திங்கள், அக்டோபர் 14, 2013

இன்னும் ஏன் வஞ்சிக்கிறாய் கடல் தாயே!


நள்ளிரவு 12 மணி இருள் சூழ்ந்திருந்த கடற்கரை பேர் இரைச்சலோடு பொங்கி எழுந்தது. கடற்கரை கிரா மங்கள் அந்த நடு நசியில் உறங்கியிருந்ததால் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தரு ணம் பார்த்து கடல் சீற்றம் கொண்டு களவாடிச் சென் றிருக்கிறது. பல மீனவக் குடும்பங்களின் சொத்துக் கள் நாசம் செய்யப்பட்டுள்ளன இந்த வஞ்சிப்பில்.

""பைலின்'' புயலின் விளைவாகத் தான் இருக்க வேண்டும் இந்த இடர். இந்த புயல் காற்றானது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 1100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டு இந்தியாவுக்கு கிழக்காக நகரத் தொடங்கியது. ஆனாலும் இதனால் இலங் கைக்கு எந்த ஆபத்தும் ஏற்படாதென வானிலை அவதான நிலையம் தெரிவித்திருந்தது.
புயல் கடக்கும் நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வடம ராட்சி கிழக்கில் இருந்து முல்லைத்தீவு வரையான கரையோரத்தில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்தது.
அதிகாலையில் தொழிலுக்கு செல்வதற்கு சென்றவர் களே கடல் கொந்தளிப்பை அவதானித்தனர். அது மட்டுமல்லாது தங்களது உடமைகள் கடலோடு அடிபட்டு விட்டதையும் கண்டனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சுனாமி பேரிடரின் பின்னர் கரையோர மக்கள் தங்களுக்கு வாழ்வளிக்கும் கடல் தாயுடன் கோபமாக இருக்கின்ற னர். உடமைகளுக்கு அப்பால் உயிர்களை எல்லாம் ஒரு அதிகாலைப் பொழுதில் அழித்துவிட்ட கொடு மைக் காரியாக கடல் தாய் மாறுவதற்கு நாம் என்ன துரோகம் செய்தோம் என்பதே அவர்களது கோபத் துக்கான காரணமாக இருக்க வேண்டும்.
ஆனாலும் காலம் எமக்கு தந்த பரிசு அது என்பது அவர்களது எதிர்கால மீண்டெழுகைக்கு காரணமாகி யது. தொடர்ந்து போர்ச் சூழல் அந்த மக்களை நிலை குலையச் செய்ய, 2009 இற்குப் பின்னர் படிப்படி யாக மீள் குடியேறி தமது வாழ்வாதாரத்தைக் கட்டி யயழுப்பும் முயற்சியில் அந்த மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல ஈடுபட்டுக்கொண்டிருக்கின் றனர்.
இழந்த எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் உதவி அமைப்புக்களின் அனுசரணையுடன் ஒரு படகுடனாவது கட லோடும் அவர்களது முயற்சி வீட்டில் அடுப்பு புகையும் அளவுக்கு மாற்றப்பட்டிருந்தது.
இப்படியான சிறு முயற்சி அந்தக் கடற்கரை ஓரங்களில் மீளவும் ஒரு உயிர் ஓட்டத்தை ஆரம்பித்தது. ஆனாலும் நேற்று நள்ளிரவு ""பைலின்'' புயல் தாக்கத்தால் கடல் தாய் சீற்றம் கொண்டு பாவப்பட்ட மக்களின் ஆரம்ப கைத் தடங்களை அழித்து சென்றிருக்கி றாள்.

வடமராட்சி கிழக்கின் மணற்காடு, வண்ணான் குளம், கட்டைக்காடு, ஆழியவளை, வெற்றி லைக்கேணி, தாளையடி, முல்லைத்தீவில் செம்மலை, தீர்த்தக்கேணி உள்ளிட்ட கரை யோர மக்களின் வாழ்வாதார உபகரணங்கள் கடல் கொந்தளிப்பில் அள்ளிச் செல்லப்பட் டன.
பெரியளவில் வெளித் தெரியாத இடராக இது அமைந்திருக் கிறது. ஆனால் கரையோர மக்கள் ஒவ்வொருவரினதும் பல லட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் கடலில் அள்ளிச் செல்லப்பட்டுள்ளன.
எந்த பாவமும் செய்யாத அந்த மக்கள் அதிகாலையில் தொழில் செய்ய முடியாமல் அந்தரிக்க விடப்பட்டுள்ளனர். அவர்களின் அழுகை "கடல்தாயே நாம் உனக்கு என்ன துரோகம் செய் தோம் ஏன் இன்னும் எங்களை வஞ்சிக்கிறாய்' என்ற வாறு நீழ்கிறது.
நன்றி சூரியகாந்தி (13.10.2013)

Post Comment

கருத்துகள் இல்லை: