நாங்கள் வளர்த்த கிளிப்பிள்ளை -அவள்
பெண்புலிப் பிள்ளைதான்
சுடு கலன் ஏந்தா போராளி!
பேனா முனை எடுத்து -அவள்
ஆனான பிரச்சினைகள்
அத்தனையும் பேசியவள்
குறும்படம் எடுத்து - அவள்
நெடும்வழி சென்று
அறவழிப் போராடினாள்
துயிலறைக் காவியங்களை - அவள்
துலக்கமாய் படைத்து
மாவீரர் புகழ்பாடினாள்
தொலைக்காட்சி முன்தோன்றி - அவள்
தொகுப்பளினியுமாகி
தொடர்ந்தாள், சேதி சொன்னாள்
குணக் குன்று - அவள்
குடும்பியில் பிடித்தனர் கோழைகள்
குருதியில் கிடந்தாள்
குருதியில் கிடந்த - அவள்
குவலயம் பார்த்தது
குட்டு வெளிப்பட்டது படுவீர் துயரம்
பூமுகன்(19.11.2013 am 2.51)
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக