ஞாயிறு, டிசம்பர் 29, 2013

உண்மையைத் தெளிவுபடுத்த யாருமே இல்லையா?


மனித வாழ்வில்  நீரும், நெருப்பும் இன்றியமையாதவை. இவை நல்ல பல காரி யங்களுக்குப் பயன்படும் அதே தரு ணத்தில் அந்த மனித குலத்துக்கே பேராபத்துக்களையும் விளைவித்து விடுகின்றன. இந்த ஆபத்துக்களை நாம் தேடிச் செல்கிறோமா அவை நம் மைத் தேடி வருகின்றனவோ இரண் டுக்குமே பொறுப்பாளி மனிதனே. தண்ணீராலும் நெருப்பாலும் ஆகிப் போனவற்றைவிட அழிந்துபோனவையே அதிகம். இந்தப் பட்டறிதலைப் புரிந்து கொள்ளாது நாம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஞாயிறு, டிசம்பர் 22, 2013

வாழ்வைக்குடிக்கும் மது



நாகரீகப் பழக்கங்களில் ஒன்றாக இன்று மதுப்பாவனை முன்னிலை பெறுகிறது. நுகர் இன்பங்களுக்காக ஆரம்பிக்கும் இந்த குடித்தல் ஒரு வீட்டு முற்றத்தில் இருந்து சமுதாயம்வரை சீர்கெட்டுச் செல்லும் அளவுக்கு மாறியிருக்கிறது. இளவயதினர் நாகரீக மோகத்தின் உந்துதல் காரணமாக தீய பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். அதற்கு அவர்க ளால் இயன்றளவு சமூக அந்தஸ்து வழங்கி மற்றவர்கள் இடத்தில் இருந்து தம்மை நாகரீகப்படுத்திக் கொள்கின்றனர். 

ஞாயிறு, டிசம்பர் 15, 2013

அடித்து அணைத்தல்


இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போர் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை இலங்கை அரசுக்குப் பெரும் நெருக்கடியாக இருக்கிறது. போருக்குப் பின்னரான ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வகையில் இலங்கைக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கின்றது. மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள், கெடுபிடிகள், இனப்படுகொலைகள் சர்வதேச விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட போர் முறைகள் குறித்து இந்த அழுத்தங்கள் எழுகின்றன.

புதன், டிசம்பர் 04, 2013

கண்துடைக்கும் இந்தியா


ஈழத்தமிழர்விடயத்தில் அயல்நாடு என்ற வகையில் இந்தியா காலத்துக்குக்காலம் தவறையே செய்துவந்திருக்கிறது. அதுமட்டு மல்லாமல் தவறுக்கான காரணங்களையும் கூறி ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதிலும் குறியாகவே இருந்துவருகிறது.
இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் ஈழத்தமிழர் விடயத்தில் இனி எந்த நற்காரியங்களும் இடம் பெறப்போவதில்லை என்ற நிலை வந்துவிட்டது. காரணம் இந்தியாவின் இரட்டை நிலைப்பாடுதான்.

காற்றோடு பறந்த கதைகள்


இந்த வருடத்தின் கார்த்திகை இறுதிநாள்கள் சற்று அமைதியாகவும் அற்புத மாகவும் கடந்திருக்கின்றன.வடபகுதியில் ஏதோ செய்யப்போகிறார்கள் அடக்கி ஒடுக்கவேண்டும் என்று  விசேடமாகப் பிறப்பிக்கப்பட்ட கட்டளைகளும் வீணாகிப்போயுள்ளன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஓரிரு சம்பவங்களைத்தவிர மேலதிக பிரச்சினைகள் எவையும் உற்பத்தியாகவில்லை. ஆனால் உணர்வு பூர்வமாக மாவீரர் நாள் நினைவேந் தல்கள் நடந்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது. கடந்த வருடத்திலும் பார்க்க இம் முறை மிகவும் உணர்வுபூர்வமாகவே மக்கள் தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.