Saturday, February 11, 2012

நியாயம் கிடைக்குமா ? ஏங்கும் விவசாயிகள்


""ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம்.'' "நாளைக்குப் பாற்கஞ்சி...''

""சும்மா போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.''

"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே''

முருகேசனின் கனவு மழையோடு கரைந்துபோக ராமு ஏதுமறியாதவனாய் தன் விருப்பத்தையே கேட்டுக்கொண்டு இருந்தான்.

"அநேகநாள் பழக்கத்தினாலே நாளைக்கு என்று மட்டுமே அவளால் சொல்லமுடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றில் நெருப்பை அள்ளிக்கொட்டியது.''

--

ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தின் வாழ்வைச் சித்தரிக்கும் இந்தச் சிறுகதை ஈழத்தில் உருவான ஒரு அற்புத படைப்பு. சி.வைத்திலிங்கத்தின் எண்ணங்கள் இளையோடிய இந்தச் சிறுகதை எல்லோர் மனதிலும் பொறிபோலத் தைப்பது தவிர்க்க முடியாதது.

ஒரு ஏழை விவசாயியின் கனவுகளையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கொண்டுசெல்லும் இந்தக் கதையில் ராமு என்ற சிறுவனின் பாத்திரப் படைப்பும் அவனது ஏக்கமும் உணர்ச்சிபூர்வமானது.

இன்று இப்படித்தான் பல விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை ஏக்கத்துடன் கழிக்கின்றனர். அவர்களது ஆசைகளும் கனவுகளும் எதிர்பார்ப்புக்களும் ஏதோஒரு கெடுதல்களால் நெருப்பில் பொங்குவதுபோல மாறிவிடுகின்றன.

நவநாகரீகம் வளர்ந்துவிட்ட இன்று விவசாயத்தைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நெருக்கடியே தோன்றியுள்ளது. அவர்கள் ஏனைய வாழ்க்கைத் தேவைகளுக்காக ஒவ்வொருநாளும் போராட வேண்டியவர்களாகவே மாறியுள்ளனர்.

கிளிநொச்சியில் ஒரு விவசாய குடும்பஸ்தர் தனது நாளாந்த வாழ்க்கையைப் பூர்த்தியாக்குவதற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் வால்களையும் விவரிக்கும்போது, ஈழத்து எழுத்தாளர் சி.வைத்திலிங்கம் படைத்த "பாற்கஞ்சி'' படைப்பு ஞாபகத்துக்கு வருவது தவிர்க்கமுடியாமல் போயிருந்தது.

கிளிநொச்சியில் காலபோக நெற்செய்கைக்கான அறுவடை முடிவுற்றதும் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்யப் பலநோக்குக் கூட்டுறவுச் ங்கங்களூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அர அதிபர் தெரிவித்திருக்கிறார்.

ஏழை விவசாயிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். இருப்பதற்கு, உறங்குவதற்கு, விருந்தாளி வந்தால் உபரிப்பதற்கு ஒரு உருப்படியான வீடற்ற விவசாயிகளுக்கு தாம் அறுவடை செய்யும் நெல்லை நியாயமான விலைக்குச் ந்தைப்படுத்த முடியும் என்ற செய்தி அடுத்த ஆண்டில் அவர்களின் முயற்சியை இரட்டிப்பாக்கும் என்பது உண்மைதான். ஆனால், கடந்த காலங்களில் இப்படியான நெல் கொள்வனவு எந்தளவுக்கு நடைபெற்றது என்பதை அந்த ஏழை விவசாயி புரட்டியபோது அந்தக் கனவுகளெல்லாம் அவர்களிடத்திலிருந்து ட்டென்றேகலைந்துபோவதாகத் தென்பட்டது.

"இந்த ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைமூலம் கிடைக்கும் நெல்லை விவசாயிகளிடமிருந்து தீர்மானிக்கப்பட்ட விலையில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு பலநோக்குக் கூட்டுறவுச் ங்கங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் கடந்த வருடம் காலபோக நெற்செய்கையின்போது நிர்ணயிக்கப்பட்ட விலைப்படி நெல்லைச் ந்தைப்படுத்த முடியும். இதுதான் அந்த மகிழ்ச்சிகரமான செய்தி.

கடந்தவருட காலபோக நெற்செய்கையின்போது சிவப்புநாடு ஒரு கிலோ 28 ரூபாவும் ம்பா 32 ரூபாவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி நெல் கொள்வனவு இடம்பெற்றால் விவசாயிகளுக்கு மூடை ஒன்றுக்கு 1,680 ரூபா கிடைக்கும். ம்பாவுக்கு 1,920 ரூபா கிடைக்கும். தனியார் இவற்றைவிட கூடுதல் விலை கொடுத்துக் கொள்வனவு செய்தால் விவசாயிகள் தமது உற்பத்தியை நல்ல வகையில் ந்தைப்படுத்தலாம். ஆனால் ""தவிச் முயல் அடிக்கும்'' தனியார் துறையினர் நிர்ணயிக்கப்பட்ட விலையிலிருந்து மிகக் குறைவான விலையிலேயே கொள்வனவு செய்ய முன்வருகின்றனர்.

நாளாந்த வாழ்க்கையுடன் போராடும் விவசாயிகள் தம்மிடம் இருக்கக்கூடிய பெறுமதி வாய்ந்த ஏதோஒரு பொருளை அடகு வைத்தோஅல்லது ஒரு நம்பிக்கையானவரிடம் கடன் பெற்@றா விவசாயத்தை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு உடனடித் தேவையாக இருப்பது அடகை மீள்வதோஅல்லது கடனைச் செலுத்துவதோதான். அதற்காக அறுவடை செய்த நெல்லை உடனடியாக விற்றேஆகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. மாறாக வீட்டில் நெல்லைப் பராமரிப்பதற்கு களஞ்சியவதிகூட அவர்களிடம் இல்லை. இதனாலும் அகப்படும் விலையில் நெல்லை விற்கவேண்டியுள்ளது.

அந்த ஏழை விவசாயி குறிப்பிடுவதும் இதுதான்.

ப.நோ.கூ. ங்கம் இதுவரை காலமும் எங்களிடம் நெல்லைக் கொள்வனவு செய்தது. எப்படியென்றால் விவசாய அங்கத்தவர் ஒருவரிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை நெல்மூடைகள் என்ற அடிப்படையில் (மிகச் öசாற்ப அளவே) தான். அதற்கும் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். நெல்லைக் கொடுத்துவிட்டால் அதற்கான பணத்தைப் பெறுவதற்கு நீண்டநாள் அலைய வேண்டும். மிகுதி நெல்லை வேறு யாருக்காவது அவர்கள் கேட்கும் விலையில்தான் கொடுக்க வேண்டும். இப்படி இழுபறிப் படுவதைவிட ஐஞ்சுபத்து நட்டம் வந்தாலும் யாருக்காவது முழுவதையும் கொடுத்து காசுகையில் கிடைத்தால் அதுதான் எமக்கு உதவியாக இருக்கும். நியாய விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ங்கங்கள் முன்வந்தால் மட்டும் போதாது. எங்களது தேவைகளையும் கஷ்டங்களையும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் செயற்பட்டால் அதுதான் எங்களுக்கு உதவியாக இருக்கும். அப்போதுதான் அவர்கள் கேட்டதைப்போல் நாங்கள் ஒத்துழைப்பு வழங்கமுடியும். கடன் தொல்லையாலும் அன்றாட வாழ்க்கைக்காகவும் எப்படியோ நெல்லை விற்றாக வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது. இதற்கு தகுந்தாற்போல் ஒரு நல்ல தீர்வை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவதே இப்போதைக்குப் பொருத்தமானது என்கிறார் அந்த ஏழை விவசாயி.

உண்மையில் வன்னியில் பெரும்பாலான இடங்களில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டாலும் அவர்களுக்கான அடிப்படை வதிகள் இன்றுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. பெரும்பாலான இடங்களில் மக்கள் இன்றும் குடிசைகளிலேயே தங்கியுள்ளனர். இவர்களது தேவைகள், எதிர்பார்ப்புக்கள் பூரணப்படுத்தப்படாது அரசின் அபிவிருத்திகளை அரசியல் போக்கில் செல்கிறது.

இந்த நிலையில் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கக் கூடியவர்கள் தங்கள் உற்பத்தியை நியாயமான விலையில் ந்தைப்படுத்துவதற்கு பக்கபலமான ஒரு வழியையே எதிர்பார்க்கின்றனர். பெயரளவில், பகுதியளவில் அவர்கள் தங்கள் உழைப்பின் ஊதியத்தை எதிர்பார்க்கவில்லை. இதற்கேற்பவே செயல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

வன்னியிலும் முருகேசனைப் போலவும் காமாட்சியைப் போலவும் ராமுவைப் போலவும் பலர் வாழ்கின்றனர். இவர்களது ஆசைகளும் எண்ணங்களும் கற்பனைகளும் தினமும் சிதைந்து போகின்றன. முருகேசனது கனவுகளை ஒரு மழை அழித்துச் சென்றது. அது முருகேசனின் கனவு மட்டுமல்ல. ராமுவின் பால்கஞ்சி என்ற அவாவையும் அடியோடு அழித்துவிட்டிருந்தது. இதுபோல வன்னியில் இப்போது மழை மேகங்கள் ழ்ந்திருப்பது பல விவசாயக் குடும்பங்களின் கனவுகளுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாகவே இருக்கின்றது. இயற்கையின் நியதிகளை மனிதனால் வெல்லமுடியாத போதும் மனிதனது ஆசைகளையும் தேவைகளையும் உரிமைகளையும் இன்னொரு மனிதனால் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படையில் ஏழை விவசாயிகளின் எதிர்கால வாழ்வுக்குப் பொருத்தமான அபிவிருத்தி நோக்கிலான திட்டமொன்று கட்டாயமாகின்றது. பெயரளவிலோ சொல்லளவிலோ சில காரியங்களை அறிவிப்பதை விடுத்து மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பூரணம் அடையக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டியதுமே இப்போதைய தேவையாக உள்ளது.

அர அதிபரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் ப.நோ.கூ. ங்கங்கள் முழு அளவில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லைக் கொள்வனவு செய்யுமா என்பது அவர்களிடத்திலே கேள்வியாக மாறியுள்ளதால் உண்மையான கரினையுடன் இந்த அறிவிப்பைச் செயற்படுத்த வேண்டியது தார்மீகப் பொறுப்பாக உள்ளது. இதுவே ஏழை விவசாயிகளின் கனவுக்கு நல்லதொரு விடையாக அமையும். *

நன்றி-உதயன் சூரியகாந்தி (12.02.2012)

Monday, February 6, 2012

ந(வ)ல்லிணக்கம் ஆகிவிடுமோ


சுட்ட மண்ணும் பச்சமண்ணும் ஓட்டுமா கூறப்பா, சுண்ணாம்பும் தயிரும் சேர்ந்தா திங்கிறவன் யாரப்பா' இது உணர்ச்சி கவிஞர் காசியானந்தனின் வரிகள். இரு இனங்களுக்கிடையே எந்த வகையிலும் நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை என்பதை இந்தப் பாடல் வரிகள் எடுத் தியம்புகின்றன. இலங்கையில் இன நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற சொற்கள் இப்போது தாராளமாகப் பாவிக்கப்படுகின்றன. அறிக்கைகளிலும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் திருவாய் களிலும் இவற்றுக்குப் பஞ்சமில்லை.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கென பல்வேறு மட்டங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் முக்கிய கருவியாக இராணுவத்தினர் பயன்படுத் தப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின்னர் இராணுவத்தினர் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கவனிப்பர் என ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டதுடன் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் நிர்வாகமும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்கு நடைபெறும் நிகழ்வுகள் அனைத்துக்கும் இராணுவத்தின் அனுமதியும், பிரசன்னமும் அவசியமானதாகின்றது. அத்துடன் நிகழ்வுகளுக்குச் சில முன் மாதிரியானவர்களை அழைப்பதும் கட்டுப்பாடுகள் எழுதப்படாத சட்டமாகியுள்ளன.

கடந்த மாதம் கிளிநொச்சியில் இரா ணுவச் சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் செய்துவைக்கப்பட்டது. இதனை இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அரசு பிரசாரப்படுத்தியது.

கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இராணுவச் சிப்பாய்க்கும், மலையாளபுரத்தைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியான சந்திரசேக ரன் சர்மிளாவுக்கும் ஜனாதிபதி செயலகம் இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

உண்மையில் முன்னாள் பெண் போராளியின் பெற்றோர் இனக்கலவரம் இடம்பெற்ற போது மலைநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். இவர்களுக்கு சிங்கள மொழிபேசத் தெரியும். அதுமட்டுமல்ல தாய் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் நாளாந்த கூலித் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் இவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள்.

இந்த சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திய இராணுவச் சிப்பாய், பெண்போராளி பம்பைமடு தடுப்புமுகா மில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவரிடத்தில் பேசிப்பழகி காதல் கொண்டுள்ளார். சற்றுச் சிங்களம் பேசத்தெரிந்த பெண் போராளியும் அதைச் சம்மதித்துள் ளார். பெண் போராளி தடுப்பு முகாமிலிருந்து விடுவிக்கபட்டபோது இராணுவச் சிப்பாயும் கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு மாற்றம் பொற்றுள்ளார்.

பின்னர் போராளிப் பெண்ணின் பெற் றோருடன் இராணுவத்தினர் பேசிப்பழகி அவர்களிடத்தில் அனுமதி பெற்றுள்ளனர். தொடர்ந்து இராணுவத் தலைமை அதிகாரி ஊடாக ஜனாதிபதி செயலகம் இருவருக்கும் திருமணம் செய்துவைத்து பிரசாரத்துக்கு வாய்ப்பாக இதனைக் காட்டியுள்ளது.

அத்தோடு தமது காரியத்தை நிறுத்திவிடாத இராணுவத்தினர் கிளி. மத்திய கல்லூரியில் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் புதுமணத் தம்பதியரை விசேட விருந்தாளர்களாக அழைத்து அவர்களது அனுபவங்களையும் மாணவர்கள் மத்தியில் பகிரச் செய்தனர்.

அத்துடன் அவர்களைக் கௌரவிக்கு மாறும் இராணுவத்தினர் மாணவர்களைப் பணித்துள்ளனர். இவர்கள் ஒரு முன்மாதிரியான செயலைச் செய்துள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவுக்குமாறும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் ஜனாதிபதி செயலகமும் திட்டமிட்டு செய்த இந்த நாடகத்தை தமிழ்ச் சமூகமும், மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு. இதற்காக நலிந்த பிரிவு மக்களை சிங்கள ஆட்சியாளர்கள் கருவியாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சியில் இது போன்ற முயற்சிகள் பல இடம்பெற்றுவரு வதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகளைக் குறிவைக்கும் இராணுவத்தினர் அவர்களைத் திருமணம் செய்வதற்குச் சம்மதம் வாங்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரி விக்கப்படுகின்றது.

இராணுவ மயப்படுத்தப்பட்ட வன்னிப் பகுதியில் குற்றச் செயல்களும் பிறழ் நடத்தைகளும் அதிகரித்துவரும் நிலையில் மாணவர்கள் மத்தியில் தவறான தமிழ்க் கலாசாரத்துக்கு ஒவ்வாத கருத்துக்களைப் பரப்புவதும், திணிப்பதும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இது விடயத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் விழிப்பாக இருக்கவேண்டியது அவசியமாகின்றது. எத்தனை திருமணங்கள் நடந்தாலும் சுட்ட மண்ணும் பச்மண்ணும் ஒட்டியதாக இல்லை. பிரச்சினைகளும், முரண்பாடு களும் வலுக்கவேசெய்யும்

அரசு நேரிய வழியில் சென்று அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாகக் குறுக்கு வழிகளைக் கையாண்டு தமிழ் சமூகத்தின் இருப்பைச் சீர்குலைக்க முற்படுகிறது என்பதே அவர்களது செயற்பாடுகளிலிருந்து தெளிவாகிறது. *

நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)


புரட்டிப் போடும் ஞாபகங்கள்


நடுஇராத்திரியும்

15வயது சிறுவனும்

பேரிரைச்சல்... ஓட ஆரம்பித்த நிகேஷ் நிற்கவே இல்லை. சத்தம் அவனையே குறிவைத்துக் கலைத்தது. பங்கருக்குள் போக அவன் தயாரில்லை. காரணம் அவனோடு நேற்றுக் காலைவரை விளை யாடிக் கொண்டிருந்த புதிய நண்பனும் அவனது குடும்பமும் பங்கருக்குள்ளேயே அன்று மாலை மாண்டுபோன ஞாபகம்.

சற்றுநேரத்திலே செவிப்பறை முழங் கும்படியாக பெரும் சத்தங்கள். மின்னல் வேகத்தில் ஏதேதோ வானைப் பிழந்தன...

சிறிதுநேர அமைதியின்பின் முனகல் சத்தமும், அழுகுரல்களும்....இரத்தமும் சதையுமான காட்சிகள்...அம்மா!! என்ற சத்தத்துடன் திடுக்கிட்டு விழித்துவிட்டான் நிகேஷ்.

இதுவரை அவனது மனம் வன்னி இறுதிப் போரின் ஒரு பகுதியை திரை யிட்டுக்கொண்டிருந்தது... காட்சிகளைப் பாரத்து சகிக்கமுடியாமல் திடுக்கிட்டு விழித்தவனுக்கு அன்றிரவு நித்திரை மீண்டும் வரவேஇல்லை.

வன்னியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 12 வயதாக இருந்தபோது நிகேஷ் எதிர்கொண்ட காட்சிகளும் துன்பங்களும் இப்போது மனதில் காட்சிகளாகப் பதியப்பட் டுள்ளன.

இடப்பெயர்வின்போது சந்தித்துக் கொண்ட அவனது நண்பனும் குடும்பத்தி னரும் விமானக் குண்டுவீச்சில் இறந்து போக, அவர்களை அந்தப் பங்கருக் குள்ளேயே போட்டுமூடிவிட்டு வேறு இடத்துக்குச் சென்றபோது நிகேசுக்கு அந்த காட்சியும் சம்பவமும் பெரிதாகப் படவில்லை. காரணம் அடுத்து எங்கள் உயிர் என்பது இந்தச் சிந்தனைகளை அவன் மத்தியிலோ அல்லது இடம் பெயர்ந்து கொண்டவர்கள் மத்தியிலோ இருந்து நீக்கியிருந்தது.

இப்போது 10ஆம் தரத்தில்படிக்கும் நிகேஷ் மூன்றேமூன்று நாள்மட்டும் பழகிய தனது நண்பன் குடும்பத்தோடு மரணித்து விட்டதை மனதில் கொண்டு திரிகிறான்.

இருந்தாலும் அம்மா! என்று அலறிக்கொண்டு நித்திரையிலிருந்து எழுந் தவனை அவனது தாயார் என்னப்பன்! என்று கேட்டதற்கு அவன் சொன்ன பதில் ஒன்றுமில்லை என்பதே.

வன்னிப்போர் முடிந்துவிட்டது. நாட்டில் அமைதி நிலை நாட்டப்பட்டுவிட்டது. தமிழ் மக்களுக்கு விமோஷனம் வந்து விட்டது என்று அரட் டிக்கொள்ளும் ஆட் சியாளர்களது கோணத்தில் நிகேஷின் கனவை எப்படிபார்ப்பது?

இப்படித்தான் தங்கள் உறவுகளை இழந்தவர்களும், தொலைத்தவர்களும், இறுதிப்போரை எதிர்கொண்டவர்களும் ஒவ்வொரு இர வையும் கழிக்கின்றனர் என்பதை எவர்தான் உணருவாரோ???

மரணச்சடங்கும்

ஒரு தாயின் புலம்பலும்

கொண்டாட்டங்கள் நடந்தால் போகா விட்டாலும் செத்தவீட்டுக்கு கட்டாயம் போகவேணும். இது எம்மில் பலபேரது அபிப்பராயம். துன்பத்தில் தோள்கொடுப் பதுதான் இந்த முயற்சியாக இருக்கவேண்டும்.

வலிகளையும் வேதனைகளையும் அனுபவித்த பலருக்கு விரக்தி கூட களியாட்டங்களை விலக்களிக்குமாறு பணிக்கின்றது.

வயதான ஒருவரின் மரணச் சடங்கில் ஒரு தாய் ஒப்பாரி சொல்லி அழுது கொண்டிருந்தாள். ""ஐயா! என்னவிட்டு போயிட்டியே! நான் என்னசெய்வேன்! அம்மா அழாமல் இருங்கோ நான் வந்திடுவன் எண்டு செல்லிட்டு என்னவிட்டு எங்கடா போய்ட்ட?.....'' என்று அவளின் புலம்பல்நீண்டது...

அந்த மரணச்சடங்குக்கு சம்மந்தமே இல்லாத இந்த ஒப்பாரி அவளின் மகன் போரில் கொல்லப்பட்டதையும் அவனுக்காக தான் ஒரு கடமைகூடச் செய்ய வில்லை என்பதையும் வெளிக்காட்டியது.

போருக்குப் பின்னர் எத்தனை தாய்மார் இப்படிப் புலம்புகிறார்கள் என்பதை யார் கருத்தில் கொள்கிறார்கள்?

தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சரி வெளிநாட்டு அரசியல் பிரமுகர்களும் சரி சுற் றுலா நோக்கிலேயே போர் நடைபெற்ற பகுதி களைப் பார்வையிடு கின்றனர்.

போதாக்குறைக்கு யாழ்ப்பாணம் வந்த இந்திய முன்னாள் ஜனாதி பதி அப்துல்கலாம் கூட கனவு காணுங்கள் என்று தான் சொல்லிவிட்டு சென்றார். இந்த மக்கள் காணும் கனவுகளும் , ஏக்கங்களுக்கும் எந்த வகையில் இலட்சியம் ஆவது? கனவுகளும் புலம்பல்களும் தொடர்கின்றன. தென்னிலங்கையின் கொக்கரிப்பும் தொடர்கிறது.


நன்றி-உதயன் சூரியகாந்தி (05.02.2012)

கிளிநொச்சி ""கொலை வெறி''


Why this kolaveri di பாடல் வெளியாகி அது பலரின் மத்தியில் பிரபலமாகிவிட்டது. பட்டி தொட்டி யெல்லாம் ஒலிக்கும் இந்தப் பாடல் தமிழை யும் ஆங்கிலத்தையும் கொலை செய்துள் ளதாகப் பேசப்படுகின்றது. இருப்பினும் இன்று கூடுதலான மக்கள் தாம் தமிழ் பேசுவதாக, ஆங்கிலத்தைக் கலந்து புது மொழி பேசுகின்றனர். அதுபோல ஆங்கில மொழிக்கும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுடன் கொலைவெறிப் பாடலை ஒப்பிட்டால் அது ஒன்றும் புதிதல்ல என்று எண்ணத் தோன்றுகிறது.

பாடல்கள் இயோடு வரும்போது எல்லோரும் தமக்கு இருக்கக் கூடிய இரசனை யுடன் அவற்றை நோக்குகின்றனர். இவை ஆளுக்காள் வேறுபடும். “Why this kolaveri diசுபாடலை "யூரியூப்' ஊடாக இதுவரை 39,529,223 பேர் பார்த்துள்ளனர். அதில் 220,252 பேர் தமக்குப் பிடித்திருக்கிறது என்றும் 12,804 பேர் தமக்குப் பிடிக்கவே இல்லை என்றும் கூறியுள்ளனர். ஏனையோர் பார்த்துடன் நிறுத்திவிட்டனர்.

இது தென்னிந்திய தமிழ் திரைப்படம் ஒன்றில் இடம்பெறும் பாடல் ஒன்றின் மக்கள் அபிப்பிராயத்தில் சிறுபாதி மட்டும்தான். கலை இரசனைக்காகத்தான் கொலை வெறி பாடப்பட்டது. காதலின் தோல்விக் காகக் கொலை வெறிபாடப்பட்டது. ஒரு பெண்ணின் அழகும் அவளின் குணமும் பற்றிப் பாடப்பட்டது. அதை அந்த மாத்திரத்திலேயேவிட்டுவிடலாம்.

ஆனால், நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழி தமிழர்களின் தாய்மொழி கொலை செய்யப்படுவதை எவ்வாறு பார்ப்பது? திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த முதன்மையான மொழியும் செம்மொழியும் எனப் போற்றப்படுவது தமிழ்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ளது இந்த மொழி, கல்தோன்றி மண் தோன்றா முன்தோன்றிய மூத்த மொழியாகப் பேசப்படுகின்றது. இதன்மீது பொறுப்பற்றவிதமாக நடந்துகொள்வதென்பது அனாகரிகமானது.

எம்நாட்டில் பாரம்பரியங்களைக் கொண்ட தமிழ் மொழிக்கு இப்போது நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அதன்மீது ஆட்சியாளர்களுக்கு கொலை வெறி ஏற்பட்டுள்ளது. அரசு தகவல்களை உத்தியோகபூர்வமாக வெளியிடும் வர்த்தமானிப் பத்திரிகை, துறைசார் திணைக்களச் சுற்றுநிருபங்கள், காட்சிப் பலகைகள், விளம்பரப் பலகைகள் எல்லா வற்றிலும் தமிழ்மொழி கொச்ப்படுத்தப்படுகின்றது.

அரசுமட்டும் சிங்களத் தலைவர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதல்ல. காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் அரசியல் வாதிகளும் செயற்பட்டுள்ளனர். இப்போதும் ஒட்டி உறவாடுகின்றனர். அரசு கட்டமைப்பில் பெரும்பாலான துறை களில் தமிழ் அறிந்த தமிழர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தத் தோரணை உயர்மட்டத் திலிருந்து கீழ் மட்டம்வரை தொங்குகிறது.

அவர்கள் சொன்னால் சரி என்று தலையாட்டிப் பழகிவிட்டதால் பிழையானதைக் காட்டினாலும், சரி என்று தலை அக்கும் சக்திகளாக தோரணைகள் மாறிவிட்டன.

போதாக்குறைக்கு இலாபநோக்கிலான நிறுவனங்கள், வர்த்தக வங்கிகளும் தமிழைக் கொலை செய்வதில் ஆர்வமாக உள்ளன. விளம்பரத்துக்காக இவற்றால் அமைக்கப் படும் பெயர்பலகைகளில் இந்த வண்டவாளம் புலப்படுகின்றது. யாழ்ப்பாணத்து வீதிகளில் இந்த அலங்கோல அலங்காரங் களை நாம் தினமும் பார்க்கிறோம்.

கிளிநொச்சி நகர்ப் பகுதியில் கூட்டுறவு மற்றும் வர்த்தக கைத்தொழில் அமைச்சு நெல் வர்த்தக நிலையம் ஒன்றை அண்மையில் திறந்துவைத்தது. விவசாய நிலப் பகுதியில் இந்த வருகை மகிழ்ச்சியானதுதான். ஆனால் அதன் பெயர்பலகை அமைந்ததுதான் மக்களின் நெல்சந்தைப்படுத்தும் கனவையும் கலைத்தது .

களஞ்சியசாலை கட்டடத் தொகுதி கிளிநொச்சி என்ற வசனம் "கனஞ்சியசாலைக் கட்ஷடத்தொஞதி கிலிநொச்சி' என்று எழு தப்பட்டுள்ளது. டீஜிற்றல் தொழில்நுட்பத்தின் மூலம் வடிவமைக்கப்பட்ட இந்த பெயர்பலகை யில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களது திருவுருவங்களும் பொறிக்கப்பட்டுள் ளன.

இதுமட்டுமல்ல கிளிநொச்சியில் அமைந்துள்ள தொலைபேசி நிறுவனம் ஒன்றின் பெயர்ப் பலகையில் கிளிநொச்சிக்கு பதிலாக "கினிநொச்சி' என எழுதப்பட்டுள்ளது. கரைச்சி பலநோக்கு கூட்டுறவுச்சங் கத்துக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் ஆங்கிலத்தில் A9 வீதி எனவும் தமிழில் "யு 9' வீதி எனவும் எழுதப்பட்டுள்ளது.

""எவ்வளவு காச் செலவழிச்சு செய்து போட்டினம் இனி. எப்பிட மாத்திறது? பிழை யெண்டு சொன்னாலும் எங்களில அவையள் வச்சிருக்கிற நம்பிக்கை போயிடும். ஏன் எங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை? என்னண்டாலும் செய்யட்டும்'' என்று பொறுப்புக்கூறவேண்டியவர்கள் விலக தமிழ் தெரியாதவர்கள் இன்னும் தமிழைக் கொச்ப்படுத்தியவண்ணமே உள்ளனர்.

எல்லா விடயத்திலையும் அவையள் தானே முடிவெடுக்கிறது. பிறகு எப்படி கொலை வெறிய மாத்தமுடியும். முடிஞ்சா பக்கப்பாட் டுக்கு தந்தனத்தோம் தான் பாடணும்.. *

நன்றி -உதயன் சூரியகாந்தி(29.01.2012)

Sunday, January 22, 2012

இதுவும் அபிவிருத்தி தான்


தென் இலங்கையில் அபிவிருத் திப் பணிகள் இப்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு அரசி யல்வாதிகள் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றனர்.
இந்த அபிவிருத்தி ஆர்வம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போரின் பின்னரான மீள்கட்டுமான முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இந்த இரண்டு மாகாணங்களும் போரினால் மிகவும் @மாச மாகப் பாதிக்கப்பட்டவை. பெரும்பாலான பகுதிகள் அன்றும் சரி இன்றும் சரி மிகவும் வறிய பிரதேசங்களாகவே, அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதிகளாகவே காணப்படுகின்றன.
அரசியல் நோக்கங்களுக்காக வெளித்தெரியும் வகையிலான அபிவிருத்திப் பணிகள் வடக்கில் அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அபிவிருத்திப் பணிகள் உதவுவதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் பருவமழைக்குப் பின்னர் பெரும்பலான வீதிகள் குன்றும் குழியுமாக மாறிவிட்டன. பராமரிப்பின்மையால் அவை நாளாந்தம் மேலும் சேதமடைந்தே வருகின்றன. பழைய வீதிகள் புனரமைக்கப்படா மலும் மணற்பாதைகள் தார் இடப் படாமலும் காணப்படுகின்றன. அதிகளவான மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கேஇவ்வாறான நிலை தோன்றியுள்ளது.
இதுபோலவே வன்னியிலும் நீண்ட காலமாக வீதிகள் புனரமைக் கப்படாமல் காணப்படுகின்றன. யுத்தம் காரணமாக அந்தப் பகுதியில் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயிருந்தாலும் இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் அபி விருத்திக்கான சாத்தியங்களும், நிதி ஒதுக்கங்களும், முன்னுரிமைப்படுத்த லும் இந்தப் பகுதிக்கு குறைந் தளவே வழங்கப்படுகின்றன. இதனால் மக்கள் தமது அடிப்படைத் தேவைகள் முதல் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நாளுக்கு நாள் வெவ்வேறு வகையாக நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இடங்களுக்கிடையேயான தூரம் அதிகமாகவும் சேவை மையங்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகியிருப்பதாலும் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்யுள்ளது.
ஆனாலும் அதற்கான வீதி அபிவிருத்தி, போக்குவரத்து வசதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மழைக்காலங்களில் வெள்ளக் காடாக மாறும் வீதிகள் வெயில் காலங்களில் புழுதி பாதைகளாக மாறி வருகின்றன.
இதனால் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவதுடன் உடல் உபாதையைத் தினமும் வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய அபிவிருத்தியின் மந்தநிலை பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் வேலாகப் பாய்ந்து இன்னும் வேதனைப்படுத்தியே நிற்கின்றது.

நன்றி உதயன்-சூரியகாந்தி (22.01.2012) *

அபிவிருத்தி மீது வீசப்படும் கற்கள்



இலங்கையின் அபிவிருத்தி ஆசியாவின் ஆச்சரியமாக்02014010100001 2030ஆம் ஆண்டில் மாற் றப்படும் என்ற தூர நோக்குடன் மஹிந்த அரசு பல் வேறு நெருக்கடிக்குள்ளும் சவால்களுக்குள்ளும் அதற்கான பணிகளை வேகப் படுத்தி வருவதாகப் பேசப்படுகின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்குஅங் குள்ள உட்கட்டமைப்பு வசதிகளே பெரிதும் மூலகாரணங்களாக அமைகின்றன. இதில் இடங்களுக்கிடையிலான தொடர்பைப் பேணும் வகையில் போக்கு வரத்துத்துறை முக்கிய பணியாற்றுகின்றது.
இலங்கையின் அபிவிருத்தியில் இப்போது முக்கியத்துவம் கொடுக்கப்படும் துறையாக பெருந் தெருக்கள் மற்றும் துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது.
வரலாற்றின் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இருப்பதாக அரச தரப்பு மார் தட்டிக்கொள்கின்றது.
இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்பமாக தெற்கு அதிவேக நெடுஞ் சாலை அமைப்பு என வீராப்புப் பேசும் அரசு இன்னும் பல அதிவேக வீதிகளை நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்க வுள்ளதாக உறுதி கூறியுள்ளது.
நாட்டின் அபிவிருத்திக்கு வீதி வலையமைப்பு முக்கியமானதாக இருந்தாலும் ஏனைய துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அபிவிருத்தியைச் சமவேகத்தில் நகர்த்த முடியும்.
இலங்கையில் இப்போது இடம் பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் துறைசார் கட்டமைப்புக்களுக்கிடையில் வேறு பாடுகளை உருவாக்குவனவாக உள்ளன.
இலங்கை அரசால் நடைமுறைப்ப டுத்தப்படும் அபிவிருத்தி வேலைகள், மக்களது அடிப்படைத் தேவைகள், அன்றாடத் தேவைகளுக்கு விடைகாணாது புதிய பாதையில் செல்வதை உணரமுடிகின்றது.
அண்மையில் 2011.11.27 அன்று ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவால் திறந்து வைக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் இப்போது பாவனையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அசெளகரியங்களே மக்களது தேவைகளுக்கும் அரசின் செயற்பாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை உணரவைத்துள்ளன.

அதிருப்திகளின் அதிவேகம்

தெற்கு அதிவேக நெடுஞ் சாலையில் வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது அவற்றின்மீது கற்கள் வீசப்படுகின்றன.
நெடுஞ்சாலை திறக்கப்பட்டதன்பின் இத்தகைய கல்வீச்சுகளால் 57வாகனங்கள் சேதமடைந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்னர்.
வாகனங்களுக்கு கல்லெறிபவர்கள் தொடர்பில் விழிப்பு குழுக்கள் வீதிக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களது கண்களைக் கட்டிவிட்டு கல்வீச்சுக்கள் தொடர்கின்றன.
வீதிக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கென விஷேடமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது கார்களும் 06 மோட்டார்சைக்கிள்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை இந்த வீதியில் ஏற்படும் விபத்துக்கள், இடையூறுகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
வாகனத்தில் பயணிப்பவர்கள் வேகக் கட்டுப்பட்டைப் பேணவேண்டும்,வீதி ஒழுங்கைப் பேணவேண்டும், விபத்துக் களிலிருந்து தப்பிக்கவேண்டும். இடைநடுவில் வாகனங்களை நிறுத்திக் கல்லெறி காரர்களை இவர்களால் ஒன்றும் செய்து விடமுடியாது.வாகனம் நிறுத்தப்பட்டால் அடுத்த கணமே விபத்துத்தான்.

நாய்களுக்கும் அதிருப்தி

சாலை பாவனைக்குவிடப்பட்டதும் திடீர் திடீரென விபத்துக்கள் நிகழ ஆரம்பித்தன. காரணம் புரியாது கண்காணிப் பாளர்கள் அதிர்ச்சியுற்றனர். அப்போது தெருநாய்கள் வீதியால் குறுக்கறுப்பது தெரிய வந்தது. ஏற்கனவே வீதிக்கு வேலி போடப்பட்டிருக்கிறது. ஆனால் நாய் களுக்கு அது போதாது. ஆடு அல்லது மாடு அதிலிருத்து தப்பிக்க முடியும். யானை கூட அண்மையில் இந்த வீதியைக் குறுக் கறுத்தது. சில இடங்களில் மண்அணை போடப் பட்டிருந்தாலும் எல்லா இடங் களுக்கும் அவை விஸ்தரிக்கப்டவில்லை.
நாய்களின் குறுக்கறுப்பால் வீதி திறக் கப்பட்ட அடுத்த நாளே வாகன விபத் தொன்று நடந்தது. திறக்கப்பட்ட 72 மணித் தியாலங்களுக்குள் மூன்று விபத்துக்கள் இடம்பெற்றன. 2 மாதங்களுக்குள் 80 விபத்துக்கள் பதிவாகியன. இவற்றில் பலவுக்கு நாய்கள் மீதே பழிபோடப்பட்டது. அவை யும் பலி கொள்ளப்பட்டன.
மஹிந்தவின் சிறப்பு உத்தரவு நாய்களைக் கொலை செய்யக்கூடாது என்று. ஆனால் அவரின் கனவான அதிவேக சாலையும் அதில் பயணிக்கும் வாகனங்களும் நாய்களைக் கொலைசெய்யும் துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளதை அவர் எந்தத் திட்டத்தைக் கொண்டு சீர்செய்யப் போகின்றார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். புதிதாக ஏதாவது திட்டம் அவருக்குள் இருந்து வரும்வரை.
இந்த நெடுஞ்சாலையின் நோக்கம் நகர்பகுதியில் ஏற்படும் வாகன நெருக் கடியைக் குறைப்பது, வேகமான போக்கு வரத்து, பயணிகள் இலகுவாகவும் குறைந்த செலவுடனும் பயணங்களை சிரமமின்றி மேற்கொள்ளுதல் போன்றனவாகக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு தேவை இதுவல்ல. இப்போதைக்கு எங்களது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு அடுத்த கட்டமாகச் சர்சதேச நிலையிலான அபிவிருத்திகளை நீங்கள் மேற்கொள்ளலாம். எங்கள் வயல்காணிகள், மேட்டுக்காணிகள் என்பவற்றின்மீதே நீங்கள் உல்லாச சவாரி செய்கின்றீர்கள். அதனால் ஆத்திரமடைந்தே நாங்கள் கற்களை வீசுகிறோம். எங்கள் வளமான காணிகள்மீதே இந்த வீதி அமைந்திருக்கிறது என்று கல்லெறி காரர்கள் எண்ணுகிறார்கள். இதற்காகவே வீதிக்குவந்து கற்களை வாகனங்கள் மீது அவர்கள் வீசுகிறார்கள்.
அபிவிருத்தியின் தேவையில் இதுவும் ஒன்றுதான். அது எப்போது தேவை என்பதும்,மக்களது இப்போதய தேவை என்னவென்றும் தீர்மானிப்பது அரசுதான். எனவே எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கட்டும். *


பணிஆரம்பம்:
2003
நிதி உதவி:
ஜப்பான் வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசு.
நிர்மாணச் செலவு:
சுமார் 77 பில்லியன் ரூபா.
தூரம்:
கொழும்பு கொட்டாவிலிருந்து காலி பின்னது வவரை 100 கிமீ (கொட்டாவ, கஹதுட்டுவ, கௌனிகம, தொடங்கொட, லெவன்துவ, குருந்துகஹ, நாயபமுல்ல ஆகிய இடங்களைக் கடந்து பின்னத்துவ வரை)
தடை:
100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியாத வாகனங்கள், அதிகளவு புகையை வெளியிடும், முறையாக நிறுத்தற் கருவிகள் (பிரேக்) செயற் படாத வாகனங்கள் வெளிச்ச, சமிக்ஞை விளக்குகள் முறையாக இல்லாத வாகனங்கள், பாதசாரிகளுக்கு இந்தவீதியில் தடை
நுழைவாயில்:
08. கொட்டாவை, கஹதுடுவ, களனி கம, வெலிபின்ன, குறுந்துஹ, தாபிம, தொடங்கொடை, பத்தேகம, பின்னதுவ.
வேகம்:
80120 கிமீ(மணிக்கு)
கட்டணம்:

கார்,கெப்ரக வாகனம்,9 ஆசனங்கள் வரையுள்ள சகல வாகனங் கள், எக்ஸல் 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 400 ரூபா,9 ஆசனங்களுக்கு அதிகமான பஸ் மற்றும் 33 ஆசனங்கள் கொண்டுள்ள சகல பஸ்களுக்கும் 700 ரூபா, 22 இற்கும் அதிகமான ஆசனங்களைக் கொண்ட பஸ், 6 சக்கர வாகனங்கள் மற்றும் எக்ஸல் 3 ஐ உடைய மோட்டார் லொறி, டிரக் வாகனம் ஆகியவற்றுக்கு 1500 ரூபா, ஒன்றாக இணைக்கப்பட்ட கோச் 2 உடன் பயணிக்கும் பஸ், எக்ஸல் 4 மற்றும் அதற்கு அதிகமான வாகனங்களுக்கு 2000 ரூபா.



நன்றி உதயன்-சூரியகாந்தி (௨0௧௨. 2௨.01)

Saturday, January 14, 2012

மறக்கத்தெரிந்த மனமே...


"உன்னைத் திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்''இந்த வார்த்தையை பழமொழியாகப் பார்ப்பதைவிட இப்போதெல்லாம் உண்மையான அனுபவங்கள் எண்ணிலடங்காதளவுக்கு பெருகிவிட்டன. சமூகத்தி முன்மாதிரியாக இருக்கின்ற சிலர் தமது சொந்த வாழ்க்கையில் பிழைவிட்டுவிடுகிறார்கள் என்பதும் மற்றுமொரு அனுபவம்.

ஆனாலும் சோற்றை உண்டபின் அந்தப் பாத்திரத்துக்குள்ளளேயே.... கழிப்பது, அதற்குக் காரணம் கற்பிப்பது எவ்வளவுக்கு நீதியானது என்பது சங்கடமான விடயம்தான். இருந்த போதிலும் இலங்கையில் இது சர்வ சாதாரணமப்பா.

நாட்டுக்காகப் பாடுபட்ட மனிதர்களில் முக்கியமானவர் பொன்சேகா என்று பேசப்பட்டது. மரணத்திலிருந்து மீண்டுவந்த ஒரு செயல்வீரன் என்று கூறிப் பொறுப்பில் இருக்கும்வரை அவர் முருங்கை மரத்தில் ஏற்றப்பட்டார். அவரிடம் இருந்து பெற்றாக வேண்டிய அனைத்தும் நிறைவுற்றதும் இப்போது அவர் கம்பி எண்ணுகிறார். இது அரசு ஒரு தனிமனிதனுக்கு இழைத்த துரோகம். அந்தத் துரோகம் பொன்சேகா குடும்பத்துடன் முடிந்துவிடலாம். அல்லது அவர் சேர்ந்த சிலருக்கு, வேதனையாக இருக்கலாம். ஆனால் ஓர் இனத்துக்கும் அதன் அபிலாசைகளுக்கும் இழைக்கும் துரோகம். இலகுவில் மறக்க முடியாது. ஒருவருக்கு மன்னிப்பையும், தீர்ப்பையும் அவர் மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாறாக வரலாறோ, பாதிக்கப்பட்ட மக்களோ இவ்வாறானவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை. துரோகம் இழைத்தவர்கள் தாமாக உருவாக்கிக்கொண்ட ஒரு பின்புலத்திலிருந்து மக்களை ஏமாற்ற முற்படுவது, ஏமாற்றுவது எந்த வகையில் நியாயமானது என்பது இன்றும் புரியாத விடயமாகியுள்ளது. காரணம் நாட்டினது அரசியலும், ஆட்சியும் அந்தளவுக்குச் சுயலாபமாக்கப்பட்டுள்ளன.

இந்த சுயலாப அரசியலில் இப்போது நுழைந்துள்ள மனிதன் ஓர் இனத்தின் துரோகி என வர்ணிக்கப்பட்ட, அரசின் செல்லப்பிள்ளை யாகியுள்ள கருணா அம்மான். இந்தப் பெயரை யாழ்ப்பாண மக்கள் தனக்கு வைத்ததாகக் குறிப்பிடும் இவர், அதை மக்கள் கூப்பிட்டால் தான் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். இந்தப் பெயரை யாழ்ப்பாணமக்கள், ஐக்கிய சுதந்திர முன்னணியினருடன் இணைந்து திறம்படச்செயற்பட்டதற்காக சூட்டவில்லை என்பதைக்கூட உணர முடியாத மனிதனாக மாறியிருக்கிறார் கருணா. இவரின் மாற்றங்கள் தொடர்கின்றன.

1997.05.13 ஜெயசிக்குறு வெற்றி

விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக 1996, 1997 காலப்பகுதிகள் காணப் பட்டன. குறிப்பாக விடுதலைப் போராட்டதில் புதிய மரபு ரீதியான தாக்குதல் உத்திகளால் பலம் வாய்ந்த இலங்கை அரச படைகள் பின்வாங்கி ஓடிய சம்வங்கள் அதிகம் இடம்பெற்றன. இந்தக் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் கருணாவும் இடம்பெற்றிருந்தார். ஜெயசிக்குரு எதிர்ச்சமர் கருணா வுக்கு புதியதொரு பலத்தைத் தேடிகொடுத்திருந்தது.

இந்த துன்பத்தின் மீட்சியாக விடுதலைப் புலிகளின் மரபுவழி இராணுவ நடவடிக்கை அமைந்தது. இதற்கு வித்திட்ட பெருமை கூடுதலாக கிழக்குப் போராளிகளுக்கு உரியது. அங்கிருந்து ஆயிரம் போராளிகள் வரை வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

அப்போது மட்டக்களப்பிலிருந்து போராளிகளைக் கூட்டி வந்திருந்த கருணா அம்மானே தனது அணிப் போராளிகளையும் வேறு போராளிகளையும் கொண்டு படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பாளராகச் செயற்பட்டு ஜெயசிக்குறு எதிர்ச்சமரை வெற்றிகொள்ளக் காரணமானார்.

கருணாவின் போரிடும் ஆற்றல் காரணமாக அவருக்கு ஏற்பட்ட மதிப்பு மற்றும் மரியாதை ஒருவகையில் பின்வந்த காலங்களில் துரோகத் தனத்துக்குக் காரணமாகியது.

விடுதலைப் புலிகள் போரிடும் வலுவில் இலங்கை அரசுக்கு சவாலாக சம இராணுவ பலத்துடன் இருக்கின்றார்கள் என்ற செய்தி இவ்வாறான வெற்றிச் சமர்கள் மூலம் நிரூபிக்கப்பட்டது.

இதனால் இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளுடன் சமரசமுயற்சியொன்றில் ஈடுபடவேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் அவர்கள் கொண்டுள்ள கட்டமைப்புக்களை சீர்குலைப்பதற்கான முயற்சிகளில் இறங்கியது.

இலங்கை அரசின் ஆசையை, அவர்களது கபடத்தனத்தை நிறை வேற்றி வைப்பதற்கு புதிய மனித ராக விடுதலைப் புலிகள் அமைப் பில் இருந்தே கருணா செயற்படத் தொடங்கினார். இது அடுத்துவந்த காலங்களில் பல்வேறு நெருக்கடி களையும், ஒரு விடுதலை அமைப் பின் இருப்பையும் கேள்விக்குறி யாக்கியது எனலாம். இந்தக் காலப்பகுதியில் தன் இனத்திற்கே கருணா இழைத்த துரோகச் சம்ப வங்கள் சொல்லில் அடங்காதவை.

இவ்வாறான திடீர் மாறுதல் களின் மத்தியில் தமிழ் மக்கள் பற்றிய பாரம்பரியங்களை இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார் கருணா.

2006.11.27 மாவீரர்தின அறிக்கை

விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரிந்து தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை உருவாக்கிய கருணா மாவீரர் தினத்தையும் கொண்டாடினார். அப்போது அவர் மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ""தாயக பூமியில் சகோதர இனங்களுடன் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதுடன் உலக மயமாக்கலுக்கேற்ப சமூக பொரு ளாதார, அபிவிருத்தியுடன் தமக் கான கலை, கலாசா, பண்புகளுடனும், மேன்மையுடனும் வாழ வேண்டும். இதனை நோக்கிய எம் பயணத்தில் சமூக விடுதலையை விரும்பும் அனைவரும் கைகோர்ப்பது காலத்தின் கட்டாய மாகும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பாரம்பரியம், மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசிய இவர் இப்போது நவபாரம்பரியத்துக்குள் புகுந்துள்ள நிலையில் தனது நடனங்களை மறைக்க மக்கள் மத்தியில் தோன்றி தன்னை வேறு விதமாக அறிமுகப்படுத்த முற் படுகிறார்.

31.12.2011 நவபாரம்பரியம்

2012 புதுவருடத்தை வரவேற்கும் வகையில் நள்ளிரவில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் இப்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சராகஉள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தனது பிரத்தியேக செயலாளருடன் நடனமாடி அசத்தினார். இது மட்டுமல்ல அண்மையில் அமைச்சர் மில்ரோய்வீட்டில் நடைபெற்ற நிகழ்விலும் கருணா கலந்துகொண்டு தனக்குரியதான நடனத்தை ஆடினார். அடிக்கடி வெளிநாடு செல்லும்போதும் இவர் தனது களிப்புக்குக் குறைவைப்பதேயில்லை. இப்போது கண்டவர்களுடனும் கட்டிப்பிடி யாட்டம் போடுகிறார் அம்மான்.

10.01.2012 பாரம்பரியம்

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்தம் நாம் சிறு பராயத்தில் கண்ட பாரம்பரியங்கள் பழக்க வழக்கங்களைக்கூட இன்று மறக்க வைத்திருக்கிறது என மட்டக்களப்பு, சந்திவெளியிலுள்ள வேல்தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கருத்தை வெளியிட்டார்.

முன்பெல்லாம் தென்னை வீட்டில் பாளை போட்டுவிட்டதென்றால் அதனை ""ஒரு பெண் வயதுக்கு வந்த சிறப்பான தினம்'' என்று கொண்டாடுவார்கள். ஆனால் அவற்றினையெல்லாம் தற்போதுள்ளவர்கள் மறந்துவிட்டனர் என்றும் அவரது உரை அமைந்திருந்தது.

கருணாவின் புதிய ஞானம் எதைச் சொல்கிறது? சுபோகத் திற்காக ஒரு இனத்தைக் காட்டிக் கொடுத்த மனிதர் இன்று நியாயங்கள் பற்றியும் பாரம் பரியங்கள் பற்றியும் பேசுவது எந்த அளவில் ஏற்றுக்கொள்ளத் தக்கது? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியாது.

மறுபுறத்தில் இருப்பிடமற்ற மக்களும், ஒருநாளில் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே அல்லல்படும் மக்களும் இந்த நாட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு பசிபோக்க யாருமற்ற நிலையில் நாணற்புற்கள் மக்களின் மூக்குக்குள் நுழைவது புதிய அரசியலாகியுள்ளது.

நடப்பவற்றையும், நடக்க இருப்பவைபற்றியும் பேசுவதுகூட அர்த்தமற்றதாகிவிடுமளவுக்கு மனிதர்களின் சஞ்சரிப்பு தோன்றி யுள்ளது. எல்லாம் ""ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி'' கதையாகவே நிகழ்கிறது. கலிகாலத்தில் யார் என்ன செய்து விடமுடியும்???


நன்றி். உதயன் சூரியகாந்தி(15.01.2012)