ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

வீடு வரும்வரை காய்ந்திருக்கும் மக்கள்


அன்று பலபேருக்கு நல்ல நாளாக இருக்க வேண்டும். ஏதோமுண்டியடித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் பின்னால் கூடிநின்று ஏதேதோபேசிக்கொண்டும் இருந்தார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பின்தங்கிய கிராமம் அது, இயற்கைத் தோற்றமுடைய அந்தக் கிராமத்தில் உட்கட்டமைப்பு வதிகள் போதுமானதாக இல்லை. கிளிநொச்சி நகரத்திலிருந்து மேற்குப் பக்கமாக கிட்டத்தட்ட 20 25 கிலோமீற்றர் பயணித்தால் சென்றடையக் கூடிய கிராமத்தில் 420இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

வீதிப்போக்குவரத்துச் ரியாக முழுமைப்படுத்தப்பட இல்லை. மின்சார வதியில்லை. சொல்லப் போனால், குக்கிராமம் போலத்தான் அது இருக்கிறது.
னக்கூட்டம் ஏன் இவ்வாறு கூடியிருக்கிறது? என்று பார்ப்பதற்கான ஆர்வம் மேலெழுந்ததால் அருகில் சென்று பார்த்தேன். அங்கு, கொஞ் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒட்டப்பட்டிருந்தது. தங்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளதா? என்ற ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் அதை நான் பார்த்தேன்.
93 பெயர்கள் அந்தப் பட்டியலில் அடக்கப்பட்டிருந்தன. இந்தத் தடவை அர உத்தியோகத்தர்களுக்கும் அதில் இடம் வழங்கப்பட்டிருந்தது.
ஏற்கனவே இந்தக் கிராமத்தில் 195 குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுக் கணிமானவை கட்டிமுடிக்கப்பட்டன. பெருமளவில் வழங்கப்பட்ட அளவுத் திட்டங்களுக்கு அப்பால் பயனாளர்களும் தங்கள் பணத்தைச் சேர்த்து 3 அறைகள், ஒரு கோல், ஒரு மையலறை என்ற அமைப்பில் ஒரு உருப்படியான வீட்டைக் கட்டிமுடித்தார்கள்.
இந்த வீட்டுத்திட்டத்துக்காக வீட்டு உரிமையாளரின் பெயரில் காணி உறுதி அல்லது உரிமைப் பத்திரம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டதால் இத்திட்டத்திலிருந்து பலர் விலக்கப்பட வேண்டியவர்கள் ஆயினர்.
இதனால் அடுத்த கட்டத் திட்டத்தில் தமக்கு விரைவாக வீட்டுத்திட்டம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு அதிகாரிகளின் வரவையும் இந்த பெயர்ப் பட்டியலின் வரவையும் எதிர்பார்த்தபடியேபல மாதங்கள் கழிந்தன. இந்தக் கிராமத்தில் 2010 ஆரம்பத்தில் மீள்குடியமர்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இரண்டு வருடங்கள் ஆனபோதும் மீதிப்பேருக்கு வீட்டுத்திட்டம் வந்துசேரவில்லை. (இப்போதும் பெயர்ப்பட்டியல்)
வீட்டுத்திட்டம் பற்றி அதிகாரிகளிடம் அந்தக் குடும்பங்கள் கேட்டபோது, கிளிநொச்சி மாவட்டத்தில் கட்டங்கட்டமாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தில் குறித்த கிராமம் முதற்கட்டமான அதிக எண்ணிக்கையான வீடுகளைப் பெற்றுள்ளது. எனவே முதல் சுற்றில் எல்லாக் கிராமங்களுக்கும் திட்டம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னரேஇரண்டாம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். அப்போது உங்களுக்கும் வீடு கிடைத்துவிடும் என்ற பதில் கிடைத்தது.
நீண்டநாள் காத்திருப்புக்களின் மத்தியில் அந்த னக்கூட்டம் கூடியிருந்த நாள் அதில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா எனத் தேடிய நாள் கடந்தவருடம் 12ஆம் மாதம் 15ஆம் திகதியாக இருந்தது.
ஓரளவுக்கு மனத்திருப்தி, வீட்டுத்திட்டம் வந்துவிடும் என்ற பெருமிதம் அவர்கள் மத்தியில் புரையோடியிருந்தது.
இன்று 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அதுபற்றி எந்தவிதமான அடுத்தகட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
அந்த மக்கள் நாளை கூட்டம் கூடுவார்கள். திட்டம் பற்றி அறிவுறுத்துவதற்கு அதிகாரிகள் வருவார்கள் என்று வழி மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
ஆனால் பெயர்விவரம் ஒட்டப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. யாரும் இதுவரை திரும்பிக்கூடப் பார்த்ததாகத் தெரியவில்லை. இப்போது அந்த ஊருக்குப் போனால் அந்தப் பெயர்ப் பட்டியலையும் காணவில்லை.
மீள்குடியமர்த்தப்பட்டு இரண்டு வருடங்கள் தற்காலிக குடிசைகளில் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்வைக் கழித்துவிட்ட அந்த மக்கள் இப்போது ஒட்டப்பட்ட பெயர் விவரங்களையும் மறந்துவிட்டார்கள்.
யாராவது அதிகாரிகள் வந்தால் எங்களுக்கு வீட்டுத்திட்டம் வருமா? என்று கேட்டால் வந்துவிடும் என்றேபதில் கிடைக்கும். இரண்டு வருடங்களாக குடிசைகளில் இருந்தபடியேவீட்டுத்திட்டம் பற்றியும் கல்வீட்டில் எங்கள் புது வாழ்க்கை பற்றியும் கனவு கண்டபடியேஇருக்கின்றோம். இவற்றுக்கு உருப்படியான பதில் கிடைப்பதோஎங்கள் வாழ்க்கைக்கு விமோனம் கிடைப்பதோஇப்போதைக்கு இல்லையென்றேஎமக்குத் தோன்றுகின்றது.
சாதாரண மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அத்தியாவசியப் பொருள்கள் நாளுக்கு நாள் விலை@யறிக்கொண்டேஇருக்கின்றன. இந்த நெருக்கடிகளுக்குக் குடிசைகளில் இருந்தபடியேநாங்கள் முகங்கொடுக்கின்றோம். இதை பொறுப்பான எவரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை என்கின்றனர் அந்தக் கிராமத்து மக்கள்.
வன்னியில் பல கிராமங்கள் இந்தக் கிராமத்தைப் போவேதான் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. ஆனால் அதற்கான தீர்வு, மக்களின் தேவைகள் பற்றி எவரும் சிந்திப்பதே கிடையாது.
பல கிராமங்களுக்கு முதற் கட்டமாக "சாம்பிளுக்கு' கொஞ்க் கொஞ் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. பரவலாக மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களில் இவ்வாறு கட்டிக் கொடுக்கப்பட்டதால் பல பேருக்குக் கணக்குக் காட்ட நல்ல வதியாகவும் இருக்கிறது.
கிராம எண்ணிக்கை அடிப்படையில் எல்லாக் கிராமங்களுக்கும் இவை அமைந்துவிட்டதால் வெளியிடங்களில் இருந்து வருவோருக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்கும் பட்டியலைத் தூக்கிப் போட்டு வீராப்பும் பேசமுடிகிறது.
ஆனால் பத்தில் ஒன்றேநிறைவேறிய கதை வந்துபோகும் பல பேருக்கு தெரியவே தெரியாது. தெரிவிக்கவும் அனுமதியில்லை. தெரியப்படுத்தவும் அதிகாரம் இல்லை. அறிக்கைகளில் சோடிக்கப்படும் கதையாகவே வகையாகவே அபிவிருத்திகள் தொடர்கின்றன.
பாவம், அர நிர்வாகத்தில் வேலை செய்பவர்கள். அவர்கள் தான் அவலப்படும் மக்களால் தினமும் ஏச்சுக் கேட்கும் பாவிகளாக உள்ளனர். அவர்கள் என்னதான் செய்துவிட முடியும். மேலதிகாரிகள் பணிப்பவற்றையும் சொல்பவற்றையும் கேட்டுத் தலையசைப்பதே அவர்களின் பணியாக உள்ளது.
எது எப்படியிருந்தபோதிலும் மக்களுக்கு ஆசைகளைத் தூண்டிவிட்டு அவர்களது தேவைகளைப் பூர்த்திசெய்யாது அவர்களது கேள்விகளுக்குப் பதில் கூறாது தட்டிக்கழிப்பது அரசின் மற்றுமொரு அமந்தப் போக்காக உள்ளது.
நாளுக்குநாள் அதிகரித்துவரும் வாழ்க்கைச் சுமை அதை ஈடு செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் வால்கள் என்பவற்றுக்கு மத்தியில் அரசு இதுவரையில் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் பொறுப்புக் கூறும் தன்மையிலிருந்தும் கடமையிலிருந்தும் விலகியிருப்பது எதிர்காலத்தில் அந்த மக்களின் வாழ்க்கையையேகேள்விக்குறியாக்கிவிடும்.
இன்றுவரும் நாளைவரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உருப்படியாக என்று வரும் என்பதையாவது சொல்லிவிட்டால் அவர்கள் தம்பாட்டில் இருந்துவிடுவார்கள். யுத்தத்தின்போது இருந்த எல்லாவற்றையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு இதிலென்ன அவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கப் போகின்றது.
எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் அரசிடமிருந்து ஏதாவது கிள்ளித் தெளிக்கப்பட்டால் அது மட்டுமே அவர்களுக்குச் சொத்தாக மாறும். கிள்ளல்கள் தொடரும் நிலையில் எப்போதுதான் தெளிப்பார்களோ?
அடிபட்டு நின்று தங்கள் பெயர்களை வாசித்த அந்தக் கூட்டத்தினர் இப்போது அந்தப் பக்கமே வருவதில்லை. மன உளைச்லில் தங்கள் வேலைகளைப் பார்த்தபடி வீடுகளுக்குள்ளேமுடங்கிக் கிடக்கின்றனர். அரசு தமக்கான கடமைகளைச் செய்துகொண்டேஇருக்கின்றது. மக்களுக்காக அல்ல தமக்காகவே. *
நன்றி உதயன்-சூரியகாந்தி (19.02.2012)

Post Comment

கருத்துகள் இல்லை: