
பிரிக்கப்பட்ட உறவுகள்
பற்றி எண்ணியபடி
பொழுதுகள் கழிக்கப்பட்டன
உறவுகள் பலவாறு!
தாயென்றும் தந்தையென்றும்
அண்ணனென்றும் தம்பியென்றும்
அக்கா தங்கை அயலவர் நண்பர்
பிரிவுகள் நிரந்தரமாயும் வந்துவிட்டன.
கடல் கடந்த நாடுகள் சேர்ந்த
கூட்டுக்களும் இரும்பு
பீரங்கிகளும் ஒன்றாகி எம்
உறவுகளின் உயிர்களை
தட்டிப் பறித்துக்கொள்கிறன.
ஒரு பெரும் எதிர்பார்ப்புடன்
என்முன் பல மனிதர்கள்
அதில்நானும் பிரிவல்ல
தினமும் பத்திரிகை வாசலில்
எப்பவோ முடிந்தகாரியம் ஒரு
பொல்லாப்புமில்லை முழுவதும்
உண்மை என்ற சுவாமிகள் தரிசனம்
ஒரு பெரும் எதிர்பார்ப்புடன் மனிதர்கள்
இப்போது சுவாமிகள் நாங்களே!
என்முன் நிற்கும் பல மனங்கள்
காயப்பட்டு விட்டன- பிரிந்தும்
காயமாக்கப்பட்டும் துடிக்கும் எம்
உறவுகளின குரலால்
காயத்துக்கு மருந்தில்லை புண்
பட்ட மனங்களுக்கு வாழ்வில்லை
அழுகை எமக்கு வரமானது
என்முன் நிற்கும் பல மனங்கள்
காயப்பட்டு விட்டன.
Tweet | ||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக