செவ்வாய், நவம்பர் 12, 2013

வடக்கு பயிரில் களை களைதல்

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு அப்பால் வடக்கு மாகாண சபையின் முதல் அமர்வு ஆரம்பித்து தமிழர் வாழ்வுக்கான தோற்றுவாயை உருவாக்கியிருக்கிறது. எல்லா விமர்சனங்களையும் தாண்டி கூட்டமைப்பு இந்த சாதனை யைப்படைத்திருக்கிறது. மக்கள் ஆணை கிடைத்திருக்கிறது.
இதுவரை காலமும் பொம்மையாக இருந்த வடக்கு மாகாண நிர்வாகம் புதிய உத்வேகம் எடுத்து பயிர்போல் வளர ஆரம்பித்திருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தானாகவும்,தட்டுத் தடுமாறியும் முளைத்துக்கொண்ட களைகள் களையப்பட்டு பயிருக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தவிர்க்கப்படவேண்டும்.

ஆளுநர் இராணுவ அதிகாரி
வடக்கு மாகாண அரசு புதிதாக தமிழ்மக் களால் தெரிவுசெய்யப்பட்டது. ஆனால் தற்போது பதவிவகிக்கும் ஆளுநர் முன்னாள் இராணுவ அதிகாரி.ஜனாதிபதியே ஆளுநரை நியமிப்பார் என்பதற்காக பொருத்தமற்ற ஒரு வரை நியமிப்பது, மக்கள் விருப்பத்துக்கு மாறாக அவரை தொடர்ந்து பதவியில் வைத் திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் தமிழ்மக்களது விருப்பங்கள் தேவைகள் குறித்த சரியான புரிதல் அற்றவராகவே ஆளுநர் இருக்கின்றார்.
இது எதிர்காலத்து நடவடிக்கைகளுக்கு தடையாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு கூட்டமைப்பு செயற்படவேண்டும்.

ஆளுநருக்கு அதிகாரிகள்
வடமாகாண சபை அமைவதற்குமுன் வடக்கில் ஒரு பொம்மை நிர்வாகம் இயங்கிவந் தது. அது ஆளுநர் எண்ணுவதற்கெல்லாம் செயல்வடிவம் கொடுப்பதுடன் தாம் எண்ணுவதையே பொதுக் கொள்கையாகவும் கருதிச் செயற்பட்டது.

அமைச்சு செயலர்களாகவும் செயலராகவும் இருக்கக்கூடிய இவர்கள் பொது நடை முறைகளுக்கு எதிர்மாறானவர்கள் என்பதை அவர்களது செயற்பாடே மக்களுக்கு காட்டிக்கொடுத்தன. மக்கள் விருப்பத்துக்கு மாறான இவர்களது செயற்பாடுகள், அடாவடிகள் சொல்லி அடங்காதவை.
ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் இவர் களது செயற்பாடுகள் சாபக்கேடாக இருந்தன. கல்வித் துறையில் நியமனங்கள், இடமாற் றங்கள்,பதவிநிலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாகவும் சூத்திரதாரிகளாகவும் யார் இருந்தனர் என்பது அனை வருக்கும் தெரிந்தவிடயம்.

கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்துதல்  விளையாட்டுப் போட்டிகள், அழைக்கப்படும் விருந்தினர் தெரிவு, நடத்தப்படும் முறை எல்லாமே  ஆளுநரின் காலத்தில்  அவருக்கு விரும்பிய வகையில் மேற்கொள்ளப்பட்டன. ஆளுநர் விரும்புவதை மட்டுமே செய்து பழகிப்போன இவர்கள் இனியும் பழைய பல்லவிதான் பாடப்போகிறார்கள் போல் தெரிகிறது. நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதுபோல இவர்கள் இனியும் திருந்தி நல்நோக்கத்துக்காக உழைப்பார்களா என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. இவர்கள் குறித்து வடக்கு மாகாண நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும்.

பிரித்தோதும் தந்திரவாதி
இன்னும் சிலரும் மாகாண சபைக்குள் உத்தியோகக் கதிரைகளை கைப்பற்றி இருக் கிறார்கள். இவர்களின் சிலர் உலகறிந்த பொஞ்ஞானிகள். யாழ்ப்பாணத்தில் இயங்கும் அரச வால்பிடி ஊடகம் ஒன்றின் கதிரையை அலங் கரித்தவர்கள். சிங்கள தேசத்துக்காக  அழுது புலம்புவதே தொழில். தமிழ் மக்களுக்கு விரோதமான கருத்துக்களை கூறி குறித்த ஊடகத்தின் எல்லா நிகழ்ச்சிகளையும் மக்களை வேறு கோணத்தில் சிந்திக்கவைத்ததால், அந்த ஊடகத்தின் மற்றய படைப்புகளைக் கூட மக்கள் புறக்கணிக்கும் அளவுக்கு வெறுப் பேற்றியவர்கள். இந்தப் பொய்யர்கள்  பொய்யிலேயே பிறந்து பொய்யிலேயே  வளர்ந்தவர்கள். மாற்றுக் கருத்து என்ற பெயரில் மக்கள் விரோதக் கருத்துக்களை மட்டுமே துப்பி வந்தவர்கள். இப்போது ஆட்சி மாறியதும் தாளத்தையும் மாற்றிவிட்டார்கள். உத்தியோகக் கதிரையைப் பிடிக்கும் வித்தை இவர்களுக்கு மட்டுமே கைவந்த கலை. பொய்யுரைக்கும் இந்தப் பெருமகன்களின் கையில் "மைக்கை' கொடுத்தால் அவர்கள் என்ன என்னவெல்லாம் சொல்வார்கள் என்பது கடவுளுக்குக் கூடத் தெரியாது.

ஒருகாலத்தில் புலிகளின் ஆட்சி நிலவிய போது அவர்களோடு கூட இருந்தவர்கள்தான் பின்னர் குடாநாடுப் படைகள் வசமானதும் அரச கைக்கூலிகளாக மாறி காட்டிக்கொடுப்புகளில் ஈடுபட்டனர். கால மாற்றத்தில் அடைபட்ட பாதை திறந்து, மீண்டும் புலிகள் யாழ்ப் பாணத்துக்கு வந்தபோது இந்தக் கைத்தடிகள் பழையபடி புலிகளோடு ஒட்டிக்கொண்டார் கள். அப்போது படைக்கு சார்பானவர்கள் என்று சொல்லி தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் புலிகளுக்கு போட்டுக்கொடுத்தார்கள். மீண்டும் பாதை அடைபட தாளத்தை மாற்றி மஹிந்த பல்லவி பாடத் தொடங்கினார்கள். அத்தோடு விடாமல் புலிகளின் மீள்வருகை யின்போது உதவி செய்தவர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களை வெள்ளைவான் மோட்சம் பெறவைத்தார்கள்.  எதிரிகளைக் கூடநம்பலாம். சந்தர்ப்ப வாதிகளை நம்பவே கூடாது. 


களை பயிருக்கு சாபக்கேடு
தமிழ்மக்களது நிம்மதியை குலைக்க சதிசெய்யும் சிலரை எம்முடன் வைத்துகொண்டு உயிரூட் டங்களை வீசுவதால் பயிர் செழித்துவிடாது. ஆரம் பத்தில் அது செழிப்புற்று வளர்வதுபோல் தெரிந் தாலும் விளைச்சல் அறுவடைக்காலங்களில் பலாபலன்கள் மாற்றப்படலாம்.இப்போது முளைத்திருக்கும் களைகள் கிருமிநாசினிக்கு அழிந்துவிடுபவை அல்ல. அவை வேரோடு களையப்படவேண்டியவை.

இப்போதைக்கு பயிர்போலவே தென்பட் டாலும் பூத்து காய்க்கும் பருவத்தில் அவை சந்தண கோரை களாகவும்,நெற்சப்பி, கோழிச் சூடன், நீர்புல்லு (சேறுபடந்தான்)போன்ற நெற்பயிருக்கு ஆபத்தான பெறுபேறுகளைத் தரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

களைக களை. வாழ்க வடமாகாணப் பயிர்.


Post Comment

கருத்துகள் இல்லை: