வியாழன், பிப்ரவரி 21, 2013

உண்மையின் மரணம்



எல்லாம் முடிந்துவிட்டபின்
நாங்கள் அழுகின்றோம்
யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை

ஒட்டுமொத்தமாய்
இழந்துவிட்ட உணர்வுகள்
மனங்களில் இருள் மண்டிகிடக்கையில்
ஆர்பரிப்பது நாங்களே

புதன், பிப்ரவரி 13, 2013

புலிகளின் மீள் எழுச்சி எந்த நாட்டில்? ஐயுறும் அமெரிக்கா

""விடுதலைப்புலிகள் 2009 மே மாதம் இலங்கையில் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களது சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து இயங்கிவருகிறது. இலங்கையில் இப்போதைக்கு புலிகள் மீண்டெழுவதற்கு வாய்ப்பில்லை எனினும் அவர்களது சர்வதேச நடவடிக்கைகள் இன்னமும் வளர்ச்சி கண்டுள்ளது''.

நெல்லியடியில் புலிக்கொடி


 புலனாய்வாளரின் செயலால்
உள்ளூர மகிழ்ந்தனர் மக்கள்

விடுதலைப்புலிகள் கடந்த 2009 மே மாதம் 19 இல் தோற் கடிக்கப்பட்டுவிட்டனர். இனி விடுதலைப்புலிகளால் நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. மக் கள் அமைதியாகவும், நிம்மதியா கவும் வாழமுடியும்'' என்று அறி வித்தது இலங்கை அரசு.

தொலைந்துபோனோர் பற்றி கவலையுறும் ஐ.சி.ஆர்.சி.

வடக்குகிழக்கில் 1990 தொடக்கம் 2011 வரையான காலப் பகுதியில் 15,780 பேர் காணா மல் போயுள்ளனர். இவர்களில் 751 பேர் பெண்கள், 1494 சிறுவர்கள்.




மனிதாபிமான நடவடிக்கைகள் இலங்கையில் ஒரு பகுதி மக்களுக்குப் புறக்கணிக் கப்பட்டிருந்தது அல்லது வரையறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையான மக்கள் பல் வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதுடன் தீராத பிரச்சினையாக இன்றுவரை அவர்களுக்கு அது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வலி தெரியா முட்கள்...


தொலைபேசிகள் அடிக்கடி பேசிக்கொண்டன "உனக்கு எங்கே வந்திருக்கு' இதுதான் அந்த உரையாடலின் முதலாவது கேள்வி. இப்படியான அழைப் புக்கள் பல எனக்கும் வந்தன. கேள்வி "உனக்கு எங்கே வந்திருக்கிறது' எனது பதில் "எனக்கு எங்கேயும் வரவில்லை'..... கேள்விகளும் பதில்களும் தொடர்ந்து கொண்டேசென்றன. பலருடன் உரையாடல் அலுத்தே போய் விட்டது. பேஸ்புக்கிலும் ஒன் லைனில் இருப்பவர்களும் இதே கேள்வியைத்தான் பகிர முனைந்தார்கள் இதனால் பல தடவைகள் ஓப்லைனிலேயே இருந்து விட்டேன்.

பட்டங்கள் பலவிதம் நாமும் ஒருவிதம்


கைக்கெட்டியது  வாய்க்கு எட்ட வில்லை என்ற நிலையோடு பல ஏமாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேசெல்கின்றன. ஆழம் தெரியாமல் காலை விட்டதைப் போல அரசும் எல்லா நிர்வாகச் செயற்பாடுகளிலும் "கும்பல் லில் கோவிந்தா' என்ற கணக் காக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது.