திங்கள், அக்டோபர் 28, 2013

நிறுத்து: உயிராபத்து!


அபிவிருத்தி பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் கிளிநொச்சிக்கு ரயில் வந்திருக்கிறது. இது பொதுப்போக்குவரத்தின் திருப்புமுனைதான். அவசரக்காரர்களின் தேவைகருதி அரைகுறை பணிகளுடன் வரவழைக்கப்பட்டிருக்கும் ரயில் சேவை மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
சில இடங்களில் சமிஞ்ஞைகள் இருந்தாலும் பலஇடங்களில் அவை அமைக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து தவிர்க்கமுடியாததாகியுள்ளது.

குற்றவாளிகள் என்று அரசுப்பக்கம் கைநீட்டி னாலும் தவறுகள் பொதுசனங்கள் மீதும் இருக்கிறது.

புதிய வரவு
ரயில் வடக்குக்கு நீண்ட காலத்தின்பின் புதிய வரவாக உள்ளது.இதனால் ரயில் போக்கு வரத்தின்போதான விதிமுறைகள் கட்டுப்பாடு கள் குறித்த அறிவு பெரும்பாலான மக் களிடத்து இருப்பதை எதிர்பார்க்கமுடியாது.
எனவே மக்களை விழிப்படைய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளது கடமையாகும். இல்லாதவிடத்து மக்களின் கட்டுமீறல்கள் உயிராபத்துக்களை ஏற்படுத் தும். அதன்பின் ஆர்ப்பாட்டம் நடத்து வதில் எந்த அர்த்தமும் கிடையாது.
கிளிநொச்சியில் கடந்த வாரம் இடம் பெற்ற சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.
ரயில் வரவுக்காக கனகபுரம் வீதியில் இரு பக்கமும் ரயில் கடவைகள் மூடப்பட்டி ருந்தன. "என்ன குறுக்கால போவார் கம்பிய றோட் டில் போட்டிருக்கிறாங்கள்' என்பதுதான் பலபேரது நினைப்பு. நினைப்பு மட்டுமல்ல அதை தாண்டியும் சென்றுவிட்டனர். ரயில் வந்துகொண்டிருந்தது. ஐந்து நிமிடங்களில் கனகபுரம் வீதியை ரயில் கடக்கவேண்டும். நல்லவேளையாக கடமையிலிருந்த பொலிஸார் விரைந்து செயற்பட்டு பெரும் விபத்தை தவிர்த்துக்கொண்டனர்.

குறுக்கு வீதிகள்
ஏd9 வீதிக்கு மேற்குப்பக்கமாக ரயில்பாதை செல்கிறது. இந்தபாதையை இடையிடையே கிராமப்புற வீதிகள் குறுக்கறுக்கின்றன. இவற் றுக்கான பாதுகாப்பு கடவைகள் முழுமைப் படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு கடவையையே மீறிச் செல்லும் மக்கள் பாதுகாப்பற்ற கடவையில் பொறுமை காப்பார்களா என்ன?

மக்கள் பொறுப்பு
விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணமாக ரயிலையோ,அதிகாரிகளையோ உடனடியாகக் குற்றம்சாட்டிவிடமுடியாது. பொதுமக்கள் தான் பொறுப்புடனும், விழிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
பரீட்சார்த்த சேவையிலேயே கிளிநொச் சியில் ஒரு பலியயடுப்பு நிகழ்ந்திருக்கிறது.இதை மக்கள் நினைவில்கொள்ளவேண்டும்.
தற்போது கிளிநொச்சிவரை ரயில் சேவை இடம்பெறுகிறது. தினமும் மூன்று சேவைகள். நேர அட்டவணைப்படி குறிப்பிட்ட கட வைகளைத் தாண்டிச்செல்லும் நேரத்தை மக் கள் அவதானித்துக்கொள்ளவேண்டும்.
அதிகாரிகளது அறிவிப்பை முந்திக்கொண்டு, மக்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த இதுவே சாத்தியம்.
ரயில்பாதைகளில் குழந்தைகளை விளை யாடவிடுவது, சிறுபிள்ளைகளைகளையும் முதி யவர்களையும் தனியே ரயில்பாதையை கடக்க விடுவது, ரயில் வருவதற்கான சமிஞ்ஞை விளக்கு களை அலட்சியம் செய்வது போன்ற காரியங் கள் உயிராபத்தை உண்டுபண்டும். கண்ணி மைக்கும் நேரத்தில் விபத்து நடந்து முடிந்து விடும். அதன்பின் ஏங்குவதில் பயனில்லை. தமது உயிரைப்பாதுகாத்துக்கொள்ள ஒவ் வொருவரும் அக்கறை கொள்ளவேண்டும். இது பொது விழிப்புணர்வாகிவிடும். புதிய வரவை இழப்புக்கள் இன்றி வரவேற்போம்.

நன்றி சுடர்ஒளி 18-24.09.2013

Post Comment

கருத்துகள் இல்லை: