வெள்ளி, பிப்ரவரி 20, 2009

வெளிச்சத்தின் கனவால் சிதறிப்போன எண்ணங்கள்.


வழமைபோல் எனது அறையில் நான்மட்டுமே. ஏதோ பெரிய வேலைமுடித்துவிட்டு வீடுதிரும்பியவன் போல களைத்த முகத்துடன் சேட்டைக்கழற்றிவிட்டு கட்டிலில் சாய்ந்தேன். மிளிர்ந்துகொண்டிருந்த ரீயூப்லைற்றைச்சுற்றி,
விடியல் இதுதான் என்றெண்ணி தமது உல்லாசமான இறக்கைகளுடன் விட்டில் பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. ஆதிசயக்கண்களுடன், அவர்களின் வாழ்வுபற்றிய கனவுடன் நான். காரணம் எனக்கொரு நண்பன் இருக்கின்றான். அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம். நண்பன் என்கிறேன் அவனுக்கு விட்டில்கள் என்றால் பிரியம் என்கிறேன் என்று குழம்பலாம், ஆனால் எனது நண்பன் யாருமல்ல ஐந்தறிவுள்ள நற்குணமுள்ள வீட்டுப்பல்லிதான். அவனுக்கும் எனக்குமுள்ள உறவு, நெருக்கம் பற்றி கேள்விகள் எழலாம், பெரிதாக ஏதுமில்லை. நான் நினைப்பதை சரிவராது என்று முற்கூட்டியே சொல்லிவிடும் திறமையால் அவ்வளவு உறவு.
இப்போதெல்லாம்நான்நினைப்பதொன்றுநடப்பதுவேறொன்று.இதுஎனக்கானதுமட்டுமல்லதமிழ்மக்களுக்கும்.நண்பனைபகலில்சந்தித்துக்கொள்வதுகுறைவு. இரவில்த்தான்வருவான்சாப்பாட்டிற்கோ, என்னுடன்கதைக்க வோதெரியவில்லை.நான்நினைப்பதுஇரண்டுநோக்கத்துக்காகவும்வருகின்றானென்று.
ஆதலால்அவனுக்காகமின்விளக்கைஅணைக்காமல்காத்திருப்பேன்.இவ்வளவிற்குள்எனதுநண்பன்ஊனமானவன்தனதுவாலைஎதன்காரணமாகவோஇழந்திருக்கிறான்.ஆனால்இதுவரைக்கும்அந்தநிலைபற்றிநான்கேட்கவுமில்லை,அவன்சொல்லவுமில்லை.இப்போதெல்லாம்முன்அனுபவம்இசம்பவம்என்றுஎதையும்யாருடனும்கேடுப்பழகிக்கொள்ளமுடியாது.அப்படிசற்று இறங்கிப்பழகினால்ஆபத்து. அதுவும்நெருக்கடிதான்.
அதனால்அவனதுஊனத்தைப்பற்றிநான்பொருட்படுத்தியதில்லை.தனதுஉயிர்வாழ்விற்காகவெனஎனதுஅறையைபயன்படுத்துகின்றானோ,அல்லதுநான்தனியேஇருக்கின்றேன்என்றுபார்க்கின்றானோதெரியவில்லை.வருவதும்போவதும்வழமையாகிவிட்டது.

இப்போதெல்லாம்ஆபத்துக்களைநாங்கள்தேடிச்செல்லத்தேவையில்லைஅதுவேபட்டங்களுடனும்பரிசுகளுடனும்எம்மைத்தேடிவரும்.நண்பன்அப்படிப்பட்டவனில்லை. பாவம்ஐந்தறிவுமட்டுமல்ல, இயலாதவனும்கூட. நம்பிக்கைபற்றிஎப்படிநியாயப்படுத்துவது. அதுதான்ஆபத்தானதே. விட்டில்கள்தம்வாழ்வைஅர்ப்பணிக்கஅங்குவருகின்றார்களோ,மாறாகசிறுபொழுதேனும்ஒளியில்வாழ்ந்துவிட்டுமற்றவர்வாழ்விற்குவழிசமைக்கிறார்களோதினமும்மாறிமாறிஇவைநடந்தேறுகின்றன.வருகிறார்கள்நண்பனின்பசியும்போகின்றது.த்தனையோஉயிர்கள்விளக்கொளியையும்காணமுடியாமல்பேரிரைச்சல்களையும்,வெடிப்பொலிகளையும் வாழ்வின் இராகமாக ஏற்று எண்ணாத் தேவைகளை பூர்த்திசெய்யமுடியாமல்வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இயலாத நண்பனையும், அவனது வீரத்தையும் பரீட்சிக்க பலவிட்டில்கள் தமது சாகசங்களைக் காட்டபாவம் வாலையிழந்தவன் தன்பரீட்சியத்தால்அவர்களை மடக்குவதும் என்கண்களில் படும். எதுவானாலும் விட்டில்கள் சிறிதுகாலம்தான் வாழ்பவை. விட்டிலுக்கு பறக்க இருக்கும் சுதந்திரம் பல்லிக்கில்லை. வாலை இழந்த நண்பன் கஸ்ரப்பட்டு இடத்திற்கிடம் மாறி இயன்றளவு முயற்சியால் தன்இலக்கைஅடைந்துவிடுவான். “கடினஉழைப்பும்தளராமனமும்உயிர்வாழ்வதற்குமட்டுமல்லஇஉயிரைக்கொடுக்கவும்தேவைஉண்மைதான்.இன்றுங்கூட எம்மக்களின் வாழ்வு இந்தநிலையில்த்தான். பல்லிவேட்டையில் தோற்றதில்லை…….பலர் பல்லியைப் பற்றிபலகதைபேசுவார்கள். பல்லிசொற்பலன், உச்சத்துப்பல்லி அச்சமில்லை,பக்கத்துப்பல்லிபயமில்லை. இதையும்விடதிருப்பி ஏசுவோரும்கூட, இவையெல்லாம் முன்னோர்களின் மூடநம்பிக்கை. இதை இப்பவும் ஆதரிப்போரும் உளர். இருந்தும் வெளியில் நான்நாலும்தெரிந்தவன், நவீனத்துவம் அடைந்தவன் என்பதையும் மறுப்பதில்லை. எங்காவது பல்லி சொல்லிக் கேட்டால் உடனே நிலத்தில் சுண்டுவதும், இப்போ என்னநினைத்தனான் அறுந்தபல்லி குறுக்க பாயுது என்று தடுமாறுவர். ஆவ்வளவிற்கு பல்லி என்னதான் சொன்னது மரபை ஆதரிப்போர் இதுபற்றி என்னசொல்கின்றனரோ? சிலமனிதர்கள் கதைப்பதே பல்லிபோன்றுதான் என்பர். பாவம்ந்தளவிற்கு என்னதான் சொல்கின்றது. பல்லியின் மொழியை யார்படித்தார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக நம்பிக்கை அற்றவரின் தேடல் விளக்கம்தான் இவை என்று சொல்ல முடியும். அன்பு, அறிவு,அறம் அனைத்தும் தன்னிடம் இருக்கையில் அதைஅறியாது வெளியில் தேடுவது இன்று ஒரு போதும் ஏற்கமுடியாததே. நம்பிக்கையின் துணையுடன்தான் இருப்பு உறுதிப்படுத்தப்படுகையில் மூடக்கொள்கை அதைக்கூறுபோட விளைகின்றது.சாதாரணமாக நள்ளிரவில் அவன் எனக்குநன்றி சொல்லிவிட்டுப் போய்விடுவான். எனக்கு அப்போதும் கூடதூக்கம் வரவில்லை. மாடிக் கட்டிடங்களில் வசித்தாலும் புழுதிநிலத்தின் வாசனையும், பூத்துக் குலுங்கும் வயல்நிலங்களும் மனதுக்குள் வந்து வண்ணத்திரையில் கோலமாய் தெரிகின்றன. இப்போ புழுதிகிளம்பும்படியாகவும், புகைமூடும்படியாகவும் பாலைவனமாகி, அன்றைய கரிகால சோழனும் கலிங்கத்துப் பரணியுமாகிவருகிறது எமதுநிலம். எப்படிதூக்கம்வரும். ல்லாமே போலிஎன்று தெரிந்த பிறகும் வாழ்வை வெறுக்கமனம் தயாரில்லை. ஏனென்றால் நம்பிக்கையின் அத்திவாரம் அவ்வளவு உரமாக இருக்கின்றது.மனதுக்கு சஞ்சலமாக இருக்கும்போது தூக்கம் எப்படிவரும்.பேனாக்கள், பொத்தகங்கள் எல்லாம் வெறும் சடப்பொருட்களாகவே இன்று. எதிலும் உயிரைக்காண முடியாது. காரணம் அதைவிட மேலான கருவிகள்மலிந்துகிடக்கின்றன. கைகள் எதற்கு நகர்ந்தாலும் நில்என்று தடுக்கபலகைகள். பேரம்பேசவாவது ஒருவர் முனைந்தால் பெயரைகூட விட்டுவைக்க முடியாதாம். மனம் திறந்து மற்றவர்களிடம் பேசுவதென்பது இன்றுசுலபமானதல்ல. போகுமிடமெல்லாம் படுகொலைகள், சித்திரவதைகள் உரிமைமீறல்கள் என்று தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. தமிழினப் படுகொலைகள் நாடுகடந்து பேசப்பட்டாலும் வாயளவிலேயே நின்றுவிடுகின்றன. அந்நியநாட்டுப் படைகளை தமிழன் என்றுவருணித்த சிங்களதேசம், உண்மைத் தமிழனை எப்படிஅணுகும்? புறக்கணிப்புக்கள் இருக்கும்போது, புறகணிப்புக்கள் எப்படி மாறப்போகின்றன? பொறுமை இருப்பை இழக்கவைத்தது. தினமும் ஒருவிடியல் கனவுடன் எம் இருப்பு தொடர்கின்றது.

Post Comment

கருத்துகள் இல்லை: