செவ்வாய், நவம்பர் 19, 2013

காந்தள் பூ



கார்திகை உருண்டு மறைகையில்
எங்சியிருக்கும் இறுதி நாட்கள்
எங்கள் மறவர்களுக்கானவை!

இடித்தழிக்கப்பட்ட கல்லறை -
பயிர்கள் மெல்ல முளையூன்றி
சிவப்பு மஞ்சளாய் ஒளிர்விடும்!

சிறு பனிமழைதூவி அவை
முளைத்து வெளிவர வழி -
தேடி கருமுகில் ஒன்றுகூடும்!

தனிமையில் இருந்து தாய் -
அழுகையில் ஒருமலர்
நிறவண்ணமாய் சாந்திகூறும்!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
வறள்பாதிவெயிலில் காந்து மீண்டெழும்
வர்ணத்தாள் மலர்நான் சொல்கிறேன்!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
என் நிறமெடுத்து சாத்து
உன்விழிநீர் விலக்கி விளக்கேற்று!

தாயே உன்பிள்ளை மரணிக்கவில்லை
வறள்பாதிவெயிலில் காந்து மீண்டெழும்
வர்ணத்தாள் மலர்நான் சொல்கிறேன்!

பூமுகன் (19.11.2013 am 1.00)

Post Comment

கருத்துகள் இல்லை: