வியாழன், நவம்பர் 27, 2014

ஈகை போற்றுதல்




கார்மேகம் சூழ்ந்துவர
கார்த்திகைப் பூவெடுத்து
பார்போற்றும் மறவரே !

எம்மினம் வாழவென்று
தம்முயிர் ஈந்திட்ட
அம்பர மறவர்களே !

கொல்குறிகளுக்கஞ்சாது
பல்களமாடி மடிந்திட்ட
வல்லமையாயுதங்களே !


தேசம் காக்கவென்று
நேசப்படைசேர்ந்து
பாசந்துறந்திட்ட வீரர்களே !

பகைஜென்மப் படைகள்
வகையின்றிக் குவிந்திருக்க
சபைபோற்றும் மறவரே !

எத்தடை வரினும்
அத்தடையகற்றி
நித்தமும் நாம் - உமை
அஞ்சலிப்போம்!

ஈழம் எம் தேசம்
ஈந்தோருயிர் எம் சுவாசம்
ஈகைபோற்றுதல் எம் கடமை
ஈடேற்றுவேம் இவையனைத்தும்!

இது உறுதியென்று இந்நாளில்
சபதமெடுக்கிறோம்!

Post Comment

கருத்துகள் இல்லை: