http://www.w3.org/TR/2002/REC-xhtml1-20020801/xhtml1-diff.html

hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh

Sunday, January 22, 2012

இதுவும் அபிவிருத்தி தான்


தென் இலங்கையில் அபிவிருத் திப் பணிகள் இப்போது துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பகுதிகளின் அபிவிருத்திக்கு அரசி யல்வாதிகள் கூடுதல் அக்கறை காட்டிவருகின்றனர்.
இந்த அபிவிருத்தி ஆர்வம் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் போரின் பின்னரான மீள்கட்டுமான முயற்சியாகவே மேற்கொள்ளப்படுகின்றன. உண்மையில் இந்த இரண்டு மாகாணங்களும் போரினால் மிகவும் @மாச மாகப் பாதிக்கப்பட்டவை. பெரும்பாலான பகுதிகள் அன்றும் சரி இன்றும் சரி மிகவும் வறிய பிரதேசங்களாகவே, அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதிகளாகவே காணப்படுகின்றன.
அரசியல் நோக்கங்களுக்காக வெளித்தெரியும் வகையிலான அபிவிருத்திப் பணிகள் வடக்கில் அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன. உள்ளூர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அபிவிருத்திப் பணிகள் உதவுவதாகத் தெரியவில்லை.
யாழ்ப்பாணத்தில் பருவமழைக்குப் பின்னர் பெரும்பலான வீதிகள் குன்றும் குழியுமாக மாறிவிட்டன. பராமரிப்பின்மையால் அவை நாளாந்தம் மேலும் சேதமடைந்தே வருகின்றன. பழைய வீதிகள் புனரமைக்கப்படா மலும் மணற்பாதைகள் தார் இடப் படாமலும் காணப்படுகின்றன. அதிகளவான மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கேஇவ்வாறான நிலை தோன்றியுள்ளது.
இதுபோலவே வன்னியிலும் நீண்ட காலமாக வீதிகள் புனரமைக் கப்படாமல் காணப்படுகின்றன. யுத்தம் காரணமாக அந்தப் பகுதியில் அபிவிருத்திப் பணிகள் முடங்கிப் போயிருந்தாலும் இப்போது அந்தப் பிரச்சினை இல்லை. ஆனாலும் அபி விருத்திக்கான சாத்தியங்களும், நிதி ஒதுக்கங்களும், முன்னுரிமைப்படுத்த லும் இந்தப் பகுதிக்கு குறைந் தளவே வழங்கப்படுகின்றன. இதனால் மக்கள் தமது அடிப்படைத் தேவைகள் முதல் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கு நாளுக்கு நாள் வெவ்வேறு வகையாக நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இடங்களுக்கிடையேயான தூரம் அதிகமாகவும் சேவை மையங்கள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகியிருப்பதாலும் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்யுள்ளது.
ஆனாலும் அதற்கான வீதி அபிவிருத்தி, போக்குவரத்து வசதி அவர்களுக்கு போதுமானதாக இல்லை. மழைக்காலங்களில் வெள்ளக் காடாக மாறும் வீதிகள் வெயில் காலங்களில் புழுதி பாதைகளாக மாறி வருகின்றன.
இதனால் அவர்கள் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் போவதுடன் உடல் உபாதையைத் தினமும் வளர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.
இத்தகைய அபிவிருத்தியின் மந்தநிலை பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களில் வேலாகப் பாய்ந்து இன்னும் வேதனைப்படுத்தியே நிற்கின்றது.

நன்றி உதயன்-சூரியகாந்தி (22.01.2012) *

0 comments: