ஞாயிறு, நவம்பர் 10, 2013

மர்மங்கள் சூழ்ந்த விடுமுறை

வரலாறு தன்கடமையைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் காலத் துக்காலம் மாற்றங்களும் எதிர்விளைவுகளும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. தமிழினத்துக்கு இந்த வரலாற்று மாற்றம் எதிர்விளைவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.
நினைப்பது ஏதோ நடப்பது ஏதோ என்பது போல சில ஊடறுப்புகள், திட்டமிட்ட செயற்பாடுகள் தமிழினத்தின் வாழ்வியலையும் இருப்பையும் கேள்விக் குறியின் பக்கம் இழுத்துச்செல்கின்றன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்குத் தெரிந்த வகையில் தேசிய உணர்வுடன் வரலாற்றுக் காலம் தொடக்கம் இன்றளவும் தமிழ் இனத்துக்கே என ஒரு பெரும் தூணாக இருந்திருக்கிறது. இதற்கென பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் தொடக்கம் வருடந்தோறும் கல்வி கற்று வெளியேறிய மாணவர்களும் அரும் பணியாற்றியிருக்கின்றனர்.
இத்தகைய உயிரையே துச்சமென மதித்து தேசியத்துக்காகவும் இன விடுதலைக்காகவும் தமிழ் கலாசார பண்பாட்டு விழுமியங்களின் வளர்ச்சிக்காகவும் பணியாற்றி வரும் ஓர் உயர்ந்த சமூக அந்தஸ்துடைய நிறுவனமாகவே யாழ். பல்கலைக்கழகம் பார்க்கப்படுகிறது.

கடந்தவையும் நிகழ்ந்தவையும்
கடந்த காலங்களில் யாழ். பல்கலைக்கழகம் தமிழ் மக்களுக்காகவும் தமிழ்த் தேசியத்துக்காகவும் அளப்பெரும் பணியாற்றி இருக்கிறது. அதன் உச்சக் கட்டம் "பொங்கு தமிழ்' போராட்டம். உல கத் தமிழரையே ஒருங்கிணைத்த இந்தப் போராட்டம் ஈழத் தமிழ ரின் பிரச்சினையை சர்வதேசத் துக்கு எடுத்துச் செல்வதற்கு மூலக் கூறாக்கியது. மாணவர் சக்தியும் உச்சகட்ட வெளிப்பாடான அந்தப் போராட்டத்தை மையமாக வைத்து அதற்கு முன்னான, பின்னான காலப் பகுதிகளை ஒருகணம்  சிந்திக்க வேண்டியது அனைவரதும் கடமையாகிறது. தேசியத்துக்காக, தமிழ் மக்களின் சுய கெளரவத்துடனான வாழ்வுக்காக இந்தப் பல்கலைக்கழகத்திலேயே எத்தனையோ மாணவர்கள் தம் உயிரை ஈந்திருக்கின்றனர்.
வரலாற்றின் நிர்ப்பந்தம் காரணமாக பட்டதாரிகளாக வெளியேற வேண்டியவர்கள் போர்க்களத்தில் மாண்டு மறவர்களான வலியும் வேதனையும் இன்றும் எம் நெஞ் சங்களைத் தொட்டுச் செல்கின்றன.
எதிர்ப்புக்கள் இடையூறுகள் அன்று இருக்கவில்லை என்று எவரும் கூறிவிட முடியாது. இன்று ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என அரசு சொன்னால் அன்று அது இல்லை என்ற காலம். அப்படி ஜனநாயகம் இல்லாத சூழலில்  தேசத்துக்கு பணியாற்ற மாணவர்கள் மறுக்கவில்லை. அதற்கு நிர் வாகம் தடையாக இருக்கவும் இல்லை.

அரசின் அறிவிப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இந்த காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் பொதுநலவாயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்க ளையோ எதிர்ப்பு ஊர்வலங்களையோ நடத்தக்கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கையாக குறித்த காலப்பகுதியில் ஒருவார விடுமுறையை அறிவிக்குமாறு குறித்த சில பல் கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவுறுத்தி இருக்கிறது. இருப்பினும் அந்த அறிவிப்பில் கல்விச் செயற்பாடுகளைப் பாதிக்காத வகையில் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை வெளியேறுமாறு கோரப்பட்டதாகத் தெரிய வருகிறது.

கட்டாய பணிப்பு
இந்த அறிவிப்பின்படி விடுதிகளில் இருக்கும் மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்என யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தினர் அறிவித்திருக்கின்றனர்.
இதேவேளை மாணவர்கள் விடுதிகளில் இருந்து வெளியேறி வீடுகளுக்குச் சென்றால் கற்றல் செயற்பாடுகளைத் தொடர முடியாது என்பதற்காக கல்விச் செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விடுமுறை
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்தேறிய சம்பவங்களைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் முதலாம் திகதிவரை யாழ்.பல்கலைக்கழக செயற்பாடுகளை நிறுத்தி விடுவதற்கு நிர்வாகம் தன்னிச் சையாக முடிவெடுத்திருக்கிறது. "கற்றலுக்கான விடுமுறையை தற்போது விடப்படுகிறது. டிசெம்பர் 2 ஆம் திகதி முதல் வழமையாகப் பல்கலைக்கழகம் இயங்கும்.' என கலைப்பீட பீடாதிபதி தெரிவித்தார். இதேவேளை  மாணவர்கள் இந்த காலப் பகுதியில் பல்கலைக்கழகத்து நுழைய முடியாது என கட்டாயமாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

விரிவுரைகள் முடிவுறவில்லை
இந்த விடுமுறை மாணவர்களின் அரையாண்டுப் பரீட்சைக்கான விடுமுறையே எனவும் டிசெம்பர் இரண்டாம் திகதி வழமையாக பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆரம்பமாகும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் சாட் டுச் சொல்லியிருக்கின்றனர்.
ஆனால் விரிவுரைகள் எவையும் முடிவுறவில்லை. இன்னும் இரண்டு வாரங்களுக்கான விரிவுரைகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. அதை டிசெம்பர் இரண்டாம் திகதி தொடக்கம் இரண்டு வாரங்களுக்கு நடத்திய பின்னரே கற்றலுக் கான விடுமுறையை பரீட்சையும் நடத்த நிர்வாகத்தினர் திட்டமிட்டி ருக்கின்றனர் என பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்தார்.

உணர்வை மறுக்கும் அதிகாரம்
பொதுநலவாய மாநாடு நடை பெற்று முடிந்ததும் அடுத்த வாரத் தில் "மாவீரர் வாரம்'  ஆரம்பமா கிறது. எனவே இந்தக் காலப் பகுதி யில் பல்கலைக்கழகம் இயங்கி னால் மாவீரர் தினத்தைக் கொண்டாடுவர் எனவும் இதனால் அசம் பாவிதங்கள் எதுவும் நிகழலாம் எனவும் எண்ணும் நிர்வாகத் தலைமை தன்னிச்சையாக அடுத்த இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அறிவிப்பை விடுத்துள்ளது. அதேகாலத்தில் பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் எவரும்புக முடியாது என கட்டளையிட்டுள்ளது.

ஊருக்கு நடித்தல்
பல்கலைக்கழகத்தில் போருக்குப் பின்னதான காலப் பகுதியில் சமூக, தமிழ் அரசியல் பங்குபற்றல்கள், பணியாற்றல்கள் மாற்றம் அடைந்து வருகின்றன.  சிலர் தம்மை தமிழ்த் தேசிய வாதிகளாகக் காட்டிக் கொண்டு மறுபுறத்தில் அதற்கு எதிரான செயற்பாடுகளைத் திட்டமிட்டு மேற் கொண்டு வருகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

மாற்றமடையும் மாணவத் தலைமை
எமக்கு குறித்த காலப்பகுதியில் கிடைக்கப்போகும் ஒரேஒரு சந்தர்ப்பம் கடந்த 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை. அன்று "பொதுநலவாய மாநாட்டில் பங்குகொள்ளும் தலைவர்கள் இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் கரிசனை காட்ட வேண்டும். இறுதிப் போரில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்த பொதுநலவாய மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்' என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவனவீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்றை நடத்துவதற்கு மாண வர்கள் சிலர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் இதற்கு யாழ்.பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் உடன் படவில்லை. "நாம் இதற்கு ஆதரவு தரமாட்டோம். எதிர்காலத்தில் எமக்கு இதனால் ஆபத்து ஏற்படலாம்' என்று மாணவர் ஒன்றியத்தினர் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்கவில்லையாம்.

பழி ஏற்றல்
சரி பிழைகளுக்கு அப்பால் சில மாணவர்களது உணர்வு பூர்வமான செயற்பாடுகள் இன்றளவும் மறைந்து போகவில்லை. அவர்களின் பணி தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதைப் பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது சில மாணவர்களோ தடுத்து விடமுடியாது. ஆனால் சிலரது திட்டமிட்ட செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் அவமானங்களை யாழ்.பல்கலைக் கழக சமூகம் ஏற்றாக வேண்டும். இன விடுதலைக்காக உயிர் நீத்த வர்கள் என்றென்றும் மனதில் பூசிக்கப்படுவர். இதை எவராலும் கட்டுப்படுத்த முடியாது. உயிர் துறந்துவிட்ட உன்னத மனிதர்களுக்காய் தீபங்கள் சுடர்ஒளிவிடும். அந்த ஒளிக்கீற்றில் திட்டமிட்ட நயவஞ்சக செயற்பாடுகள் அழிந்து போய் விடும். அன்று அவர்கள் கவலையடைவர். கண் ணீர் விடுவர். பெருநெருப்பில் கருவான மறவர் நாள் என்றென்றும் தமிழ் மனதை விட்டகலாது. 

பூமுகன்

நன்றி சூரியகாந்தி 10.11.2013

Post Comment

கருத்துகள் இல்லை: