வியாழன், நவம்பர் 28, 2013

கனவு மெய்ப்பட

விழிநீர் சொரிந்து
வளி(ழி) நெடுக்கும்
விளக்கேற்றினோம்

சப்பாத்துகால்களால்
ஏறிமிதித்தனர்
கடந்துபோனவருடத்தில்


ஓயோம் உணர்வு
விட்டகலோம்
சாயோம் ஒளிபடு
பொழுதில் விளக்கேற்றாமல்-என்று
அப்பொழுதில் உறுதியெடுத்தோம்
அடுத்தவருடத்துக்காய்

வருடம் பிறந்து
கார்த்திகை உருண்டது
நஞ்சுக்கிழங்கு
மண்பிளந்தது

கருமேகம் கூடிவரும்
காவலர்கள் நாளதனில்
இருநிறத்தாள் இதழ் எடுத்து
சாத்திஒரு சத்தியம் செய்தோம்

விலங்கொடிய எம்
இனம்வாழவளிதந்த
வேங்கைகளே நாம் மறவோம்

வீரவரலாறுகொண்டு
வெல்வோம் விதைத்தவர்கனவு
மெய்ப்பட ஈழமதில்வாழ்வோம்!

Post Comment

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்... இராஜ முகுந்தன் அவர்களுக்கு நன்றி...

இராஜ முகுந்தன் சொன்னது…

அருமை வரிகள் ...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வாழ்த்துக்கள்...

vkm சொன்னது…

மிகவும் நன்றிகள் இருவருக்கும்

இராஜ முகுந்தன் சொன்னது…

நன்றிகள் அண்ணா. புதியவர்களை ஊக்கப்படுத்த உங்களைப் போல ஒருவராலும் முடியாது அண்ணா. தொடரட்டும் அண்ணா உங்கள் பணி.

vkm சொன்னது…

நிச்சயமாக...இருவருக்கும் நன்றி