கார்மேகம் சூழ்ந்துவர
கார்த்திகைப் பூவெடுத்து
பார்போற்றும் மறவரே !
எம்மினம் வாழவென்று
தம்முயிர் ஈந்திட்ட
அம்பர மறவர்களே !
கொல்குறிகளுக்கஞ்சாது
பல்களமாடி மடிந்திட்ட
வல்லமையாயுதங்களே !
தேசம் காக்கவென்று
நேசப்படைசேர்ந்து
பாசந்துறந்திட்ட வீரர்களே !
பகைஜென்மப் படைகள்
வகையின்றிக் குவிந்திருக்க
சபைபோற்றும் மறவரே !
எத்தடை வரினும்
அத்தடையகற்றி
நித்தமும் நாம் - உமை
அஞ்சலிப்போம்!
ஈழம் எம் தேசம்
ஈந்தோருயிர் எம் சுவாசம்
ஈகைபோற்றுதல் எம் கடமை
ஈடேற்றுவேம் இவையனைத்தும்!
இது உறுதியென்று இந்நாளில்
சபதமெடுக்கிறோம்!
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக