக்கு அறிக்கை சமர்ப்பித் துள்ளது. அதில் ""இந்தக் கிராமங்களில் அநேகமானவர்கள் கிறிஸ்தவர்கள். இந்த மக்களுக்கு அவர்களது விருப் பத்துக்கு மாறாக கட்டாய கருத்தடை சிகிச்சை வழங்கப்பட்டிருக்கிறது. கிறிஸ் தவ மதத்தைப் பொறுத்தவரை இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு என்ன நடந்தது என உண்மை வெளிக் கொண்டுவரப்பட வேண்டும்'' என அந்த அமைப்பு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறது. 
இது தவிர இலங்கை அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவ டிக்கையின் ஓர் அங்கமாக இது இருக்கலாம் எனவும் இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் வடக்கு‡ கிழக்கில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக வும் அந்த அமைப்பு சந்தேகம் தெரி வித்துள்ளது. 

தமிழ்த் தலைவர்கள் அக்கறை கொள்ள வேண்டும்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரை யோரப் பகுதியில் இப்படியயாரு சம்ப வம் நடைபெற்றது என ஓகஸ்ட் மாத இறுதிப் பகுதிகளில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் அடுத்து வரும் தேர்தலுக்கான வி­மப் பரப் புரையே இது என்று சிலர் கருதினர். அல்லது தேர்தல் பரப்புரைக்காக இவ் வாறு நடைபெற்ற பிரச்சினைகளை கண்டும் காணாமலும் இருந்தனர். இதனால் அந்தப் பிரச்சினை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. பெரிதாக எவரும் அது குறித்து பேசிக்கொள்ள வில்லை. எதிர்வரும் காலங்களிலும் இது போன்ற சூழ்ச்சிகரமான இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படாமல் இருக்க தமிழ்தலை வர்கள் அக்கறை கொள்ள வேண்டும். மேடைகளில் பேசி மக்களை உணர்ச்சி யூட்டி தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதை நிறுத்தி தமக்கு இருக்கும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்க ளுக்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய நெருக்கடிகளை களைய இவர்கள் தலைப்பட வேண்டும்.

நன்றி சூரியகாநிதி (27.10.2013)

Post Comment

கருத்துகள் இல்லை: