செவ்வாய், அக்டோபர் 29, 2013

உயிர் பறிப்புக்கு யார் காரணம்?

சதீஸ்குமாரின் எதிர்கால கனவு தட்டா தெருச்சந்தியில் கலைந்துபோயிருக்கிறது. அந்த நிமிடம் வரை எத்தனையோ ஆசைகளைக் கொண்டிருந்த அவனது பயணத்தில் இணை பிரிந்து போயிருக்கிறது. திருமணம் முடித்து ஏழு மாதங்களேயான சதீஸ்குமார் கீர்த்தனா மீது வைத்திருந்த பாசம் தட்டாதெருவில் அவள் குற்று யிராய் கிடக்கையில் கொட்டித் தீர்த்தது. பார்ப்பவர்கள் மனதை பிசைந்த அந்தக் கொடூர விபத்துக்கு யார் காரணம்? யார் காரணமாக இருந்தால் என்ன போன உயிர் திரும்பிவந்து விடுமா?
ஆசிரியரான சதீஸ்குமாரும் மனைவியும்

திங்கள், அக்டோபர் 28, 2013

தந்தி அறுந்த வீணை


நடைபெற்றுமுடிந்த வடமாகாண சபைத் தேர்தல் பல மறந்துபோன கதைகளைப் புதிப்பித்திருக்கின்றன. தாம் எங்கு இருக் கிறோம். எதைச் செய்கிறோம் என்ற சிந்திப் பையும் தூண்டியிருக்கின்றது.
கண்கெட்ட பின் சிலர் சூரிய நமஸ்காரத் துக்குத் தயாராகியுள்ளனர்.
அஸ்த்தமனத்தின்போது விடியலுக்காகவும் விடியலின்போது அஸ்த்தமனத்துக்காகவும் அழுத சிலரது புருவங்கள் மக்களால் திறக்கப் பட்டுள்ளன.

நிறுத்து: உயிராபத்து!


அபிவிருத்தி பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் கிளிநொச்சிக்கு ரயில் வந்திருக்கிறது. இது பொதுப்போக்குவரத்தின் திருப்புமுனைதான். அவசரக்காரர்களின் தேவைகருதி அரைகுறை பணிகளுடன் வரவழைக்கப்பட்டிருக்கும் ரயில் சேவை மக்களுக்கு ஆபத்தாக மாறியுள்ளது.
சில இடங்களில் சமிஞ்ஞைகள் இருந்தாலும் பலஇடங்களில் அவை அமைக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்து தவிர்க்கமுடியாததாகியுள்ளது.

கணக்குக்காட்டல்


அபிவிருத்திப் புள்ளிவிவரங்களுடன் வந்த அரச அதிபர்கள்

"நான் வந்திருப்பதன்நோக்கம் ஐ.நாவின் கொள்கைகள் எல்லா மட்டங்களிலும்  நடை முறையில் உள்ளதா என்பது குறித்து ஆராய் வதற்கு, இலங்கையின் வடக்கு கிழக்கில்  வாழும் மக்கள் அனுபவித்துக் கொண்டி ருக்கும் மனித உரிமைகள் குறித்து  தரவு சேகரிப்பதற்கு' பொது நூலகத்தில் நடை பெற்ற நிகழ்வின் இறுதியில் உரையாற்றிய  நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.அவர் இப்படி ஒரு கருத்தை கூறுவதற்கு காரணம் எங்கள் அதிகாரிகள் தான்.

சாப்பிட்டுப் போங்கோ.....!


"நாளைக்கு மீற்றிங்' என்ற தகவலோடு இன்று தான் பல அலுவலகங்களுக்கு கடிதம் வந்து சேர்ந்தது. முக்கிய கலந்துரையாடல் இருப்பதால் சம் பந்தப்பட்ட அனைவரையும் தவறாது கலந்து கொள்ளவேண்டும் அன்று அந்தக் கடிதத்தில் குறிப் பிடப்பட்டிருந்தது.

குருக்கள் செய்தால்....



""ஆலயம் தொழுவது சாலமும் நன்று... ஆனால் நல்லூரானை அரசியல் வாதிகள் தொழுவது நன்றல்ல.''
பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கருத் தில் உடன்பாடு இருக்காது. ஆனால் சில வேளை களில் உடன்பட்டுத்தான் ஆகவேண்டும்.
எங்கள் நாட்டு அரசியல் திட்டங்களும் அர சியல் விண்ணர்களும் இனிவரும் நாட்களில் இதை வலியுறுத்தும்போது நாம் அதை எற்றுக் கொள்ளத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.

