வியாழன், நவம்பர் 27, 2014

ஈகை போற்றுதல்




கார்மேகம் சூழ்ந்துவர
கார்த்திகைப் பூவெடுத்து
பார்போற்றும் மறவரே !

எம்மினம் வாழவென்று
தம்முயிர் ஈந்திட்ட
அம்பர மறவர்களே !

கொல்குறிகளுக்கஞ்சாது
பல்களமாடி மடிந்திட்ட
வல்லமையாயுதங்களே !

சனி, அக்டோபர் 18, 2014

முன்னாள் போராளிகளின் திடீர் சந்திப்பு!

காலம்: 18.10.2014
நேரம்: காலை 09.08
இடம்: பயணிகள் பஸ்

யாழ்ப்பாணம் நோக்கி அந்த பஸ் பயணத்தை தொடங்கியது. ஐந்து நிமிடங்களில் தாய், தந்தை, அவர்களின் மகன் என மூவர் அந்த பஸ்ஸில் ஏறினர். தனது வலது கையை மணிக்கட்டுக்கு சற்று மேலாக இழந்த இளைஞரும் அடுத்த தரிப்பில் ஏறினார்.

பஸ்ஸின் முன் இருக்கையில் அமர்ந்த அந்த இளைஞரை நோக்கி டேய்! என்று ஒரு குரல்.

புதன், செப்டம்பர் 10, 2014

அம்மாவின் மத்து!



கரு நிறத்தில்
வயதே தெரியாத மத்து!

உறிமேலே வாய் அகன்ற பானை
அதனுள் நேற்றயபால் தயிராய்!

இன்றும் காலை கறந்தபால்
காச்சி தேநீருக்கு செலவளிய
எஞ்சியவை ஆறியதும்
புளியிட்டு மூடப்படுகின்றன தயிருக்காய்!

வியாழன், ஜூலை 24, 2014

கண்துடைக்க வல்லவர் மஹிந்த!



இலங்கையில் இடம்பெற்ற மிகமோசமான படுகொலைகள்,காணாமற்போதல் சம்பவங்களைக் கொண்ட 19 முக்கிய விடயங்களை விசாரிக்க குழு ஒன்றை( "உடலகம ஆணைக்குழு" ) உருவாக்கியிருந்தார் ஜனாதிபதி.

ஞாயிறு, மே 18, 2014

மாண்டோருக்கஞ்சலி



மாண்டோருக்கஞ்சலி ஆன்றோர் செலுத்துகையில்
பூண்டோடு தடையறிவித்தது படைக்கூட்டம்
ஒன்றன்று பலர்கூடி தொழ ஒருபோதும் விடோம்
என்று இழுத்துமூடிற்று பல்கலையை

செவ்வாய், மார்ச் 04, 2014

மனித படுகொலையும் 12 ஆயிரம் தோட்டாக்களும்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது. சிறுபான்மை இனமான உள்ள தமிழர்களை இலங்கை அரசு அடக்கி ஒடுக்கி வருவது மட்டுமன்றி அவர்கள் மீது மனித குலத்திற்குவன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது.

புதன், பிப்ரவரி 05, 2014

நீரோடும் வாய்க்கால் வழிபோகும் வாதம்


அண்மைக் காலமாக ஏற்பட்டிருக்கும் இனந்தெரியாத முரண்பாடு ஒன்றில் தண்ணீர் சம்பந்தப்பட்டிருக்கிறது.  இரண்டு மாவட்டங்களுக்கிடையில் அதனைப் பகிர்வதில்  அந்த முரண்பாடு தோன்றியிருக்கிறது.

வடக்கு,  கிழக்கில் போருக்குப் பின்னரான நிலைமை, அரசியல் மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பமான தன்மை  போன்ற காரணிகள் தமிழ் மக்களி டையே  முரண்பாடுகளைத் தோற்று விக்கும் மாயையை ஏற்படுத்தியிருக்கி றது.