வியாழன், நவம்பர் 27, 2014

ஈகை போற்றுதல்




கார்மேகம் சூழ்ந்துவர
கார்த்திகைப் பூவெடுத்து
பார்போற்றும் மறவரே !

எம்மினம் வாழவென்று
தம்முயிர் ஈந்திட்ட
அம்பர மறவர்களே !

கொல்குறிகளுக்கஞ்சாது
பல்களமாடி மடிந்திட்ட
வல்லமையாயுதங்களே !

சனி, அக்டோபர் 18, 2014

முன்னாள் போராளிகளின் திடீர் சந்திப்பு!

காலம்: 18.10.2014
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்

யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.

பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.

புதன், செப்டம்பர் 10, 2014

அம்மாவின் மத்து!



கரு நிறத்தில்
வயதே தெரியாத மத்து!

உறிமேலே வாய் அகன்ற பானை
அதனுள் நேற்றயபால் தயிராய்!

இன்றும் காலை கறந்தபால்
காச்சி தேநீருக்கு செலவளிய
எஞ்சியவை ஆறியதும்
புளியிட்டு மூடப்படுகின்றன தயிருக்காய்!

வியாழன், ஜூலை 24, 2014

கண்துடைக்க வல்லவர் மஹிந்த!



இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான படுகொலைகள்,காணாமற்போதல் சம்பவங்களைக் கொண்ட 19 முக்கிய விடயங்களை விசாரிக்க குழு ஒன்றை( "உடலகம ஆணைக்குழு" ) உருவாக்கியிருந்தார் ஜனாதிபதி.

ஞாயிறு, மே 18, 2014

மாண்டோருக்கஞ்சலி



மாண்டோருக்கஞ்சலி ஆன்றோர் செலுத்துகையில்
பூண்டோடு தடையறிவித்தது படைக்கூட்டம்
ஒன்றன்று பலர்கூடி தொழ ஒருபோதும் விடோம்
என்று இழுத்துமூடிற்று பல்கலையை

செவ்வாய், மார்ச் 04, 2014

மனித படுகொலையும் 12 ஆயிரம் தோட்டாக்களும்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது. சிறுபான்மை இனமான உள்ள தமிழர்களை இலங்கை அரசு அடக்கி ஒடுக்கி வருவது மட்டுமன்றி அவர்கள் மீது மனித குலத்திற்குவன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது.

புதன், பிப்ரவரி 05, 2014

நீரோடும் வாய்க்கால் வழிபோகும் வாதம்


அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் இனந்தெரியாத முரண்பாடு ஒன்றில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது.  இரண்டு மாவட்டங்களுக்கிடையில் அதனைப் பகிர்வதில்  அந்த முரண்பாடு தோன்றியிருக்கிறது.

வடக்கு,  கிழக்கில் போருக்குப் பின்னரான நிலைமை, அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான தன்மை  போன்ற காரணிகள் தமிழ் மக்களி டையே  முரண்பாடுகளைத் தோற்று விக்கும் மாயையை ஏற்படுத்தியிருக்கி றது.

ஞாயிறு, ஜனவரி 26, 2014

மக்களின் கண்ணீரால் மன்னரைத் திருப்தியாக்கல்


வரலாற்றுக் காலங்களில் மன்னர்களின் விருப்பு வெறுப்புக்களே ஆதிக்கம்செலுத்தின. மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்கான அமைச் சரவை, தொண்டர்படை என்று எல்லாக் கட்டமைப்புக்களும் இயங்கின. கவிபாடும் புலவனா கினும், கட்டுச் சொல்லும் குறிகாரனாகிலும் மன்ன னின் மறுபக்கம்பற்றிப் பேசிவிடக்கூடாது. அப்படி நடந்துவிட்டால் அவர்கள் பாடு சாவுதான்.

வரலாற்றுக் கதைகளை நினைவுபடுத்துவதால் எமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஜனநாயகவாதிகளாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் அரசுகள் சில இன்னமும் கொடுங்கோல் மன்னர்கள் போல ஆட்சி செய்துவருகின்றன என்பதை மறுக்க முடியாதல்லவா?

ஞாயிறு, ஜனவரி 19, 2014

மார்ச் மாதத்தின் மறைவு

essayநேற்று வரை ஒளிர்ந்து கொண்டிருந்த மின் குமிழ் இன்று இருளை விழுங்கி மெளனமாக காத்திருக்கின்றது. வெளிச்சத்தின் நடுவே தெரியும் துப்பாக்கி உருவமும் கண்களில் படவில்லை. நாய்களின் குரைப்பொலி ஆங்காங்கே கேட்டுக் கொண்டே இருந்தாலும் இரவு
அமைதியைக் குலைக்கும் இந்தக் குரைப்பொலிகள் புதிய செய்திகளை உலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அவை தான் இலங்கையில் அமைதியும் சமாதானமும்.

திங்கள், ஜனவரி 13, 2014

அப்பாவை விடுவியுங்கோவன்?

அண்ணனை இழந்த தங்கைகளின் கதறல்

நிதர்சனின் அம்மா சிவஜினி,கடைசிதங்கை கதுர்சிகா
வன்னியில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம்தானே இருந்தது. அப்ப எல்லாரும் அவைக்குக் கீழதானே வேலை செய்தவை? என்ர மனுசனும் அப்பிடித்தான் வேலை செய்தவர். அவருக்குத் தச்சு வேலையைத் தவிர வேறெதுவும் தெரியாது. வடபிராந்திய பாரவூர்திச் சங்கத்திலதான் அவர் 1999ஆம் ஆண்டில இருந்து இறுதி போர் நடக்கும் வரைக்கும் வேலை செய்தவர். அதுதான் அவர் செய்த பிழையா இருக்கவேணும். 

செவ்வாய், ஜனவரி 07, 2014

பதவி பங்கீட்டில் ஆபத்து தவிர்

மஹிந்த அரசின் கீழ், நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றி நடைபோடு வதாக அரச நிர்வாக மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றையே அரசு சார்பு அரசியல்வாதிகளும் செப்புகின்றனர். குறிப்பாக கைத்தொழில் நடவடிக்கைகள் வேலைவாய்ப்பு, கிராமிய, நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி உட்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவ தாகவும், இவற்றின் மூலம் மக்கள் பயனடைந்து வருவதாகவும் தக வல்கள்  வெளிக் கிளம்புகின்றன.