வியாழன், மே 07, 2009

சொல்லும் வார்த்தை



மாரிக்காலமழை சொன்னது
சுட்டு பொசுங்கும் தேசத்தை
மீளவும் உயிர் கொடுக்க
முடியவில்லை என்று

நான்புகமுன்பே அங்கு
ஒளிகள் பிறந்துவிட்டன
கூரைகளில் காலை
கதிரவன் சொன்னது

தேய்ந்துபோகமுன் முழுமையாய்;
பார்த்தேன் தேசத்தை நேற்று
தாங்கமுடியவில்லை சுடுகாடான
பூமியை பார்க்க தேய்ந்துவிட்டேன்
பிறையாய் இன்று நிலா சொல்கிறது.

கடலலையும் அமைதியாகிவிட்டது
மனிதர்களெல்லாம் நிமிர்நததால்
பிணமாகி நிலத்தினில் சுருள
எனக்கேன் எழுச்சி என்று

மனிதர்கள் சொன்னார்கள்
நாங்கள் இருக்கிறோம் எங்களிடம்
அங்கங்கள் இல்லை இரும்பு
கம்பிகளும் மரத்தடிகளும்
பிளாஸ்ரிக் சேர்வைகளும் எமக்கு
அங்கங்களானதால் நோக்களுமில்லை
வேதனைகளுமில்லை என்று

Post Comment

கருத்துகள் இல்லை: