திங்கள், அக்டோபர் 28, 2013

குருக்கள் செய்தால்....



""ஆலயம் தொழுவது சாலமும் நன்று... ஆனால் நல்லூரானை அரசியல் வாதிகள் தொழுவது நன்றல்ல.''
பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கருத் தில் உடன்பாடு இருக்காது. ஆனால் சில வேளை களில் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்.
எங்கள் நாட்டு அரசியல் திட்டங்களும் அர சியல் விண்ணர்களும் இனிவரும் நாட்களில் இதை வலியுறுத்தும்போது நாம் அதை எற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.

பெரும்பாலும் நல்லூர்க்கந்தனை தரிசிக்க குடும்பமாக,சுற்றத்தாருடன்,அயலவருடன் என்று எல்லோரும்  வழிபடப் போவது வழக் கம். அதிலும் தேர்த் திருவிழா என்றால் வெளி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவார் கள். தன்னை நாடிவரும் பக்தர்களில் யார் அர சியல்வாதி  யார் சாதாரண குடி மகன்  என்ற பேதம் கந்தனுக்குக் கிடையாது. யாழ்ப்பாணத்துக்கு வருகின்ற பிரபலங்கள் எல்லாமே மேலாடை யைக் கழற்றி விட்டு, அர்ச்சனைத் தட்டுகளோடு நல்லூரானை வழிபடாமல்  போனது கிடை யாது. ஏனெனில் யாழ்ப்பாணத் தின் அடை யாளமாக மாறிப்போய் விட்டது நல்லூர்.
வடக்குமாகாணத்துக்கு முதன்முறையாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான தேர் தல் பிரசாரப் பணிகளை  வேட்பாளர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.   இந்த வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்   வேட்பாளர்களும் தமது  ஆதர வாளர்கள் சகிதம்   பிரசாரக் களத்தில் குதித் துள்ளனர். தேர்தல் பற்றியோ பிரசாரம் பற் றியோ நல்லூர்க் கந்தனுக்கு எதுவும்  தெரி யாது. அவர் ஒரு அப்பாவி. 
சம்பந்தரும் கூட்டமைப்புச் சார்பாக தேர் தலில் போட்டியிடும் முதலமைச்சர் வேட்பாள ரான விக்கி ஐயாவும் நல்லூர் தேர்த்திரு விழாவுக்கு  கும்பிடப் போயிருந்தவை. இதை மீடியாகாரர் போட்டோ, வீடியோ எடுத்தது பரவலா செய்தியும் வந்திருந்தது..
 நிறை மீடியாக்களின்ர திருவிழாக்கால சிறப்பு அலுவலகங்கள் ஏராளமாக நல்லூர் ஆலயச் சூழலில் இருந்தது. அப்பிடித்தான் யாழ்ப்பாணத்து ரீவி ஒன்றும்  தனது ஒளிபரப்புக் காரியாலயத்தை வைச்சு போற, வாற பக்தர் களை இழுத்துப் பிடித்து தேர்த் திருவிழா பற்றி கருத்துக் கேட்டுக்கொண்டு இருந்திச்சினம். அப் பிடி கருத்து கேக்கேக்க "மைக்கை' சம்பந்தர் ஐயாட்டையும் நீட்டியிருக்கினம். அவரும் ஏதோ கருத்துச் சொல்லியிருக்கிறார்.

இது இணக்கப்படுத்தல்காரரின்ர காதிலையும்  கேட்டிட்டுதுபோல. வேட்டியைக் கட்டிக் கொண்டு கோயில் வாசல்ல அமைச்சருக்குப் பின் னால நிண்டு  அடியார்களுக்கு  ஏதோ அள்ளி  வழங்கிக்கொண்டிருந்த ஒருத்தர், அரை வாசியோட முருகனோட கோவிச்சுக் கொண்டு வீட்டை வந்திட்டார். வந்தவர் சும்மா நிற் கேல்லை. சூட்டோடுசூடா பத்திரிகை களுக்கு ""கோயிலுக்கு வந்து கூட்டமைப்பு பரப் புரை செய்யினம். பாத்துக்கொண்டு பேசாம இருக் கிறார் முருகன்'' எண்டு கண்டன  அறிக்கை எழுதி அனுப்பியும் போட்டார்.
கோயிலுக்கு போறது சாமி கும்பிடத் தான். ஆனால் இப்ப எல்லாம் அப்பிடி இல்ல. ஆற்ற  கழுத்தில பெரிசா ஏதும் தொங்குது, பிடுங்கினா எவ்வளவு தேறும் எண்டு ஒரு கூட்டம். யார் வாயில இருந்து என்ன கதை வருகுது எண்டு கேட்டு வீட்டுக்கு வந்து போட்டு குடுக்க இன்னொரு கூட்டம்.  இன்னும் கன நோக்கத்துக்காகத் தானே கன பேர் கோயிலுக்குப் போகினம். பக்திப் பர வசத்தோட கும்பிடப்போனா அடுத்த வன் என்னசெய்தா எங்களுக்கென்ன? நான் வந் தது கோயிலுக்கு சாமிகும்பிட. அதை கச்சிதமா முடிச்சிட்டு வீட்டுக்குப் போவம் எண்டு பெருந்தன்மையோட திரும்பியிருக்கவேணும்.
இணக்ககாரரும் அங்க என்ன கும்பிடவோ போனவை. அவை அங்க என்ன செய்தவை எண்டதை பல்லாயிரம் பக்தர்களும் கண்டவை. ஆனால் கோயில் கும்பிடப்போன சம்பந்தரும் விக்கினேஸ்வரனும்தான் மேடை போட்டு பரப்புரை செய்தவை எண்டு தங்கட கூத்துக் களை மறைக்க அறிக்கை வெளியிடுகினம்.
இப்பிடியே போனால் கொஞ்ச நாளில தேர் தல் காலத்தில் முருகனுக்கு தேரும் இழுக்கக் கூடாது, இன்னார் இன்ன இன்ன இடத்துக்கு மட்டுமே போகமுடியும் எண்டு லிஸ்ற் தருவினம். கவனம்!
பாவம்  முருகனுக்கு இது ஒண்டும் தெரி யாது.

நன்றி சுடர்ஒளி 11.-17.09.2013

Post Comment

கருத்துகள் இல்லை: