""ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம்.'' "நாளைக்குப் பாற்கஞ்சி...''
""சும்மா போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.''
"இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே''
முருகேசனின் கனவு மழையோடு கரைந்துபோக ராமு ஏதுமறியாதவனாய் தன் விருப்பத்தையே கேட்டுக்கொண்டு இருந்தான்.