வருகிறாள் தேர்தல் தேவி


--
யாழ் தேவியில் நாங்கள் காதல் செய்தால்
யாழ் மீட்டுமே ரயில் தண்டவாளம்
யாழ் மண்ணிலே நாங்கள் கால்பதிக்கவே
வாழ்த்துரைக்குமே ரயில் தண்டவாளம்
எங்கடை மக்களுக்கு d ஓர்
உறவுப் பாலம் நீ d சிறு
சங்கடம் இல்லாமல்
தேசிய சினேகம் வளர்த்திருப்பாய்.....

--

சில்லறைச் சண்டை


அவரது முகத்தைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது.வாய் திறந்து கேட்பதற்கு வெட்கம்.போய்ச் சேரும்வரை மனசுக்குள் சில்லறைச்சண்டை. கடைசிவரை பிரச்சினை தீரவில்லை. யாழ்ப்பாணம் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இருந்து புறப்பட்ட பஸ்.கிளி நொச்சிக்கு செல்கிறது. நானும் கிளிநொச்சி செல்லவேண்டும். 93 ரூபா ரிக்கற். நூறு ரூபா கொடுத்தேன். எனக்கு அருகில் இருந்தவரும் அப்படித்தான். ஆனால் அவருக்கு பத்து ரூபா திருப்பிக் கொடுக்கப்பட்டது.

தமிழருக்கு இலுப்பம்பூ சர்க்கரையா?



தமிழ் போசும் மக்கள் செறிந்துவாழும் வடக்கில் முதல் முறையாக மாகாண சபைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இது உலகறிந்த உண்மை. ஆனால் தாம் வழங்கிய ஆணையை கூட்டமைப்பு சரியாகப் பயன் படுத்துகிறதா என்பதில் வாக்களித்த மக்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.இதற்கு முழுமுதற் காரணமும் கூட்டமைப்பு கட்சிகளே.

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

இன அழிப்பா?கட்டாய கருகலைப்பு


கிளிநொச்சி மாவட்டத்தில் கரையோரக் கிராமங்கள் அவை. கிளிநொச்சிக்கு மேற் காக அந்த மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களாக இருக்கின்றன. பெரும் பாலும் கடற்றொழிலை பிரதான மாகக் கொண்டு, மற்றைய தொழில் களையும் செய்யக் கூடிய குடும்பங் கள் இங்கு வசிக்கின்றன. 
கூடுதலாக இந்தக் கிராமங்களி லுள்ள குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவையாக அடை யாளம் காணப்பட்டுள்ளன.

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

வேண்டாம் இருதலைக் கொள்ளிகள்



தமிழ் மக்கள் தமது எதிர்காலம் குறித்த முடிவுகளை ஒன்றிணைந்து எடுத்திருக்கின் றனர் என்பது வரலாற்று மாற்றம். சமூகத்தில் நடி பங்கேற்றிருக்கும் மாய மனிதர்களிடையே தமக் கான எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சரி யான பாதையை மக்கள் தெரிவுசெய்வதென்பது மிகக் கடினமானது. இந்தக் கடினமான பாதையில் நடிகர் களது பாத்திரங்களை எளிதில் விளங்கிக் கொள் வது அசாதாரணம்தான்.இப்படியான சிந்தனையை மழுங்கடிக்கும் காலத்துக்குள் ளேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

திங்கள், அக்டோபர் 14, 2013

இன்னும் ஏன் வஞ்சிக்கிறாய் கடல் தாயே!


நள்ளிரவு 12 மணி இருள் சூழ்ந்திருந்த கடற்கரை பேர் இரைச்சலோடு பொங்கி எழுந்தது. கடற்கரை கிரா மங்கள் அந்த நடு நசியில் உறங்கியிருந்ததால் எதையுமே அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தத் தரு ணம் பார்த்து கடல் சீற்றம் கொண்டு களவாடிச் சென் றிருக்கிறது. பல மீனவக் குடும்பங்களின் சொத்துக் கள் நாசம் செய்யப்பட்டுள்ளன இந்த வஞ்சிப்பில்.